ராணிப்பேட்டை அருகே வாலாஜப்பேட்டையில் பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.சுங்கச்சாவடி அருகே மேம்பாலத்தில் வழக்கத்தை விட அதிகமாக பனிமூட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னே சென்ற வாகனம் அருகில் சென்ற போதுதான் தெரிந்ததால் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.இதனால் கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த 2 லாரிகளும், 6 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Category:
செய்திகள்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தொடர்வோம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் அன்பு இல்லத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் அங்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடினர்.
இந்த பொங்கல் விழாவில் அங்குள்ள குழந்தைகளுக்கு பொங்கல் பரமரி வாழ்த்துக்கள் கூறி கரும்பை கொடுத்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனால் அன்புள்ள குழந்தைகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும்அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கண் பார்வை திறன் பரிசோதனை நடந்தது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் கரையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வாணியன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம் நாரையூணி நடுநிலைப்பள்ளி, மெய்யம்புளி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச கண் கண்ணாடியை கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆலங்குளம் பகுதியில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோடு திரையரங்கம் அருகே அமைக்கபட்டிருந்த பேரிகார்டு திடீரென அகற்றப்பட்டது.இந்த சாலை பொங்கல் விழா காலம் என்பதால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படும் முக்கிய பகுதியாக உள்ளது. வாகன நெரிசலினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.எனவே,மனித உயிர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் மிகுந்த அக்கறை கொண்ட ஆலங்குளம் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், வாகன விபத்துகள் ஏற்படாதிருக்க மீண்டும் பேரிகார்டுகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் பொங்கல் விழா நடந்தது. எம்ஜிஆர் தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். அப்பகுதி நரிக்குறவர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பொங்கல் விழாவில் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் ஏ.முகமது சலாவுதீன் பங்கேற்றார்.
* மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுக பெருமாள், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பழைய தொண்டான் துளசி பகுதியில் தமிழக அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே சி.வீரமணி கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமுஆவின் தலைவர் வேலழகன் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமை தாங்கி ஏழுமலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக., தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக., நிர்வாகிகள்
by mohan
written by mohan
கடந்தாண்டு டிச.27 தேதியில் நடந்து முடிந்த ஊரக , உள்ளாட்சி தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சில் தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட்ட மண்டபம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மனைவி சுப்புலட்சுமி , தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அத பியாவை (அதிமுக) , பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த ஒன்றிய பெருந்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரகதாம்பாள் ஜானகி ராமனை வீழ்த்தி சுப்புலட்சுமி ஜீவானந்தம் வென்றார். இதனையடுத்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை , மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் . மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுக., தீர்மானக்குழு இணை செயலாளர் வ.சத்தியமூர்த்தி (முன்னாள் அமைச்சர்), முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.முருகவேல், மண்டபம் பேரூராட்சி பணி நியமனக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.ராஜகோபால், பனைக்குளம் ஊராட்சி திமுக செயலாளர் வக்கீல் ஹலீம் ஆகியோர் உடன் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் வறட்சியை தாங்கி வளரும் TDCM 1 Dubraj புதிய ரக நெல் அறுவடை தொடக்கம்
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் வேளாண் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்போடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய TDCM 1 Dubraj ரக நெற்பயிர் அறுவடையை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி, விவசாயதாரர்களின் மகசூலை அதிகரிக்கவும், அவர்களின் வருவாயை உயர்த்தவும் வேளாண் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மழை பொய்த்து போகும் காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்பெற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கேற்ப வறட்சியை தாங்கி குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் வகையில் கண்டறியப்பட்ட -TDCM 1 Dubrajஎன்ற நெல் ரகம் மாநிலத்திலே முதன்முறையாக வலையனேந்தல் கிராமத்தில் பரிசாத்திய முறையில் அறிமுகம் செய்யப்பட்டு, நெல் விதையின் திறன் அறியும் திடல் அமைக்கும் பொருட்டு துரைராஜ் என்ற விவசாயிக்கு 5 கிலோ நெல் விதை வழங்கப்பட்டு செப். 26 அன்று பயிரிடப்பட்டது.இவ்வாறு பயிரிடப்பட்ட நெல் விதைகள் சிறப்பான முறையில் நெற்கதிர்களாக வளர்ச்சியடைந்ததை அடுத்து நேற்று (ஜன.1) அறுவடை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 350 கிலோ அளவில் நெல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது, பாபா அணு ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வேளாண் துணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவுக்கு ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் நலனுக்காக 100 சதவீதம் அரசு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,526 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 97 மில்லியன் கனஅடி அளவில் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2018-19 மற்றும் 2019-20 ஆகிய
நிதியாண்டுகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆர்.ராஜா ஆகியோரின் ‘ அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் திறப்பு விழா நடந்தது. மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் செ. மாலதி கூறுகையில், இங்கு வாலிபால் , கபடி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் செ. மாலதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எம்.ஏ. சீமான் மரைக்காயர், , மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு. முனியசாமி, மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம். ரமேஷ், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் மா. மைதீன், மு. நம்புவேல் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவிகள் சாதனை.!
திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் சார்பாக திருவருட்பா போட்டிகள்_21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு12.01 2020 அன்று ஸ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான, பல்வேறு திறன் போட்டிகள் நடைபெற்றது.இதில் 6_8 வகுப்புகளுக்கு நடைபெற்ற திருவருட்பா பேச்சுப்போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவி ரா.பிரியதர்சினி (ஆறாம் வகுப்பு) மூன்றாம் இடமும், 6_8 வகுப்புகளுக்கான திருவருட்பா ஒப்புவித்தல் போட்டியில் மு.லத்திகா என்ற ஆறாம் வகுப்பு மாணவி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
இம்மாணவிகளுக்கு பயிற்சி அளித்த திருமதி இராஜி,திருமதி லெட்சுமி ஆசிரியைகளையும்,இத்திறன் போட்டிக்கு அழைத்துச்சென்ற திருமதி இராஜி, மற்றும் திருமதி சாரதா ஆசிரியைகளையும், மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளையும், இப்பள்ளியின் தாளாளர் திரு ஜா.சுதாகரன்,தலைமை ஆசிரியர் திரு.விஜயகுமார் மற்றும் இருபால் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல்.
by mohan
written by mohan
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார்.மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை.மதுரை முக்கியமான இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை. மற்றும் மோப்ப நாய்கள் மூலமாகவும் தீவிர சோதனை செய்யப்பட்டது.தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல். தீவிர சோதனைக்கு பின் இது வெறும் புரளி என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை லோக்கல் சேனலில் தர்பார் படம் ஒளிபரப்பிய விவகாரம்.சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் விளக்கம்.லைக்கா நிறுவனத்தின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள சரண்யா டிவி என்ற போக்கல் சேனலில் ரஜினியின் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பானது.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட லைகா பட நிறுவனம் சம்மந்தப்பட்ட லோக்கல் சேனல் உரிமையாளர் ஈச்சம்பட்டி ஜெயராமன் எனக்குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.இதுசம்மந்தமாக பிரபல தொலைக்காட்சிகளிலில் இவா் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியானது.இதை சம்மந்தப்பட்ட ஜெயராமன் மறுத்துள்ளாா். இந்நிலையில் சம்மந்தப்பட்ட லோக்கல் சேனல் உரிமையாளர்கள் தான் இல்லையென்றும் சிந்துபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக வெற்றி பெற்றததற்காக தான் மக்களுக்கு நன்றி சொல்லி சரண்யா டிவியில் விளம்பரம் ஓட்டியதாகவும் இதனை லைகா நிறுவனம் நான்தான் சேனல் உரிமையாளர் எனத் தவறுதலாக புரிந்து கொண்டு என் மீது புகார் அளித்துள்ளது.இது அனைத்து சேனல்களிலும் ரஜினியின் புகழை நான் கெடுப்பதாக செய்தி ஒளிபரப்பாகி உள்ளது.நேற்று நான் கிராமத்தில் பொங்கல் பரிசு வழங்கிக் கொண்டிருந்த நிலையில் நான் தலைமறைவானதாக என் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்தி வந்துள்ளது.இதனால் நானும் என் குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலில் உள்ளோம்.சம்மந்தப்பட்ட லைகா நிறுவனம் என் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதற்கு மன்னிப்பு கேட்டு மறுப்பு செய்தி வெளியிடாவிட்டால் லைகா நிறுவனத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் மேலும் தவறான செய்தி வெளியிட்ட சம்மந்தப்பட்ட தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்தாா்ஜெயராமன் சிந்துபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக அமமுக கட்சி சார்பில் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
இதில் கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கொண்டாடினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
by mohan
written by mohan
மதுரை மாநகரில் அமைந்துள்ள அவனியாபுரத்தில் நாளை (15.01.2020) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் நலன் கருதி காளைகள் நெரிசல் இன்றி அவனியாபுரத்திற்குள் செல்வதற்கு ஏதுவாக காளைகள் கூடுவதற்கு அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் ரோடு சந்திப்பு வரை 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
.இதில் 1-ம் பிரிவிலிருந்து 8-ம் பிரிவுவரை 1 முதல் 400 வரை தலா 50 காளைகள் வீதமும் .9-ம் பிரிவிலிருந்து 11-ம் பிரிவுவரை 401 முதல் 700 வரை தலா 100 காளைகள் வீதமும் .கூடுவதற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூரிலிருந்து மதுரை மாநகருக்குள் வரும் காளைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக முத்துப்பட்டி ரோடு சந்திப்புவரை வாகனத்தில் வந்து காளைகளை இறக்கி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவு எண்ணின் படி சம்பந்தப்பட்ட பிரிவில் காளைகளை நிறுத்திக்கொண்டு வாகனங்களை முத்துப்பட்டி சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் மற்றும் வெள்ளைக்கல் ஏரியாக்களிலும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..காளையின் உரிமையாளர்கள் மதுரை மாநகர காவல்துறையின் வேண்டுக்கோளுக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வடக்கு, தெற்கு, கோயில்வாடி இடங்களில் உள்ள மீன்பிடி தங்குதளங்களில் 750க்கும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்படகுகளுக்கு மானிய டீசல், அனுமதி டோக்கன் , மீனவர் அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் கவனித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் இவர், பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் செய்வதும், வேண்டாதவர்களை காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் செயல்களை செய்து வருகிறார். விசைப்படகுகளுக்கான பெயர் மாற்றம், மீனவர் தேசிய சேமிப்பு நிவாரணம், மீன் பிடி தடை கால நிவாரணம், அரசு வழங்கும் அனைத்து நிவாரண முறைகேடு, தடைசெய்யப்பட்ட இரட்டை வலை மீன்பிடி ஊக்குவிப்பு, வெளியூர் படகுகள் விதிகளுக்கு புறம்பாக தங்குதளம் அமைக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். மண்டபத்தில் கடந்த 7 ஆண்டுகள் தொடர்ந்து பனியாற்றி வருவதால், அதிகார துஷ்பிரயோகம் வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், மண்டபம் சம்மாட்டியப்பா தெரு எம்.முகமது அபுபக்கர் புகார் மனு கொடுத்துள்ளார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் பொதுமக்களுக்கு புகையில்லா போகி துண்டு பிரசுரம்
by mohan
written by mohan
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குனர் மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி அவர்களின் உத்தரவுக்கு இணங்க போகி பண்டிகையை முன்னிட்டு பழைய கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்து மாசு ஏற்படாவண்ணம் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி அவர்களுக்கு அறிவுரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் தீயணைப்பு நிலைய மீட்பு பணி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீட்டில் புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
by mohan
written by mohan
மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி பீரோவில் இருந்த 170 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணம் ரூ.2,80,000/- -ம் எடுத்துகொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர்கள் பொலீரோ காரில் சென்றுவிட்டதாக D3 கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் மேற்பார்வையிலும் கடும் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர் அழகுமுத்து மற்றும் தலைமை காவலர்கள் செல்வராஜ், தனசேகரன், ராமச்சந்திரன், பக்ருதீன், . ஜெயகௌசல்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் CCTV பதிவுகளை பார்வையிட்டு புலன் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புகார்தாரர் குணசேகரனின் மகனாகிய சோலைராஜா 36என்பது தெரிய வந்தது. மேலும் விசாரனை செய்ததில் மதுரை மாடக்குளம் பெரியார் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி உமாதேவி 38 மற்றும் NGGO காலனி, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் ராஜராஜன் 42, என்பதும் தெரியவந்தது மேலும் மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்டதை மூவரும் தனித்தனியே ஒப்புக்கொண்டனர். எனவே அவர்கள் மூவரையும் கூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் கைது செய்து அவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தார். மேலும் மூவரையும் நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி மதுரை மத்திய சிறையில் அடைத்தார். துரிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கள் விழா இன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகள் தங்களது திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் திறமைப் போட்டிகளில் கலந்துக் கொண்டனர். இந்திகழ்வில் மௌன நாடகம், பட்டிமன்றம், சந்தைப்படுத்துதல், நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடைப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளும் ஒன்று இணைந்து சமத்துவப் பொங்கல் வைக்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக EC பாடபிரிவு குழு ஒருங்கிணைத்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வண்ண கோலம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு மற்றும் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100 சதவீதம் வாக்கு பதிவு மற்றும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கோலங்களை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் செளந்தர்யா பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து கோலங்களையும் கோலமிட்ட மாணவ மாணவிகளை கோட்டாட்சியர் செளந்தர்யா பாராட்டினார்.இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உட்பட மாணவ மாணவியா் பலர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.