மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களின் புகார்கள் மற்றும் முக்கிய தகவல்களை குறுச்செய்தியாகவோ, புகைப்படங்களாகவோ அல்லது வீடியோவாக, கீழ்க்கண்ட மதுரை மாநகர வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு அனுப்பலாம்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களின் புகார்கள் மற்றும் முக்கிய தகவல்களை குறுச்செய்தியாகவோ, புகைப்படங்களாகவோ அல்லது வீடியோவாக, கீழ்க்கண்ட மதுரை மாநகர வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு அனுப்பலாம்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி,செங்கோட்டை, கடையநல்லூர்,சேர்ந்தமரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று 14.10.19 மாலையில் இருந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்வதால் இன்று காலை குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி விழுவதால் பாதுகாப்பு காரணம் கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க காலையில் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடைவிதிக்கப்பட்டது.தற்போது தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் தற்போது தடை நீக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சில முக்கிய தகவல்கள்.இலங்கையில் நடைபெற்று வந்த பிரதமர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, இலங்கை மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்தல் வேண்டும் என்பதும் அவசியமாகின்றது.
ஜனாதிபதியாக பதவி வகிப்பவரே அரசின் தலைவராகவும், படைகளின் தலைவராகவும் இருத்தல் வேண்டும் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.இந்நிலையில், இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முறை அறிவிக்கப்பட்ட 1978ம் ஆண்டு முதல் இதுவரை 7 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள தேர்தல் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.அது தொடர்பான சில முக்கிய தகவல்கள்:
ஆட்சியிலுள்ள ஜனாதிபதி, ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு தேர்தல் இது.
இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்).
அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்).
இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது).
கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக பெண்ணொருவர் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (இறுதியாக, 1999ம் ஆண்டு தேர்தலில் பெண்கள் போட்டியிட்டனர்).
இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்).
ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.
நீளமான வாக்குச்சீட்டு கொண்ட தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் அதிகம்).
சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது தேர்தல். (இதற்கு முன்னர், தேர்தல் திணைக்களத்தின் கீழ் நடத்தப்பட்டன).
இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
“நாட்டை, ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு கொழும்பு தொகுதி கூட்டம், மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் கொழும்பு பொது நூலக கூடத்தில் நடைபெற்றது.
இதில், புதிய ஜனநாயக முன்னணியின் (ஐக்கிய தேசிய முன்னணி) ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ பேசியதாவது; “உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவேன். அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது.மக்கள் மத்தியில் சென்று அவர்களின் மனங்களை வென்று சேவையாற்றும் திறமை எமக்கு உண்டு. நாட்டை, ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் சென்ற ஏர் இந்தியா அலைன்ஸ் விமானம், யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இன்று 15.10.19 வெற்றிகரமாக தரையிறங்கியது. இலங்கையின் பலாலி விமான நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து வரும் 17ம் தேதி திறந்து வைக்கவுள்ளனர்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் ஏழு சேவைகளை நடத்துவதற்கு, ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் இன்று யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஏர் இந்தியா அலைன்ஸ் விமானம், அங்கு வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை, கட்டுப்பாட்டு கோபுரம் போன்றவைகளின் தரம் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.இதனிடையே, வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
“இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்று, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று (15ம் தேதி) பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சே பேசியதாவது;
“தேர்தலில் நான் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க மாட்டேன். ஆட்சி மாற்றத்தில், போர்க் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிப்போம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ராணுவத்திற்கு தான் தலைமை தாங்கவில்லை. இறுதிக்கட்ட போரின்போது, ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் உள்ள ஹனுமான் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அபயஹஸ்தல ஹனுமான் திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து ஹனுமானுக்கு நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச்சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் 5000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி விஜய் மருத்துவமணை நிர்வாகியும், பாஜக மாவட்டமருத்துவரணி தலைவருமான விஜய் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதனைதொடர்ந்து ஹனுமானுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி ஆறுமுகம். இவர் உசிலம்பட்டி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வரும் சூழலில் பணிக்கு விடுப்பு தெரிவித்துவிட்டு இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலிசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த போலிசார் நடத்திய விசாரனையில் ஆறுமுகத்திடம் அவரது மாமியார் சின்னத்தாய் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், நேற்று மாலை ஏற்பட்ட தகராறில் சின்னத்தாய் மருமகள் ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 -ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் ஆதனுர், கீழையூர், விருபாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆதனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தினமும் இரண்டு வேளையும் சுமார் 400 உறுப்பினர்களிடமிருந்து சுமார் 3000 லிட்டர் வரையில் உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1மாத காலமாக உற்பதி செய்த பாலை முழுமையாக கொள்முதல் செய்யாமல் 70 சதவீத பாலை மட்டும் கொள்முதல் செய்துகொண்டு மீதம் உள்ள பாலை திருப்பி கொடுத்து விடுவதால் உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பால்உற்பத்தியாளர்கள் சங்கசெயலாளர் மற்றும் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் நூறு சதவீத பாலை கொள்முதல் செய்ய சங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் பாலை முதலில் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்வதால் விடியற்காலை முதலே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்பு ஓருவரையொருவர் முண்டியடித்து கொண்டு பாலை வழங்கி வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஓன்றிணைந்து ஆதனுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரில் நூறு சதவீதம் பாலினை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திடீரென பாலை தரையில் கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இது சம்மந்தமாக கூட்டுறவு பால் சங்க அதிகாரிகளிடம் கேட்டதற்கு பாலை கொள்முதல் செய்ய போதியளவில் கேண்கள் இல்லை என்றும் உயரதிகாரிகள் பாலை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்றும் தேக்கநிலை உள்ளதாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்னர் என்று கூறினார்கள்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமைஆசிரியர்லெ.சொக்கலிங்கம்தலைமைதாங்கினார்.மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி ,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.அப்துல் காலம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எடுத்து சொல்லப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் அய்யப்பன்,வெங்கட்ராமன்,அஜய்பிரகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்து இருந்தார்.விழாவின் நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
அதிவேகம் மிகவும் ஆபத்தானது
மிதவேகம் மிக மிக நன்று
சாலை விதிகளை பின்பற்றுங்கள்
பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள்
விபத்தில்லா மதுரையை உருவாக்குங்கள்
மதுரை மாநகர காவல்துறை என்றென்றும் பொதுமக்களுக்கு சேவை செய்ய மட்டுமே காவல்துறை உங்கள் நண்பன் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைவராக நதி ஆற்றின் குறுக்கே, தேனி மாவட்டத்தில் 28 65 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் சோத்துப் பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து 15.10. 2019 முதல் 15.3.2020 வரையிலான முதல் போக பழைய நஞ்சை பாசன நிலங்களான 1825 ஏக்கருக்கும், புதிய புஞ்சை பாசன நிலங்களான 1040 ஏக்கருக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரை 62 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை 31 நாட்களுக்கு வினாடிக்கு 27கன அடி வீதமும் ஜனவரி 16 முதல் மார்ச் 15 வரை 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதமும் ஆக மொத்தம் 152 நாட்களுக்கு 360.46 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் .பல்லவி பல்தேவ் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் .செந்தில் அண்ணா,பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரித்தா, பொதுப்பணித் துறை (ம) நீர் வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தின் மாலா , பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் .ராஜகோபால் உட்பட பொதுப்பணித் துறையினர், வருவாய் துறையினர் , விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அணையின் நீர் இருப்பைப் பொறுத்து இதே போல் தண்ணீர் திறந்து விடப்படும். சோத்துப் பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் , தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர். அணையின் மொத்த நீர் மட்டம் 126.58 அடி ஆகும்.
.சாதிக் பாட்சா, நிருபர்தேனி மாவட்டம்.
வாணாபுரம் அருகே சின்னகல்லபாடியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நம்மியந்தல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்( 48)மேற்பார்வையாளராகவும், கீழ்அணைக்கரையை சேர்ந்த செல்வராஜ் (34) விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். விற்பனை முடிந்து இரவு 10 மணியளவில் விற்பனையான ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு கடையை மூடிவிட்டு புறப்பட்டனர்.முத்துக்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கடையை விட்டு வெளியே வரும்போது மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி பின்தொடர்ந்து வந்து உள்ளனர்.அப்போது மர்ம நபர்களில் ஒருவர் முத்துக்குமாரை கத்தியால் வெட்டி அவரது கையில் இருந்து பணப்பையை பறித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அருகில் இருந்த செல்வராஜ் முத்துக்குமாரை காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார். அப்போது மற்றவர்கள் செல்வராஜை கல்லால் தாக்கியுள்ளனர்.இதனையடுத்து மர்மநபர்கள் 3 பேரும் முத்துக்குமார் பையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இந்த சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மாலையில் கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மேலும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இக்கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுர்ணமியை யொட்டி காலை சாமி கும்பிட பக்தர்கள் சிலர் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் செங்கல் துகள்கள் சிதறி கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏணியில் ஏறி பார்த்தனர்.அப்போது கோவில் கோபுரம் மற்றும் கோபுர உச்சியில் இருந்த மண் கலசம் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. மேலும் கோபுரத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட பெரிய சுத்தியலையும் மர்ம நபர்கள் அங்கேயே விட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் மலை மீது சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கோவிலை பார்வையிட்டார்.இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் வந்தவாசி தேரடியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் வெண்குன்றம் கிராமமக்கள் வந்தவாசி- காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் வெண்குன்றம் பெட்ரோல் பங்க் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வந்தவாசி தெற்கு போலீசார் அவர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தவளகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அரிகரன் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகினறனர்.
திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரத்தில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக திருநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)காந்திமதி சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும்போலீசார் சந்தேகப்படும்படியான அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில் 5பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்ததாக தெரிகிறது .அவர்களிடம் போலீசார் விசாரணைசெய்தனர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல் தெரிவித்தாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்த தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.அதில் மதுரை எஸ்.எஸ் காலனி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பகுதிகளை கிளையாகவும், நெல்லையப்பபுரத்தை தலைமையிடமாகவும் சிலவீடுகளைவாடகை பிடித்து குடும்பம் நடத்தி வருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.இதில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இருந்து மதுரை பஸ் நிலையங்களில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஹைடெக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டில்விபச்சார விடுதி நடத்தியதாக மதுரையை சேர்ந்த தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தினர். உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இருந்து தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டி தலைமையில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் ரஞ்சித் தொகுதி பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலையில் காந்தி பிறந்த நாள் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தினர். இதில் கவுண்டன்பட்டி எஸ் நல்ல மலை நகர தலைவர் பாண்டியராஜன் ஒன்றிய தலைவர் தீபன் முத்தையா நிர்வாகிகள் சௌந்தர பாண்டி சின்னசாமி நீதி டான் முருகன் கலைச் செல்வன் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி மகாலட்சுமி ஆர எஸ் போஸ், நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை பேரையூர் ரோட்டில் முடிவுற்றது
மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை மதுரை மாநகர் எ.ஜி.ஆர் விளையாட்டு பந்தயங்கள் நடக்கும் அரங்கத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.சி.கா மதுரை 6-ம் அணி தளவாய் ஜெயச்சந்திரன் ,, த.சி.கா வீராபுரம் 3-ம் அணி தளவாய் .சம்பத்குமார் ,, த.சி.கா பழனி 16-ம் அணி தளவாய் அய்யாசாமி, த.சி.கா திருச்சி 1-ம் அணி தளவாய்.உமையாள், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் .சுகுமார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகள் 14.10.2019 முதல் 16.10.2019 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் நான்கு மண்டல காவல்துறையினர், ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகரை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மதுரை to மேலூர் நான்கு வழிச்சாலை, விவசாய கல்லூரி அருகே சாலையில் வந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி , ஓட்டுனர்களுக்கு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
கீழக்கரை வடக்குத்தெரு அல் ஜதீத் வாலிபால் கழகத்தின்(JVC) புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கும் கூட்டம் JVC-ன் தலைவர் இஃப்திகார் ஹசன் மற்றும் சேர்மன் ஆபித் அலி தலைமையில் நடைபெற்றது.
JVC அணியின் சேர்மனாக K.S.R.ஆபித் அலி மற்றும் A.நூகு சுலைமான் , துணை சேர்மனாக, M.I.நசுர்தீன் தலைவராகவும் S.இஃதிகார் ஹசன் துணை தலைவராகவும், S.செய்யது இப்றாஹிம், K.S.R.செய்யது மீரான் அலி, H.வாசிம், ரியாஸ் காதர் முஹைதின் ஆகியோர், இணை துணை தலைவராகவும் J.முஹம்மது சதக்கத்துல்லாஹ் மற்றும் செய்யது தமீம் அன்ஸார்் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செயலாளராக முஹம்மது ஃபஹது, இணை செயலாளராக K.முஹம்மது அர்ஷத் அலி, துணை செயலாளராக சுல்தான் செய்யது இப்றாஹிம்(கோவனா), அனுஸ்தீன், அப்துல் ஹுசைன், கலீல் ஜிப்றான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொருளாலராக மஹ்ரூஸ் கனி, இணை பொருளாலராக முஹம்மது சுபைருல்லாஹ் ஆகியோரும், துணை பொருளாலராக ரிஸ்கான், ரஃப்ஸன், மஹசின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
JVC-யின் ஆலோசகராக H.சாகுல் ஹமீது, JVC-யின் பயிற்சியாளராக N.ஹமீது ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனம்..
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் நாளைய சாதனை மாணவிகளுக்கான ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை ஊராட்சிகளில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்ட காரணமாக இருந்த செல்விக்கு மத்திய அரசு ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கியது.இவரைப் பாராட்டும் வகையிலும் நாளைய சாதனையாளர்களாக மாணவிகளை உருவாக்கும் வகையிலும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவிகளை நாளைய சாதனையாளர்களாக வரவேண்டும் என்று ஊக்கப்படுத்தி பேசினார்.மாநகராட்சி கல்வி அதிகாரி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வியை வாழ்த்திப் பேசினார்.செல்வி தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் மாணவிகளுக்கான சுகாதாரம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியை மகேஸ்வரி வரவேற்றார். மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், கண்ணன், மக்கள் தொண்டன் அசோக்குமார், துறை விஜய பாண்டியன், கோபிநாத், ராஜேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.