Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று.. காவல்நிலையம் மூடல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று.. காவல்நிலையம் மூடல்..

by ஆசிரியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் பூட்டப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காவலர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொரோனா தொற்று பிற காவலர்களுக்கு பரவாமல் இருக்க மம்சாபுரம் காவல் நிலையமானது பூட்டப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் .மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!