ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார். டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 213 ரன்களை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா முறையே 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடினார். இவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் குமார், கிளாசன் முறையே 15 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளையும், பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Category:
செய்திகள்
உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை..
by Askar
written by Askar
உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை..
அரசு அலுவலக ஊழியர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் , பணியாற்றும் துறையின் பெயரை ஸ்டிக்கராக ஒட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தனியார் வாகனங்களில் அத்தகைய ‘ஸ்டிக்கர்’களை ஒட்டுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
‘சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும், சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும்.
இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒருசில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப் படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற எழுத்து, முத்திரை, சின்னம் போன்றவற்றை வாகனத்தில் இருந்து நீக்க மே 1-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2 ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலக ஊழியர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் , பணியாற்றும் துறையின் பெயரை ஸ்டிக்கராக ஒட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தனியார் வாகனங்களில் அத்தகைய ‘ஸ்டிக்கர்’களை ஒட்டுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வரியை மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வாங்கும் ஆபீசர்ஸ் இதிலேயும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பராமரிக்கப்படாத சாலை! தலை குப்புற கவிழ்ந்த தாய் மற்றும் மகள்..
by Askar
written by Askar
மதுரை வில்லாபுரம் வீட்டு வழிவாரிய குடியிருப்பு பகுதியில் சரியாக மூடாத கழிவுநீர் மூடியால் தாய் மகள் சென்ற இருசக்கர வாகன விபத்து – தாய் மகள் சென்று விபத்துகுள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..
மதுரை மாநகராட்சி உட்பட 84 வது வார்டு வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காகவும் கழிவுநீர் செல்வதற்காகவும் பாதாள சாக்கடை வேலைகள் நடைபெற்றது. இந்த நிலையில் வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு சாலையில் கழிவு நீர் செல்லும் இடத்தில் மூடி சரியாக மூடிவைக்கப்படாமல் பல நாட்களாக இருந்துள்ளது.
இந்த நிலையில் 26/04/2024அன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் அவரது மகள் இந்த இடத்தை கடக்கும் போது பல நாட்களாக சரியாக மூடாமல் இருந்த கழிவு நீர் மூடியில் இடித்து தலை குப்புற கவிழ்த்து விபத்து ஏற்பட்டது, படுகாயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் தூக்கி உதவி செய்து உள்ளனர்,
அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர், தாய் மகள் இருவரும் விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மற்ற இடங்களிலும் இதுபோன்று முறையாக பழுது பார்க்கப்படாத பாதாள சாக்கடை மூடிகளை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வில்லாபுரம் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..
by Askar
written by Askar
மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தை திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் சமயங்களில் ஜல்லிக்கட்டு போட்டியினை முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் நினைவாக ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று மதுரை மாடக்குளம் பகுதியில் நடத்தப்படும் என வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதை தொடர்ந்து மாடக்குளம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே திறந்த வெளியில் சிலர் அனுமதி இன்றி தற்காலிக வாடிவாசல் அமைத்து பத்திற்கும் மேற்பட்ட காளைகளை வரவழைத்து ஜல்லிக்கட்டு போட்டியை என்பதை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை கண்டதும் இளைஞர்கள் ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவிழ்த்து விடக்காத்திருந்த காளைகள் மற்றும் ஒரு சில இளைஞர்களை பிடித்து எஸ் எஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதி அருகே அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சி செய்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திக்.. திக்.. நிமிடங்கள்- அடுத்து என்ன நடக்கும்? பதட்டமும் பரபரப்பும் நிறைந்த நிகழ்வு..
by Askar
written by Askar
திக்.. திக்.. நிமிடங்கள்- அடுத்து என்ன நடக்கும்? பதட்டமும் பரபரப்பும் நிறைந்த நிகழ்வு..
சென்னை – அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகநூல் காதல் விபரீதம்! முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன். ராஜபாளையத்தில் பரபரப்பு..
by Askar
written by Askar
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி- ஜோதி தம்பதியினர், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் பாண்டிச்செல்வி தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலமாகவும் அவ்வப்போது நேரிலும் சந்திப்பதுமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறியதை அடுத்து குணசேகரன் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் இன்று தனது வீட்டு மாடியில் தனது அக்கா பாண்டீஸ்வரி அவரது மகள் மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் இருந்த நிலையில் குணசேகரன் பாண்டிச்செல்வி வீட்டுக்கு வந்து பாண்டிச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்திற்க்கு வற்புறுத்தியுள்ளார் இதற்கு பாண்டிச்செல்வி மறுப்பு தெரிவித்ததை அடுத்து குனசேகரன் தனது பேக்கிலில் இருந்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிச் சென்றுள்ளார். இதில் வீட்டில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்து நாசமானது.
பாண்டிச்செல்விக்கு முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டும் பாண்டீஸ்வரிக்கு கையில் காயம் ஏற்பட்டும் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பி ஓடிய குணசேகரன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழுசாக சந்திரமுகியாக மாறிய நபர்! நீதிபதி எனக் கூறி கோவில் கோவிலாக சென்ற நபர் கையும் களவுமாக பிடித்து கொடுத்த பழநி முருகன்..
by Askar
written by Askar
பழனி முருகன் கோவிலுக்கு மாவட்ட நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதியை பழனி நீதிமன்ற ஊழியர்கள் புகாரின் அடிப்படையில் அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்கள் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது இதனை பயன்படுத்தி தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் (53) எம்.ஏ படித்த இவர் தான் மாவட்ட நீதிபதி என்றும் இவரே திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தான் பழனி மலை கோவிலில் சாமி தரிசனம் வருகை செய்ய வருவதாகவும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் நீதிமன்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மூன்று நபர்களுடன் வருகை தந்து போது பழனியை சேர்ந்த நீதிமன்ற ஊழியர்கள் தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அனுமதி வாங்க வேண்டும் என்றும் அதற்கு தங்களின் அடையாள அட்டையை கேட்பதாக கூறியுள்ளனர். அதற்கு முன்னுக்கு பின் முரணாக பேசியதில் நீதிமன்ற ஊழியர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அடிவாரம் போலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி நடத்தியதில், தர்மபுரியில் எங்கு பணிபுரிகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் இப்போது தர்மபுரியில் பணியில் இல்லை என்றும் ,தன்னை தேர்தலுக்காக சேலத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்தததையடுத்து இவர் நீதிபதி இல்லை என்றும் ,இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வருவதும் ,போலியாக மாவட்ட நீதிபதி என்ற பெயரை பயன்படுத்தி இது போல பலமுறை தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றிருப்பதும் , தேனி மாவட்டம் தேவதான பட்டியில் உள்ள மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவிலுக்கும், திண்டுக்கல் அருகே உள்ள இராமலிங்க பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு சென்று விட்டு மாலை மரியாதைகளுடன் வந்துள்ளார். இதன் அடிப்படையில் போலி நீதிபதி ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சைரன் வைத்த காருடன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பழநி- ரியாஸ்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோடை விடுமுறை, பயணிகளுக்கு வசதியாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் நீட்டிப்பு..
by Askar
written by Askar
பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.அந்த வகையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோடைகால பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
by Askar
written by Askar
‘கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’
‘அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்’
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை -500க்கும் மேற்பட்டோர் கைது!
by Askar
written by Askar
இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், மக்களிடையே மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது. ஆகவே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும், சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (ஏப்.27) இந்திய தேர்தல் ஆணைய அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சென்னை வடக்கு மண்டலத் தலைவருமான முகம்மது ரஷீத் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக் மற்றும் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், “கடந்த ஏப்ரல் 21, 2024 அன்று, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், இஸ்லாமியர்களை சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அவர்களுக்கு, இந்துக்களின் புனித தாலி (தங்கம்) உள்ளிட்ட சொத்துக்களை பறித்துக் கொடுத்து விடுவார்கள் என்று மதரீதியாக மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையில் மிக மோசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் அரசியல் நலனுக்காக தான் வகிக்கும் பொறுப்பை மறந்து, சிறுபான்மை முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைத்து, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் திரு.மோடியின் பிரச்சாரம் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் மற்றும் நடத்தை விதிகளுக்கு (MCC) முற்றிலும் எதிரானது. எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ சமூகத்தில் உள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை உருவாக்குகின்ற அல்லது வெவ்வேறு சாதிகள், மத அல்லது மொழியியல் பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. பிரிவு 123 (3ஏ)இன்படி தேர்தல் பிரச்சாரத்தின் போது குடிமக்களிடையே பகை அல்லது வெறுப்பு உணர்வைத் தூண்ட ஒரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக செய்யும் எந்தவொரு முயற்சியும் தேர்தல் முறைகேடாகவே கருதப்படும். மேலும், ஆர்.பி. சட்ட விதிகளின் மூலம் தேர்தல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட எவரும் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட சாத்தியமுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றது. எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பதிலாக பாஜக தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தது. ஆகவே, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், மதச்சார்பற்ற அரசமைப்புக் கட்டமைப்பின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மதரீதியாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.பி. சட்ட விதிகளின் மூலம் உடனடியாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தான் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி..
by Askar
written by Askar
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி..
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 ஆகவே இருந்தது. தற்போது ரூ.80 -ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இடங்களுக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரோட்டோர இளநீர் வியாபாரிகளுக்கு வாரத்துக்கு 200 இளநீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம் என்று இளநீர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய ரக இளநீர் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் விலை முன்பு ரூ.35 ஆக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இளநீரின் திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
DREAM -11 ஆப் சாப்ட்வேர் மூலமாக புதுவிதமான மோசடி நடக்கிறதா.? மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..
by Askar
written by Askar
DREAM -11 ஆப் சாப்ட்வேர் மூலமாக புதுவிதமான மோசடி நடக்கிறதா.? மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..
உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரையிலும் மற்றும் கபாடி லீக் ,புட்பால் லீக் உள்ளிட்டபோட்டிகளின் போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்ஐ குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக போட்டி நடத்தி பணம் செலுத்தி அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபர்களுக்கான அதிகபரிசுத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. இந்த ஆஃப்களுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும் விளம்பரம் செய்துவருகின்றனர்.
இதில் தற்போது இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் விளையாடிவருகின்றனர். இந்த ஆஃப்களில் மொத்த போட்டியாளர்கள், குழுப்போட்டியாளர்கள், தனி தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கேற்ப பணம் கட்டி விளையாடப்படுகிறது.
இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டினால் அன்றைய போட்டியின் போது பணம் கட்டி தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு் வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டு ஆடும் ஒவ்வொரு ரன், கேட்ச்,விக்கெட் என அதற்கேற்ப ஸ்கோர் வழங்கப்படும் அதனடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் ஆஃ்ப் மூலமாக வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும்.
இதில் நாள்தோறும் ஒவ்வொரு போட்டிகளிலும் நாடுதோறும் பல கோடிக்கணக்கானோர் 20 ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை பணம் செலுத்தி விளையாடிவருகின்றனர். இந்த விளையாட்டி தொடர்பான ஆஃப்களில் பிரபலமான மொபைல் செயலியான DREAM -11 ஆஃப் மீது பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள் கோடிக்கணக்கான போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக 200 போட்டியாளர்களை போல சொந்த நிறுவனத்தின் ஆட்கள் பெயரில் விளையாடவைத்து தொடர்ந்து மோசடி நடத்தப்பட்டுவருவதாகவும் இவர்களுக்கு முதல்பரிசுபெறும் வகையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிவருவதாகவும், மேலும் இதுபோன்ற நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது போன்ற பொதுமக்களை ஏமாற்றும் Dream -11 நிறுவனத்தில் மோசடி குறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் தமிழக காவல்துறை தலைவருக்கு புகார் அளித்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து பேசிய கல்யாண குமார் : DREAM11 ஆப் மூலமாக பொதுமக்களின் பணத்தை நிறுவனத்தின் ஆட்களை வைத்து அதிக போட்டிகளில் விளையாடவைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்மோசடி நடைபெற்றுவருவதால் இது குறித்து முழுமையான உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தலைமையாசிரியருக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க கிராமத்தையே வலம் வந்த கிராம மக்கள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு தலைமை ஆசிரியராக வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி பணியாற்றி வருகின்றார்.இவர் கடந்த 24 வருடங்களாக இப்பள்ளியில் பணியாற்றிய நிலையில் இன்று பணி நிறைவு பெறுகின்றார்.இவருக்கான பிரிவு உபச்சார விழா சின்னக்குறவகுடி பள்ளியில் நடைபெற்றது.இந்நிலையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் ஒன்றிணைந்து தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்திய தலைமை ஆசிரியருக்கு பித்தளை அண்டா குண்டா மற்றும் சேலைகளை சீர் வரிசையாக கொடுத்து அசத்தினர்.மேலும் தலைமை ஆசிரியை செல்வசிரோன்மணிக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து தலைமை ஆசிரியருடன் கிராமத்தையே ஊர்வலமாக வலம் வந்தனர்.பின்னர் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் தலைமைசிரியருக்கு பல்வேறு பரிசுப்பொருட்களை மாணவ மாணவிகள் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு..
by Askar
written by Askar
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு..
ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது – தமிழக அரசு
அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் – தமிழக அரச
கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை
பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு.
75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் குறித்த அறிவிப்பு வெளியீடு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
by Askar
written by Askar
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர்.
குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலையும், பெரம்பலுார் பகுதியில் அரிசி ஆலை மற்றும் 100 ஏக்கரில் விவசாயத் தோட்டமும் உள்ளது.
திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் உள்ள சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி, தனது தந்தை குழந்தைவேலிடம் சக்திவேல் கேட்டுள்ளார்.
அதற்கு, குழந்தைவேலு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சக்திவேல், தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார் அதன் பின்னர் தந்தையை கொடூரமான முறையில் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.
சொத்து விவகாரத்தில் இருவரிடையே அடிக்கடி தகராறு வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது..
by Askar
written by Askar
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது..
திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45) இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு D.கூடலூரை சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. கணவருடன் பிரிந்து அந்தப் பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்தில் வீட்டில் வசித்து வருகிறார். நிலையில் அந்தப் பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலுபாரதி பாலியல் தொந்தரவு செய்ததாக வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாலுபாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டித் தூக்கிய போலிஸ்..
by Askar
written by Askar
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டி தூக்கிய போலிஸ்..
டெல்லி – துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடி.
வீடியோ வைரலானதை அடுத்து ஸ்பைடர் மேன் மற்றும் அவரது பெண் நண்பரை கைது செய்த போலீசார் ரூ.21,500 அபராதம் விதித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையேமோடியின் பேச்சில் வெளிப்படுகிறது! பிரதமர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!- சீமான் அறிக்கை..
by Askar
written by Askar
இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சமாகும்.
இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இசுலாமியப் பெருமக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இசுலாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாரும் இந்த நாட்டிற்கு அந்நியர்கள் அல்ல.
ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துக்களின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் இலாபத்திற்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும்.
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது. தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமரானால் இந்த நாட்டில் சமத்துவம், சனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத் தன்மையையும் சிதைத்தழிக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க-விற்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது.
நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பாசிச மனப்பான்மைக்கு நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள். ஆகவே, இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
by Askar
written by Askar
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த ரயில் இரு மார்க்கத்திலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று சென்றது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மேலும் 90 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 25ம் தேதி வரை இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
வண்டி எண் 16731 பாலக்காடு – திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம் :
வண்டி எண் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு
ஸ்ரீவைகுண்டம் :
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..
by Askar
written by Askar
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது பேயல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் சுத்தமாகவும். சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவர் சான்று பெற்றிருக்க வேண்டும் மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக உள்ள புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும். unavupukarzęgmail.com என்ற மின்னஞ்சல் மூகமாகவும் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து Food Safety Consumer App-யை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.