11
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, அயோத்தியாபுரி பட்டணம், அம்மன் கோவில் தெருவில் ஆழ்குழாய் தண்ணீர் நீரேற்று சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இது நீண்ட நாட்களாக உடைந்து காணப்படுவதால் அதன் முழுக் கொள்ளளவுக்கு ஏற்றவாறு நீரேற்ற முடிவதில்லை.
இதனால் தண்ணீர் அதிகமாக வீணாகி கொண்டிருக்கிறது. எனவே இந்த தொட்டி உடைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.