தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சியில் நீரோடை கால்வாய் பகுதிகளை தனிநபர் ஆக்கிரமைப்பு செய்து உள்ளதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளில் புகும் நிலை உள்ளது. நீரோடை ஆக்கரமைபை அகற்றவிட்டால் வரும் காலங்களில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எர்ரணஅள்ளி ஊராட்சி மற்றும் பாலக்கோடு பேரூராட்சியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் காலம் காலமாக இருக்ககூடிய நீர்வழி பதை கால்வாயில் சென்றால் தாமரை ஏரிக்கு சென்று அடையும். மேலும் சின்னாற்றில் இருந்து பொதுபணிதுறைக்கு செந்தமான ஜெர்த்தலாவ் ஏரி இடது புறகால்வாயில் இருந்து தருமபுரிக்கு செல்லும் பொதுபணித்துறை கால்வாயிலிருந்து மதகு வழியாக புங்குட்டை ஏரி, மன்னார்குட்டை ஏரி நிறம்பி வெளியோரும் தண்ணீர் மற்றும் நீர்ரோடை கால்வாய் மூலம் மழைநீர் தவளாய்அள்ளி, புதூர், மூங்கப்பட்டிபாலம், அண்ணாநகர், பாலக்கோடு பேரூராட்சி கழிவுநீர் ஆகியவை இணைந்து அரசு பேருந்து பணிமனை முன்பு உள்ள நீரோடை கால்வாய் வழியாக தாமரை ஏரிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
தற்போது நீரோடை கால்வாய் பகுதிகளை ஆக்கிரமைப்பு செய்து வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்களாக மாற்றியதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியோர முடியாமல் குடியிருக்கும் வீடுகளிலும், சுடுகாடு, மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் தாருமாறக நீர் வெளியோடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீரோடை கால்வாய்களை ஆக்கிரமைப்பு செய்துள்ள பகுதியில் மழைநீர் விவசாய நிலத்திலும், வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது.
இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீரோடை கால்வாய் ஆக்கிரமைபை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
ஆபீசுக்கு வர’ஆரோக்கிய சேது’ கட்டாயம்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..
‘மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை, தங்கள் மொபைல் போன்களில் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.டில்லியில், நேற்று முன்தினம், நிதி ஆயோக் எனப்படும், மத்திய திட்டக்கமிஷனின் உயர் அதிகாரிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, அந்த அலுவலகம், ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில், பீதி ஏற்பட்டுள்ளது. பதிவிறக்கம்இதையடுத்து, மத்திய பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம், நேற்று அதிரடியாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர் அதிகாரிகளில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, அனைவருமே, ஆரோக்கிய சேது செயலியை, தங்கள் மொபைல் போன்களில், கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் முன், அந்த செயலி மூலம், அப்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வலியுறுத்த வேண்டும்’பாதுகாப்புக்கு உத்தரவாதம் அல்லது குறைந்த அளவிலான ரிஸ்க்’ என்ற நிலை இருந்தால் மட்டுமே, பயணத்தை துவங்க வேண்டும்.’ஓரளவு அபாயம்’ என்றோ, ‘அதிக அபாயம்’ என்றோ தெரிய வந்தால், கண்டிப்பாக அலுவலகத்திற்கு வரக்கூடாது. இவற்றை, அந்தந்த அமைச்சகங்களின், இணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, கண்காணித்து பொறுப்புடன், வழிநடத்த வேண்டும். இந்த உத்தரவு, பிரதமர் அலுவலகம், மத்திய அரசின் செயலகம் ஆகியவற்றில், உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும்.இந்த உத்தரவை, அமைச்சகங்கள் மட்டுமல்லாது, மத்திய அரசின் கீழ் வரும், தன்னாட்சிபெற்ற உயர் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துமே, தங்கள் ஊழியர்களுக்கு, தனி சுற்றறிக்கை மூலம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.செயலியின் பயன்கொரோனா தொற்று, சமூக பரவலாக மாறும் அபாயத்தை தடுப்பதற்காகவும், அந்த பரவலின் சங்கிலித் தொடரை உடைக்கவும், ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலி, ‘ப்ளூ டூத்’ தை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் போனின் வளையத்துக்குள் வரும், பிற மொபைல் எண்களை பரிமாறிக் கொள்ளும்.இந்த செயலியுடன் பயணிக்கும் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக, அவரது மொபைல் எண் அருகில் வந்து சென்ற எண்களை கொண்ட அனைவரையுமே கண்டறிந்து, தனிமைப்படுத்த உத்தரவிட முடியும்.
செய்தித் தொகுப்பு,வழக்கறிஞர் எம்.சுனில்முத்து.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 104 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென் தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை வாகனம் அறிமுகம்..
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பெயரில் தென் தமிழகத்தில் முதல்முறையாக தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா மாதிரி சேகரிப்பு மையம் மதுரையில் இன்று (29/04/2020) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கிராமப்புற பகுதிகளில் இந்த சேவையானது நடைபெற உள்ளது. இதில் தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்கான மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு உட்படுத்த உதவும் இந்த சேவை.
இந்த சேவையானது கிராமப்புறங்களில் முழுமையாக செயல்படும். மேலும் இதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக சென்று யாருக்கேனும் தொற்று உள்ளதா என சரிபார்க்க இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர், மருந்து ஆய்வாளர் ஒருவர் உடன் இருப்பார்.
இது தென் தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் மதுரை நேதாஜி ஆம்புலன்ஸ் டிரஸ்ட் மற்றும் ஜெயின் சங்கமும் இணைந்து கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு சுமார் 100லிருந்து இருநூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்படும் என நேதாஜி ஆம்புலன்ஸ் டிரஸ்ட் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சகோதரியின் குரல்வளத்தில் குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறு!- ரமலான் சிந்தனை – 6..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமர் (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான “அதீ” என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் அபூ ஜஹ்ல்-உடனும் இருந்த உமர் பின் கத்தாப் எந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீதும் பெருமானார் மீதும் பகைமை உணர்வோடு இருந்திருக்க வேண்டும்? என்று சிந்தித்துப் பாருங்கள்!
ஒருநாள் இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஏக இறைக் கொள்கையை எத்திவைக்கும் முஹம்மது என்ற மனிதரை கொல்ல வேண்டும் என்ற துடிப்புடன் தன் கூர்மையான வாளை உருவியவாறு வாளும் கையுமாக வீட்டை விட்டு வெளியேறியனார் உமர்!
வழியில் நுஐம் (ரலி) என்பவர் இடை மறிக்கவே முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகிறேன் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் உமர்.
அண்ணலாருக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட நுஐம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உமரின் மனதை திசை திருப்ப நாடி உன் சகோதரியும், மைத்துனரும் நீங்கள் கொல்லப்போகும் முஹம்மது அவர்களின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகி விட்டார்கள். அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம்? அவர்களைப் போய் முதலில் கவனியும் என்று நல்லறிவு கூறுகிறார்.
இதை சற்றும் எதிர்பாராத உமர் நெருப்பின் தனலைப் போன்ற ஆத்திரத்துடன் தங்கையின் வீட்டை நோக்கி மின்னலெனப் பாய்கிறார். அங்கு குர்ஆனின் வசனங்களை முனுமுனுத்துக் கொண்டிருப்பதை நின்று கவனித்துக் கேட்கிறார்.
பின்னர் கோபம் குறையாத நிலையில் மைத்துனரின் சட்டையைப் பிடித்து நமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் மார்க்கத்தை வெறுத்து விட்டீரே! என்று மிரட்டல் விட, நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்று அழகிய முறையில் கம்பீர குரலில் பதிலளிக்கிறார் உமரின் மைத்துனர் ஸயீத் (ரலி) அவர்கள்.
இதைக் கேட்டவுடன் உமரின் கண்களில் எரிமலை குழம்பு வெடித்தது போன்று ஆத்திரமடைகின்றது கோபம் தலைக்கேறுகிறது அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ? என்று உன்னிப்பாக கவனித்த தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமருக்கும் தன் கணவருக்கும் இடையில் திரையாக வந்து நின்றுவிடுகிறார், பின்னர் என் கணவரை விட்டுவிடும் எனது கணவர் மீது கை வைப்பது சரியல்ல என்று எச்சரிக்கிறார்.
மேலும் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம். இதற்காக நீர் என்னையும் என் கணவரையும் கொலை செய்ய வந்திருப்பீரென்றால்? தாராளமாக தயவு தாட்சணியமின்றி எங்களைக் கொன்று விடுங்கள். ஏனெனில், சத்தியத்தை ஏற்றவர்கள் எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதுமில்லை அடிபணிவதுமில்லை என்று பதிலளிக்கிறார்.
எரிமலையாக வெடித்த கோபம் அன்புத் தங்கையின் மென்மையான குரலுக்கு அடிபணிகிறது. சற்றே மனம் தடுமாறுகிறது தன்னை சுதாரித்துக் கொள்கிறார். பிறகு அங்கு கண்ணீர் சிந்தும் அன்புத் தங்கையிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து நான் வரும் போது இங்கே ஓதிக் கொண்டிருந்த முஹம்மது என்ற அந்த மனிதர் கொடுத்த குர்ஆன் வசன ஓலையை என்னிடம் காண்பியுங்கள் என்றார் உமர்!
அன்புத் தங்கையும் மைத்துனரும் தங்களிடமிருந்த அரிய பொக்கிஷமான அல்குர்ஆனின் அத்தியாயம் தாஹா எழுதப்பட்ட ஓலையை கொடுக்கிறார்கள். முதல் முறையாக அந்த வசனத்தை ஓத ஆரம்பிக்கிறார் கல் நெஞ்சம் கரைகிறது. உள்ளம் பிரகாசிக்கிறது உடனே சற்றும் யோசிக்காமல் மின்னலாய் ஸஃபா குன்றினை நோக்கி அதாவது தாருல் அர்க்கம் நோக்கி மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க செல்கிறார் உமர்.
முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய கூரிய உடைவாளுடன் சென்ற உமரின் கைகளை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது திருக்கரங்களை நீட்டுகிறார்கள் உமரோ சற்றும் சிந்திக்காமல் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து, ”வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.(அல்லாஹு அக்பர்)
இஸ்லாத்தை ஏற்ற உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற உயிர்த் தோழராக மாறுகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை மார்க்கத்திற்காக அர்ப்பணித்து வாழ்கிறார். அவர் எந்தளவுக்கு மார்க்கத்திற்காக உழைத்தார் என்பதை இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் நாம் புரிந்து கொள்ளலாம்.
‘நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு ‘மார்க்கம்’ ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி), நூல்:புகாரி)
இஸ்லாத்தின் மீது அளவு கடந்து பிரியமும் கவலையும் கொண்டவர்களாக திகழ்ந்த உமர்(ரலி) அவர்கள் அண்ணலாரின் பிரியமான நபித்தோழராய் திகழ்ந்தது மட்டுமல்ல, மாபெரும் கலீஃபாவாகவும் உயர்ந்தார்கள். அவர்களின் மாபெரும் பிம்பத்தை இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 7ல் பார்ப்போம்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் சமத்துவபுரம்,கலியநகரி,மச்சூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மக்கள் பாதை சார்பாக நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர்,ஏழை எளிய 21 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் பாதை மாவட்ட நீதி திட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் சரவணன், துரைமுருகன் மற்றும் கலியநகரி ஊராட்சி பொறுப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு உணவு வழங்கும் மதுரை நிர்வாகம்
கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி(containment zone area) என அறிவிக்கப்பட்டு மதுரை மாநகரில் மேலமடை,நரிமேடு, தபால் தந்தி நகர், மாப்பாளையம், ஜி.எஸ் நகர், ஆணையூர், குப்புப் பிள்ளை தோப்பு தெரு, மதிச்சியம், மதுரை புறநகரில் மேலூர்,உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நகராட்சி பகுதிகள், கல்லம்பட்டி, கரையிப்பட்டி, சொக்கலிங்கபுரம், மாத்தூர், கீழமாத்தூர் ஆகிய ஊராட்சிகள் மற்றும் எழுமலை பேரூராட்சி ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது.இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் வைக்கோல் உள்ளிட்ட தீவணங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் அவரது மனைவி விமலா (35) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விடியற்காலை மனைவி தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.தலையில் பலத்த காயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தி நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். 1988-ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் அவர் அறிமுகமானார்.இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
கே.எம்.வாரியார்நிருபர்.வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம். ஊராட்சிமன்ற தலைவர்கள் சொந்த நிதியில் வழங்கினார்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தீமை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் உணவு பண்டங்கள் தலைவர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், அதிமுக நிர்வாகி குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டியில் தலைவர் வீர சின்னு தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதாரப் துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக பேரூராட்சியில் பணியாற்றும் சுகாதாரம் துப்புறவு பணியாளர்களுக்கு அரசின் உத்தரவுப்படி பேரூராட்சிகளில் குப்பை மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் துப்புறவு பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கையாக அரசின் சார்பாக முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி, மற்றும் சோப்பு, தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர் ஆகியவைகளை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமைதாங்கி வழங்கினார். நிலக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் ஹசீனா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணி , உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன் , பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கல்யாணி, மஞ்சுளா, இளநிலை உதவியாளர் ஜியாகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நெல்லை சிந்துபூந்துறை மின்மயானத்தில் வைத்து மாலை நடைபெறுகிறது.இயல்பில் உதவும் மனம் படைத்த காவல் ஆய்வாளர் பெரியசாமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு கூட உணவில்லாத சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தில் கொரானோ பாதிப்பு காரணமாக உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஆணைக்கிணங்க 30 கற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்
குடும்பங்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர சூரண பாக்கெட் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவிரியின் உரிமையை பறிக்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்:- மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
காவிரியின் உரிமையை பறிக்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்:- மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
தமிழர்கள் கடும் போராட்டங்கள் வழியே பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்.
அது ஒரு ஆறுதல் என்றாலும், முழு நம்பிக்கையை ஏற்படுத்திடவில்லை. ஏனெனில் இதுவரை அது கூடி கலையும் அமைப்பாகவே இருந்து வருகிறது.
அது அணையின் மதகுகளை திறந்து மூடும் அதிகாரம் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் என்று நான் சட்டமன்றத்திலும் வாதிட்டுள்ளேன்.
இந்நிலையில் அதை மேலும் பலஹீனப்படுத்தும் வகையில் ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தனது ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
நதி நீர் பங்கீட்டு சிக்கல்களுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்து தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு செய்யும் முன்னோட்டமாக இதை பார்க்கிறோம்.
இதுவரை தமிழகத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்டும் விவகாரத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுவும் எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்ற நிலையில், அதை முழுமையான பொம்மை அமைப்பாக மாற்றுவதை ஏற்க இயலாது.
இது தமிழகத்தின் நீராதார உரிமையை அடியோடு பறிக்கும் செயலாகும்.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட , 24.04.2020 ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு, அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசு இம்முடிவினை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு படி , ADSP. கணேசன் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தன்னுடன் ஈடுபட்டு வரும் ஆயுதப் படையை சேர்ந்த அதிவிரைவு படை காவலர்களுக்கு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கி பாதுகாப்புடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரானா தொற்று பாதித்தோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அனுமதிக்கப்பட்டனர். இதில் பரமக்குடி, மண்டபம், ஆனந்தூர் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என ஆண்கள் 3 பேர் குணமடைந்த நிலையில் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த இவர்கள் 3 பேரும், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்த 15 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர், இன்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்னும், 5 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் கொரானா பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் ராமநாதபுரம் பாரதி நகரில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரிந்தது. இதன்படி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய இட்லி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை காலனி ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பாவாணர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் வே.திலீபன் ஏற்பாட்டில் அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் பஜார் காவல் இன்ஸ்பெக்டர் தனபாலன், அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் கே.முத்துக்கண்ணன் ஆகியோர் வழங்கினர். சூரன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. பாவாணர் கல்வி அறக்கட்டளை சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் குருப்ஸ் கயா, மத்திய மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் வி.கே.சேக்கிழார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சிந்தியா திலீபன் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ஆபாசப் படங்களை பகிர்ந்த இளைஞர் அதிரடி கைது..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ஆபாசப் படங்களை பகிர்ந்த இளைஞர் அதிரடி கைது..
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவிட்டு இருந்ததை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். உடனே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் அவர்கள் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை அருகே நோட்டகாரன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 27) என்பவர், தனது உறவினரின் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் எண்ணை பயன்படுத்தி, பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பேஸ்புக் நண்பரான சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை சேர்ந்த வாலிபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராம பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலர் சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இதன்படி வனச்சரக அலுவலர் சதீஷ், வனவர் ராஜேஷ், வனக்காப்பாளர் ஜோசப், வனக்காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தீர்த்தாண்டதானம் பகுதியில் இன்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தீர்த்தாண்டதானம் வீரையா (60) வீட்டில் வெள்ளை அரிவாள் மூக்கன் 3, வல்லூறு 6, கதுவாலி 5 ஆகிய பறவைகள் கூண்டில் அடைக்க பதுக்கியது தெரிந்தது. வீரையா வீட்டில் இருந்து வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி கூண்டு கைப்பற்றப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள், வலைகள் ராமநாதபுரம் வன அலுவலகம் கொண்டு வரப்பட்டது. வன உயிரின காப்பாளர் மாரிமுத்து அறிவுறுத்தல் படி வீரையாவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கைப்பற்றிய பறவைகளை சரணாலயத்தில் வனத்துறையினர் மீண்டும் பறக்க விட்டனர்.
You must be logged in to post a comment.