புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குனர் மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி அவர்களின் உத்தரவுக்கு இணங்க போகி பண்டிகையை முன்னிட்டு பழைய கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்து மாசு ஏற்படாவண்ணம் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி அவர்களுக்கு அறிவுரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் தீயணைப்பு நிலைய மீட்பு பணி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
வீட்டில் புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
by mohan
written by mohan
மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி பீரோவில் இருந்த 170 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணம் ரூ.2,80,000/- -ம் எடுத்துகொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர்கள் பொலீரோ காரில் சென்றுவிட்டதாக D3 கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் மேற்பார்வையிலும் கடும் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர் அழகுமுத்து மற்றும் தலைமை காவலர்கள் செல்வராஜ், தனசேகரன், ராமச்சந்திரன், பக்ருதீன், . ஜெயகௌசல்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் CCTV பதிவுகளை பார்வையிட்டு புலன் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புகார்தாரர் குணசேகரனின் மகனாகிய சோலைராஜா 36என்பது தெரிய வந்தது. மேலும் விசாரனை செய்ததில் மதுரை மாடக்குளம் பெரியார் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி உமாதேவி 38 மற்றும் NGGO காலனி, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் ராஜராஜன் 42, என்பதும் தெரியவந்தது மேலும் மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்டதை மூவரும் தனித்தனியே ஒப்புக்கொண்டனர். எனவே அவர்கள் மூவரையும் கூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் கைது செய்து அவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தார். மேலும் மூவரையும் நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி மதுரை மத்திய சிறையில் அடைத்தார். துரிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கள் விழா இன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகள் தங்களது திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் திறமைப் போட்டிகளில் கலந்துக் கொண்டனர். இந்திகழ்வில் மௌன நாடகம், பட்டிமன்றம், சந்தைப்படுத்துதல், நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடைப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளும் ஒன்று இணைந்து சமத்துவப் பொங்கல் வைக்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக EC பாடபிரிவு குழு ஒருங்கிணைத்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வண்ண கோலம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு மற்றும் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100 சதவீதம் வாக்கு பதிவு மற்றும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கோலங்களை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் செளந்தர்யா பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து கோலங்களையும் கோலமிட்ட மாணவ மாணவிகளை கோட்டாட்சியர் செளந்தர்யா பாராட்டினார்.இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உட்பட மாணவ மாணவியா் பலர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு.அழைப்பாளராக .சு. ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் லோகநாதன் எம்எல்ஏ.வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு .மாணவரணிமாநில துணை செயலாளர் M.D. பாபு ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் சோளிங்கர் (மே) சின்னதுரை (கிழக்கு) பெல் தமிழரசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கேஎம் . வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் 08.01.2020 அன்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம் அறிவிக்கப்பட்டது. அதனை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தொகையை வில்சன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் ” “தேசம் காப்போம் ” கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்திற்கு இந்திய உலமா பேரவை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். பாசிச எதிர்ப்புகூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் வரவேற்புரை வழங்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன் தொகுப்புரை வழங்கினார். பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆலிம் அகமது முஸ்தபா தீர்மானம் வாசித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் மா.செ. சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர், இரா.பெரியார் செல்வன், அ மாநில செயலாளர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர், இசுலாமிய நல கூட்டமைப்பு தலைவர் தண்டுப்பாளியம் நூர்சையது இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.தேனி மாவட்ட மற்றும் நகர ஜமாஅத் உலமா செயலாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.
சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா… தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்
by mohan
written by mohan
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக, நன்மையுடன் வாழ வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டன்ர். முகம் நிறைய மகிழ்ச்சி, மனதில் உற்சாக வெள்ளம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் என கைகளில் கரும்புகளை ஏந்தி சமத்துவப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி சந்தோஷம் அடைந்தனர் மாணவ, மாணவிகள்.
பொங்கல் பானை, இனிப்பு கரும்பு, வண்ண, வண்ண கோலங்கள், விளையாட்டு போட்டிகள் என பாரம்பரியம் மாறாமல் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.சமத்துவ பொங்கல் விழாவை ஒட்டி, கோலம்,விளையாட்டு, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவிகளுடன் மாணவர்களும் இணைந்து கோலம் போட்டு அசத்தினார்கள். இதில், மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மண்மனக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாணவர்கள் அனைவரும் ‘பொங்கலோ, பொங்கல்’ என பாடி இறைவனை வழிபட்டனர். பின்னர், சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே தொருவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பஜூருதீன் தலைமை வகித்தார். சமத்துவ பொங்கலின் முக்கியத்துவம் குறித்து எம்.பி.,நவாஸ் கனி பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊரகப்பகுதிகளில் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜன.10, 11, 12 தேதிகளில் நடந்தது. இதில் அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 27: 25, 18:25, 25:22 என்ற செட் கணக்கில் ராமநாதபுரம் அணியை, கடலூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அரியலூர், புதுக்கோட்டை அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன.
கடலூர் சுவாதி, சரண்யா, ராமநாதபுரம் செல்வபாரதி ஆகியோருக்கு சிறந்த வீராங்கனைக்கான தனி நபர் கோப்பை வழங்கப்பட்டது. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவாரூர், புதுக்கோட்டை அணிகள் மோதின. இதில் திருவாரூர் வென்றது. ராமநாதபுரம், கடலூர் அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். போட்டியில் வென்ற அணிகளுக்கு , ராமநாதபுரம் வாலிபால் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். செயலர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் யூசுப் கனி, இணை செயலர்கள் ரமேஷ் பாபு, தமிழரசு, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க செயலர் எம்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, திருக்குறள் விழா, அரவிந்தர் அரங்க ஆண்டுவிழா, இளைஞர் விழா( சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்) மற்றும் நகைச்சுவை நாள் விழா என
ஐம்பெரும் விழா அரவிந்தர் அரங்கில் நடந்தது. இராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் கா.செந்தில்குமார் தலைமை வகித்தார். குழந்தை வளர்ப்பு பற்றியும் மற்றும் மற்றவர்களுக்கு கொடுப்பதே சிறந்தது என்ற தலைப்பில் அவர் உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி புகழ் தேவகோட்டை. மகாராஜன் கலந்துகொண்டு நகைச்சுவை குதிரையில் ஒரு சிந்தனை பயணம் என்ற தலைப்பில் நகைச்சுவை விருந்தளித்தார்.
இளைஞர் எழுச்சி நாயகன் என்ற தலைப்பில் கவிஞர்.வேலுச்சாமிதுரை, ‘அன்னைமொழி அரங்கேறும் அரவிந்த அரங்கம்’ என்ற தலைப்பில் கவிஞர். மாணிக்கவாசகம், மற்றும் ‘மாற்றம் மாறாதது’ என்ற தலைப்பில் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது துணைத் தலைவர். விவேகானந்தன் நன்றி கூறினார். தமிழ்ச் சங்க தலைவர் பேராசிரியர் (ஓய்வு) மை. அப்துல் சலாம், செயலர் டாக்டர் சந்திரசேகரன், ராமநாதபுரம் இன்னர் வீல் சங்க தலைவி கவிதா செந்தில்குமார், டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், புரவலர் தேவிஉலக ராஜ், மங்கள சுந்தரமூர்த்தி, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பைபாஸ் ரோடு எல்லீஸ்நகர் பிரிவு சாலையில் (ஆப்பிள் ஸ்னாக்ஸ் நுழைவாயிலில் )பல மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் ஆங்காங்கே குடிநீருக்காக மறியலும் ஏற்படுகிறது. ஆனால் இங்கு பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாக சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில் பலமுறை அதிகாரிகள் இந்த வழியாகத்தான் செல்கிறார்கள். நாங்களும் புகார் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கண்டும் காணாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் கோடைகாலம் ஆரம்பித்தவுடன் நிலையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் குடிநீர் சேமிக்கும் அரசு குடி நீர் வீணாவதை தடுக்க மறுப்பது ஏன் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹ்யித்தீனியா பள்ளியின் 29வது விளையாட்டு, ஆண்டு விழா நடந்தது. மாணவர் முகமது நவ்ஃபீஸ் வரவேற்றார். தன்னம்பிக்கை பேச்சாளர் கோவை சுல்த்தானா பர்வீன், முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.எம். தமீம் ராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளி தாளாளர் அல்ஹாஜ் இ.எம்.எஸ்.மௌலா மைதீன், துணைத்தலைவர் எம்.எம் எஸ்.முகைதீன் இப்ராஹீம் , செயலாளர் டாக்டர் எம்.எச்.செய்யது ராசிக் தீன், துணை செயலர் எம்.ஒய்.முகமது ரபீக், பொருளாளர் ஏ.சேகு பசீர் அகமது மற்றும் முஹ்யீத்தீனியா கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவி பி.சரிக்கா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே குயவன் குடியில் ஹெல்பேஜ் இந்தியா மற்றும் முதியோருக்கான முதியோர் அமைப்பு சார்பில் முதியோர் பொங்கல் விழா’ நடந்தது. வாழ்வாதார மற்றும் பேரிடர் மேலாண் ஹெல் பேஜ் இந்தியா தலைவர் ராஜேஸ்வர் தேவரா கொண்டா முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வென்ற முதியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஹெல்பேஜ் இந்தியா மாநிலத் தலைவர் வி.சிவக்குமார், முதியோருக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், குயவன்குடி ஊராட்சி தலைவர் குப்பை கனி, கிராமத் தலைவர் டி.சுப்ரமணியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.காளிதாஸ் துரை உள்ளிட்டோர் பரிசு வழங்கினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.திருக்கண்ணன் நன்றி கூறினார். ஆலம்பனா முதியோர் வாழ்வாதார திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் திட்ட பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் 12/01/2020 ஆம் தேதியன்று மகளிர் மற்றும் ஆடவர் ஓப்பன் டெட் லிப்ட் மற்றும் பென்ஞ்ச் பிரஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்கினர. இப்போட்டியில் திருச்சி சாய் பிட்னஸ் ஜிம் சார்பில் கலந்து கொண்ட பேரையூர் இளைஞர் ம.மனோஜ் பிரபாகரன் 120+ ஆடவர் சப்ஜுனியர் பிரிவில் 2 தங்கப்பதக்கமும் ஜுனியர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும் பெற்றார். அவருக்கு திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் விசுராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருச்சி சாய் பிட்னஸ் நிருவர் சாய் சரன் வாழ்த்து கூறினார் மற்றும் மக்கள் பாதை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரையூர் ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை ரோட்டரி சங்கம், மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை ரோட்டரி சங்கம், மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிஎஸ்எம் மருத்துவ வளாகத்தில் இன்று (12/01/2020) நடைபெற்றது.
இந்த முகாமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும் வட்டார மருத்துவ அலுவலருமான டாக்டர் ராசிக்தீன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம், ரோட்டரி உறுப்பினர் தவமணி, பிஎஸ்எம் மருத்துவமனை அலுவலர் சமூக ஆர்வலர் அஜிஹர் மற்றும் குழந்தை சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகவன், மருத்துவ குழுவினர், மருத்துவ மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினம் என்று அரசு அறிவித்தது. இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக பெரிதும் முயற்சித்தவர் விவேகானந்தர். அவர் தன்னிடம் 100 இளைஞர்களை அனுப்பினால், அவர்கள் மூலம் நாட்டை வலிமையான இந்தியாவாக மாற்றுவதாகக் கூறினார். அந்த அளவுக்கு இளைஞர்கள் மீது அவர் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். இளைஞர்களால்தான் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்று அவர் நம்பினார்.
அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் “சகோதர, சகோதரிகளே!’ என்று அவர் தன்னுடைய பேச்சைத் தொடங்கியபோது, பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். சுவாமி விவேகானந்தர் சிறு வயதிலேயே இந்து சமயக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும், பகுத்தறிவு பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராகவும் காணப்பட்டார்.
விவேகானந்தருக்குக் கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துகள் இருந்தன. கல்வியை எப்படி வழங்க வேண்டும் என்பதிலும் அவர் தனக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார். நேர்மறையானதாக கல்வியை வழங்க வேண்டும் என்ற தாக்கம் அவரிடத்தில் இருந்தது. இத்தகைய சிறப்பு மிக்க சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசு கடந்த 1984ஆம் ஆண்டில் அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1985, ஜன 12-இம் தேதி முதன்முதலாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேசிய இளைஞர் தினம் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. அதன் மூலம் விவேகானந்தரின் நோக்கங்கள் மாணவர்களிடத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. அவர்கள் அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களிடையே எழுச்சி ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதுதேசிய இளைஞர் தினம்.
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மகத்தானது. இந்திய இளைஞர்கள் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும், வளர்ந்த நாடுகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு சிறந்து விளங்குகின்றனர். இருப்பினும் சில எதிர்மறையான எண்ணங்களை கொண்ட இளைஞர்களும் நம்நாட்டில் தான் உள்ளனர். இவர்கள் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அவரைச் சார்ந்திருக்கும் சமூகத்தையே பின்னோக்கி இழுக்கின்றனர்.
விவேகானந்தரின் விருப்பம்: ‘இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது, அவர்களது வயது எத்தகைய சவால்களையும் தூக்கி எறிந்து, சாதிக்க கூடியது’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘தூய்மை, பொறுமை, விடாமுயற்சி’ இந்த மூன்றும் தான் இவர்களுக்கான தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘இரும்பு போன்ற தசை’, ‘எக்கு போன்ற நரம்பு’ இளைஞர்களுக்கு வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். ‘ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்’ என்று விவேகானந்தர் கூறினார். மேலும் ‘நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்… இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்’ என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
செய்தி : இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு
by mohan
written by mohan
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் 6 எழுத்து தேர்வு மையங்களில் 10,659 நபர்கள் தேர்வு எழுதினர். மதுரை மாநகரில் 795 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணியினை ஆய்வுசெய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி
by mohan
written by mohan
நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா தெரிவித்தார்.நெல்லையில் நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, நெல்லையில் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள், எழுதுபவர்கள் , குறித்த புள்ளி விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்ட காவல் சோதனை சாவடிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சோதனை சாவடிகளில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.நெல்லையில் பொங்கல் விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ஜாதி மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், கடந்த வருடம் மோதல்கள் நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்,மேலும் பொங்கல் விடுமுறையில் நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் கல்லூரியில் இன்று 12-ம் தேதி போலீஸ் உதவி ஆய்வாளர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் 6015 பேர் தேர்வு எழுதினர்.வேலூர் டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி.பர்வேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.