திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஒன்றியம் அந்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் மற்றும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
Category:
செய்திகள்
திருவாடானை அரசு கல்லூரியில் மகளிர் தின விழா, கொரானா தடுப்பு விழிப்புணர்வு முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சர்வதேச மகளிர் தினம், கொரோனா நோய் தடுப்பு முறை சிறப்பு விழிப்புணர்வு முகாம் , சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவர் இரா.வைதேகி துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரியை வந்தடைந்தத ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி தலமை வகித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நடவடிக்கை, ஒரே பாரதம் உன்னத பாரதம் குறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்ள மற்றவர்களுக்கு கை கொடுக்கக்கூடாது, தினமும் 15 முறை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், இருமல், மற்றும் தும்மலின் போது வாய், மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும், மற்றவரிடம் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாது காத்து கொள்ளலாம் என வட்டார மருத்துவ அலுவலர் இரா.வைதேகி பேசினார். மாணவிகள் கண்டிப்பாக காலை உணவை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம் என குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி பேசினார்.
மத்திய அரசின் மக்கள் திட்ட புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கட்டுரை, வினாடி வினா போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசின் இசை நாடக பிரிவு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. களவிளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ், குழந்தைகள் திட்ட அலுவலர் கி.விஜயா, கல்லூரி தமிழ்துறை தலைவர் மு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் மகளிர் தின விழா: பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி தலைமை வகித்தார். கீழக்கரை பேடு தொண்டு நிறுவன கிராமப் பணியாளர் அபிராமி வரவேற்றார். வேம்பார் பேடு தொண்டு நிறுவன செயல் இயக்குநர் புஷ்பராயன் விளக்கவுரை ஆற்றினார்.
இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். பெண்களின் முன்னேற்றம் குறித்து சமூக ஆர்வலர் அமுத ஜோதி, ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பவித்ரா, கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி மேலாண் துறை தலைவர் பேராசிரியை விமலி, சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் பேசினர். மகளிரின் சிறப்பு, பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனை பற்றி பள்ளி குழந்தைகள் பாடல் பாடினார்.
பெண்களின் ஆரோக்கியம், குடும்ப நலனே சமூக நலன், ஆண் குழந்தை வளர்ப்பு குறித்து இன்னர் வீல் சங்க தலைவி கவிதா செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். பண்டைய இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை, விடுதலைக்கு பின் பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு வழங்கியுள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி விரிவாக பேசினார். இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, பேடு நிறுவனம், சில்ரன்ஸ் பிலீவ், பிரீடம் ஆகியன விழா ஏற்பாடுகளை செய்திருந்தினன்.
கிராம பெண்கள் தலைவர் செல்லம்மாள், கடலாடி வட்டத்தைச் சேர்ந்த மீனவ மகளிர் உள்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். சின்ன ஏர்வாடி மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவி முத்துராணி நன்றி கூறினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து மக்களின் மனதை வென்ற மாவட்ட ஆட்சியர் – தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..!
by Askar
written by Askar
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து மக்களின் மனதை வென்ற மாவட்ட ஆட்சியர் – தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..!
வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திண்டுக்கல்லில் மனுநீதி நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க மாவட்டம் முழுவதும் இருந்து ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் வருகை தருவார்கள். இவ்வாறு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளிக்க மதியம் உணவு வேளை வரையும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மிகுந்த கஷ்டப்பட்டு மனு அளிக்க வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டு பசியோடு வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு வேளை மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் கடந்த மூன்று வாரங்களாக திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து TARATDAC-சங்கத்தின் நிர்வாகிகள் கூறும் போது,சங்கத்தின் தொடர் கோரிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றி என்றனர். மேலும் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்க உத்தரவிட்டு நடைமுறைப்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் பாராட்டி வரும் நிலையில், திருநெல்வேலி,தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திண்டுக்கல் ஆட்சியரை போன்று மனு அளிக்க வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும் என்பதே அனைத்து பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை சரக டிஐஜி திருமதி.ஆனி விஜயா.ஐபிஎஸ்., கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன். ஐபிஎஸ்., ADSP .வனிதா, சட்டக் கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், சட்ட ஆலோசகர் ஷீலா, சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் .ஜெனட் வசந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இவ்விழாவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை VOC பாலம் அடியில் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகே சென்று பார்த்தபோது அவர் விஷமருந்தி உயிரிழந்தது தெரிய வந்திருந்தது. அருகிலேயே 2 பாலிடால் பாட்டில் இருந்தது. விசாரணையில் அவர் மதுரை பைபாஸ் சாலையில் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன் 58 தெரியவந்தது. இவர் மதுரை காக்கா தோப்பு தெரு வசித்து வருகிறார் .இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .மேலும் பிரேதத்தை நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நரியம்பட்டி தார் சாலையின் தரம் ஆராயப்பட வேண்டும் .58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக கோாிக்கை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாச்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகளுக்கு எந்தவித அழைப்பும் சரியாக கொடுக்கவில்லை மற்றும் அதிகாரிகள் குறைந்த அளவிலே வருகை தந்திருந்தனர் .இது குறித்து மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு முறையான அழைப்பு மற்றும் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.மற்றும் 58 கிராம கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் 7 கி.மீ தூரத்திற்கு தடுப்பு உடனடியாக அமைத்து தருகிறோம் என்றார்கள். இதுவரை அதற்கான முயற்சி எதுவும் இல்லை கடைசி காலங்களில் அமைப்பதை விட உடனே சிமெண்ட் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட்டியபட்டி லிருந்து அய்யம்பட்டி வழியாக உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நத்தம் போரம்போக்கு இடங்களை அடையாளப்படுத்திட வேண்டும் அதில் விவசாய சங்கம் சார்பில் அடர்வனம் அமைக்கப்படும்.மற்றும் சித்தர்மலை மகாலிங்கம் கோவில் பொதுமக்கள் தங்கு தடையின்றி செல்ல மற்றும் குடிநீர் வசதிகள் மற்றும் விளக்குகள் அமைத்து தர வேண்டும்..58 கிராம கால்வாய் பொத்தல் ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண் தரத்தை பரிசோதனை செய்திட வேண்டும்.மற்றும் நரியம்பட்டி முதல் அய்யம்பட்டி வரையிலான தார் சாலை அமைக்கும் பணியில் விவசாயிகள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்..தார் சாலையின் தரம் ஆராயப்பட வேண்டும்..எனபது உள்பட பல கோாிக்கைகள் மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக சௌந்திரபாண்டி உள்பட இளைஞா்கள் கலந்து கொண்டு கோாிக்கை விடுத்துள்ளனா்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி பகுதி அதிமுக வட்ட செயலாளர் கேஆர்.ரவி தலைமையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தேதி அன்று பிறந்த) இன்று 10.03.20 தேதி பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி குழந்தை களுக்கு மோதிரம் அணிவித்தார். உடன்கட்சியினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கே எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் பாதை சார்பாக உலக மகளிர் தின விழா பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா வரவேற்றார்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் கோகிலா தலைமை தாங்கி மகளிர் தினக் கொண்டாட்டங்கள் சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.ஆயிர வைசிய சபையை சேர்ந்த போஸ், நாகு, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் மீன் மக்கள் பாதையை பற்றியும் , சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.மாவட்ட நீதி திட்ட றுப்பாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு நேர்மையான சமூகத்தை உருவாக்க மகளிர் ஒன்றுபட வேண்டுமென வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி துணை முதல்வர் கவிதா, அல்போன்சா, சங்கமித்ரா,காயத்ரி,மரியா ஆக்னெஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பசுமலை , ஆசிரியர் சேவியர், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினாநாயகம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் . ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் வரவேற்று பேசினார்.
பெண்கள் தினத்தில் பெண்களுக்கான இன்றைய சட்டதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) குணவதி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 1,454 அங்கன்டி மைய பணியாளர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகளை கணக்கிட்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மகளிருக்கு ஏற்படும் ரத்த சோகை, எடை குறைவான குழந்தை பிறப்பு, 0-6 வயது குழந்தைகள் உடல் மெலிவு மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் 8 முதல் மார்ச் 22 வரை ஊட்டச்சத்து இரு வார விழா கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊராட்சி அளவில் ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் “அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே நம் சொத்து” என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இப்போட்டியில் நயினார்கோவில், ராமநாதபுரம்,, திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் முதல் மூன்று பரிசு பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கினார்.மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வி.ஜெயந்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மராத்தான் போட்டி நடைபெற்றது
by mohan
written by mohan
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை ஒழுக்கும் வகையில் இராமநாதபுரத்தில் முதன்முறையாக. மகளிருக்கான. மராத்தான் நடைபெற்றது. இப்போட்டியினை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மனைவியுடன் வருகை தந்து விழாவினைத் தொடங்கி வைத்தார். செய்யதம்மாள் மருத்துவமனையின் மருத்துவர் சானா பாத்திமா ஒருங்கிணைக்கப்ட்ட. சுமார் 1200 பெண்கள் கலந்துகொண்டனர்.
5கிலோ மீட்டர் இலக்கு கொண்ட இம்மாராத்தான் சி.பி.எஸ்.இ. பள்ளி (பேராவூரணி) யில் தொடங்கி நேஷனல் அகாடமி பள்ளியில் (பட்டிணங்காத்தான் முடிவுற்றது ) இதில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். முதல் பரிசினை சுமித்ரா என்ற பெண்ணும் 2 பரிசினை அனித்ராவும் 3 மூன்றாம் பரிசினை சினேகாவும் 4 பரிசினை பவித்ராவும் 5 பரிசினை மெளனிகாவும் சிறந்த வெற்றியாளராக செல்வி சுஜிதாவும் பரிசினை பெற்றனர். இவ்விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் நேஷனல் அகாடமி பள்ளிகள் செய்யதம்மாள் சி.பி.எஸ்.இ. பள்ளி. ஐஸ்வர்யா பேக்கரி எம்.ஆர்.டிரேடர்ஸ் சுபலெட்சுமி பஜாஜ் ஆனந்தம் சில்க்ஸ் ஆப்டிக்கல் பேலஸ் மற்றும் பெஸ்ட் மம்மி பேக்கரி ஆகியோர்க்கு நன்றி கூறி விழா நிறைவுபெற்றது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐஎம்ஏ மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் குற்றாலம் கிளை இந்திய மருத்துவ கழகம், குற்றாலம் டாக்டர்கள் டிரஸ்ட், நாகர்கோவில் மூகாம்பிகை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து அனைத்து நோய்களுக்குமான பொதுமருத்துவ இலவச சிகிச்சை முகாம் சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.மருத்துவ முகாமினை சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணன், இதயவியல் டாக்டர் வெங்கடேஷ் பாபு, தலைமையாசிரியர் சுப்பிரமணிய துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் குற்றாலம் கிளை இந்திய மருத்துவ கழக மருத்துவர்களான சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆகிய பகுதியைச் சார்ந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் நாகர்கோவில் மூகாம்பிகை மருத்துவமனை மருத்துவர்கள், கலந்துகொண்டு 745 நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்து இதய நோய்களுக்கான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட், பைபாஸ் அறுவை சிகிச்சை ஆலோசனைகள், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை, எலும்பு முறிவு, குழந்தையின்மை, பொது மருத்துவம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், காது மூக்கு தொண்டை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, கண்நோய், பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்தனர்.
மேலும் இதய நோய்களுக்கான எக்கோ, இஜிசி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மற்றும் ரத்தப் பரிசோதனைகள் இலவசமாக செய்து மருந்துகள் வழங்கினர்.மருத்துவர்கள் தங்கப்பாண்டியன், மூகாம்பிகை மருத்துவ குழும அறங்காவலர் மூகாம்பிகா, வெங்கடேஷ் பாபு, கிரிஷ், ராகவேந்திரா அஸ்ரன்னா, பாலாஜி, வித்யா, மமதா, இளங்கோ, வேதமூர்த்தி, முருகையா, மோகன்ராவ், லோகநாதன், ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் ஆனி ஹோல்டா எலிசபெத், பிசியோதெரபிஸ்ட் சுப்புலெட்சுமி, நெல்லை அகர்வால் கண்மருத்துமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவ கழக குற்றாலம் கிளையின் தலைவர் டாக்டர் பாலாஜி, செயலாளர் ராகவேந்திரா அஸ்ரன்னா, பொருளாளர் இளங்கோ மூகாம்பிகா மருத்துவமனை மருத்துவர்கள் பிஆர்ஓ அருள்முருகன், கோட்டைசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த மருத்துவ முகாமில் உள்ளூர்,வெளியூர், சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனைகள், சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் சிம்மக்கல் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் பொதுமக்களால் மீட்க முடியவில்லை. பின் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் கயிற்றை தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர். சாதாரண பூனை என்று நினைக்காமல் தன் உயிரை துச்சமாக நினைத்து பூனையை காப்பாற்றியது அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. பூனையை காப்பாற்ற தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 92 ஆவது வார்டு கோவலன் நகர் டிவிஎஸ் லட்சுமி நகர் ரமண ரிஷி கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டது . ஆனால் வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று அடுத்த நிமிடம் வாகனம் கீழே விழுந்துள்ளது என்ன என்று பார்த்தால் தார் உருகி மிகப்பெரிய பள்ளம் விழுந்து வீட்டு வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம் திடீரென கீழே விழுந்து உள்ளது .பின் அந்த சாலை முழுவதும் ஆராய்ந்து பார்த்தபோது மிக மிக மோசமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சாலை பெயர்ந்தும் உள்ளது. மேலும் 93 வது வார்டு டிவிஎஸ் நகர் சந்தானம் ரோடு பகுதியில் அரைகுறையாக சாலை போட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அமைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் தரமற்ற சாலை அமைத்து இருப்பதால் மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒரு மழை பெய்தால் சாலை அனைத்தும் பெயர்ந்து விடும் எனவும் மேலும் வெயில் காலம் என்பதால் சாலையில் கனரக வாகனங்கள் ஏதேனும் சென்றால் சாலை மிகப்பெரிய பள்ளம் உருவாகும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“கட்டட வடிவமைப்பு பொறியாளர் – (Architecture)”.. நகர மக்களுக்கு மட்டுமல்ல… புறநகரில் படிக்கும் மாணவர்களையும் “NATA” தேர்ச்சி தேர்வுக்கு தயார்படுத்துகிறது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
NATA (National Aptitude Test in Architecture) எனும் கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்புக்கான நுழைவுத் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்ககான நீட் தேர்வுக்கு சமமாக கல்வியாளர்களால் பார்க்கப்படுகிறது, காரணம் பிற பொறியியல் படிப்பு போல் மதிப்பெண்களை மற்றும் அடிப்படையாக கொண்டு கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்புக்கு சேர்ந்து விட முடியாது. கட்டட வடிவமைப்பு பொறியாளர் படிப்பை பொறுத்தமட்டில் மாணவரின் தகுதியை NATA எனும் நுழைவுத் தேர்வு மூலம் கண்டறியப்படுகிறது. இத்தேர்வு இரண்டு நிலையாக வரைதல் (Drawing) எனும் நேர்முக தேர்வும் (offline), இரண்டாம் கட்டமாக இணையவழி (online) மூலமாக தகுதித் தேர்வும் (Aptitude Test) மொத்தம் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டு கட்டட வடிவமைப்பு பொறியாளர் 5 வருட படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பொதுவாகவே இத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நகரப்புறங்களில் மட்டுமே இருந்து வந்தது, இது தொடர்பான படிப்பில் புறநகர் மற்றும் கிராமத்து மாணவர்கள் பின்தங்கியே உள்ளனர் என்றே கூறலாம். ஆனால் இந்த குறையை போக்கும் வகையில் கீழக்கரையில் மிகவும் பழமையான முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டட வடிவமைப்பு பொறியாளர் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டமாக மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன் பதிவுகள் 16மார்ச் மற்றும் 4மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் புறநகர் மற்றும் கிராமத்து புற மாணவர்களுக்கு பொருட் செலவும் இல்லாமலும், அதிக தூரம் பயணிக்காமலும் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று வரை பல திறமைமிக்க கட்டட வடிவமைப்பு பொறியாளர்களை உருவாக்கிய முகம்மது சதக் கல்லூரியின் கட்டட வடிவமைப்பு பொறியாளர் துறை மூலமாக நடத்தப்படுவது குறிப்பிடதக்கதாகும்.
இந்நுழைவுத் தேர்வு சம்பந்தமாக மேல் விபரங்களுக்கு 6385651990, 9840472165, 8122268344, 7708033606, 9500330246 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- மணிவண்ணன்
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின் போது தமிழக அரசின் சார்பில் தொட்டில் குழந்தைகள் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தி வருகின்றது. மேலும், தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் காப்பகங்கள் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு பல குழந்தைகள் நல காப்பகங்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன, அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகள் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.எனவே பொது மக்களில் எவரும் பெண் சிசுக்கொலை குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .நெ.மணிவண்ணன், கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த உணவகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை வைத்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நகர் பாஜக., புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட பாஜக., அலுவலகத்தில் ( அரண்மனை வளாகம், தாமரை இல்லம்) நடந்தது. மாவட்ட தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், மாவட்ட செயலர் ஆர்.மணிமாறன் முன்னிலை வகித்தார். தேர்வு செய்யப்பட்ட, புதிய நிர்வாகிகளை நகர் தலைவர் ஆர்.வீரபாகு அறிவித்தார்.நகர் பொதுச்செயலர்களாக பி.நவநீதன், என்.மாரிமுத்து, நகர் துணைத்தலைவர்களாக எஸ்.ராகேஷ் குமார், கே.தர்மராஜ், வி.ராஜேஸ்வரி, வி.ஜெகன் பிரசாத், நகர் செயலர்களாக எம்.பூபதிராஜா, ஆர்.வி.சரவணன், நகர் பொருளாளராக டி.கதிரேசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், மாவட்ட செயலர் ஆர்.மணிமாறன், நகர் தலைவர் ஆர்.வீரபாகு உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சமூக சீர்திருத்தவாதி, சாவித்திரிபாய் பூலே நினைவு தினம் இன்று (மார்ச் 10, 1897)
by mohan
written by mohan
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றழைக்கப்பட்ட ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேயும். தாழ்த்தப்பட்ட குழந்தைகள், குறிப்பாக பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதை இழுக்காக நினைத்த சமூகத்தில், கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெரும் பணியைச் செய்தார்கள் பூலே தம்பதியினர். இதனால் ஆத்திரம் அடைந்த சமூகத்தின் மேல்தட்டு மக்கள், தொடர்ந்து வசைபாடினர். ஒரு கட்டத்தில், சொந்த குடும்பமே இவர்களை ஒதுக்கி வைத்தது. ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார். 1849ஆம் ஆண்டில், வீட்டை விட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர்.1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897ல் இறந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி
You must be logged in to post a comment.