21
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினாநாயகம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் . ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் வரவேற்று பேசினார்.
பெண்கள் தினத்தில் பெண்களுக்கான இன்றைய சட்டதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) குணவதி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.