வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். வெளிமாவட்டம் மற்றும் மாநில பொதுமக்களை வெளியேறும்படி அவர் கேட்டுக்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், மேற்பார்வையாளர் ரவி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் சென்றனர்.
Category:
செய்திகள்
மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது.
by mohan
written by mohan
மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற மதுரை வாலிபர் கைதுரூபாய 2 கோடி சர்வதேச மதிப்பில் போதை பொருள் மதுரை விமான நிலையத்தில் முதன்முறையாக கைப்பற்றப்பட்டது.மதுரையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் மதுரை விமான நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் இலங்கை செல்லும் பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணைமதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைதுமதுரையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் மதுரை விமான நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் இலங்கைப் பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணை அடுப்பில் மன்னனை இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார்.தொடர்ந்து பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் AC திருமால் ராஜ் கைப்பற்றி ஷகில் அகமது வை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மண்ணெண்ணய் அடுப்பில் மண்ணெண்ணய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார்.தொடர்ந்து பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் AC திருமால் ராஜ் கைப்பற்றி ஷகில் அகமது வை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வில்லாபுரம் பகுதியில் போலீசார் போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்களை போலீசார் துரத்திச் சென்று பிடிக்கும் CCTV காட்சி.
by mohan
written by mohan
தென்தமிழகத்தில் சாலையில் தனியாக நகை அணிந்து நடந்து செல்லும் பெண்கள் மற்றும் மூதட்டியிடம் தங்களை காவல்துறையினர் போல் அறிமுகம் செய்து நடித்து நூதன முறையில் நகைகளை ஏமாற்றி திருடிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறியது. குறிப்பாக இந்த கும்பல் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்று கைவரிசையை காட்டி காவல்துறைக்கு போக்குக் காட்டியது. இதுகுறித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து நூதன முறையில் நகை கொள்ளை திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர்.இந்த நிலையில் நேற்று காலை மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 52 வயது மூதாட்டியிடம் தங்களை காவல்துறையினர் என்று கூறி தனியாக வெளியில் நடந்து செல்பவர்கள் நகைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும் நகைகளை பத்திரமாக கழற்றி தங்களிடம் கொடுக்கசொல்லியுள்ளனர். அதை நம்பி மூதாட்டியும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஒரு பேப்பரில் வைத்து மூதாட்டியிடம் கொடுத்து உங்கள் பைக்குள் வைக்க சொல்லிவிட்டு அந்த நகையை நூதன முறையில் திருடிச்செல்ல முயன்றனர்.சுதாரித்துக்கொண்டு அந்த மூதாட்டி அந்த பேப்பரை திறந்து பார்த்த போது கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக மூதாட்டி கூச்சலிட அவ்வழியாக பணிக்குச் சென்ற தனிப்படை சார்பு ஆய்வாளரிடம் மூதாட்டி நடந்ததைக் கூறிய நிலையில் பணிக்கு சென்ற தனிப்படை சார்பு ஆய்வாளர் அவர்களை பிடிக்க முற்பட்டார். அதில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட மற்றொருவரை கையும் களவுமாக துரத்திப் பிடித்து. பொதுமக்கள் உதவியுடன் அவனை கட்டி வைத்தார்.பொதுமக்கள் உதவியுடன் பிடித்தவனை அவனியாபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில். அவன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மதுஅலி என்பதும் தெரியவந்தது. அவனுடன் வருகை தந்த மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பட்டப்பகலில் போலீஸ் போன்று நடித்து நூதன முறையில் நகை திருட முயன்று உண்மையான போலீசிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீஸ் என்று கூறி சாலையில் தனியாக நடந்து செல்லும் அப்பாவி பெண்களிடம் நூதன முறையில் நகைகளை திருடும் இந்த நபர்கள் தனியாக அல்லது கும்பளாக செயல்படுகிறார்களா.? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழு ஊரடங் நேரத்தில் குடு குடுப் அடித்து, கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு.
by mohan
written by mohan
கொரோனா மற்றும் ஓமிக்ரோன்தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கும் நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை இணைந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடு குடுப்பு அடித்தும், உடல் பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொடுத்தும் , விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி அருகே3,650 கிலோ கஞ்சா கடத்திய 5 பேர் கைது, மோட்டார் சைக்கிள் பறிமுதல்…
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏடுகள் அசாருதீன், குடியரசன் ஆகியோர் வாகன சோதனைசெய்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தனிச்சியத்தை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் என்ற ஜெகன் (32) அழகுமலை(20), உசிலம்பட்டி இடையபட்டியை சேர்ந்தஆனந்தன் (32)ஆகியோர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடினார். உடனே அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது1.750 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரொக்கப் பணம் ரூ 5100 அவர்களி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணையில் பாண்டியராஜன் ரயில்வே கேட் பகுதியில் அவர்களிடம் வாங்கி வந்ததாகஅவர் கொடுத்த தகவலின் பேரில் பாண்டியராஜபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கொண்டையம்பட்டி சேர்ந்த ஜோசப் மணிராஜ் (22), திண்டுக்கல் ஆத்தூர் முத்துராஜ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து1,900 கிலோ கஞ்சாவையும் ரொக்கப்பணம் ரூபாய் 16, 170 ஆகியவற்றை மற்றும் அவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து செய்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசார் வழக்கு .
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் காவல் துறையினர் முழு ஊரடங்கு முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவதாரம் விடுத்தனர்காவல்துறை எச்சரித்தும் அதையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர் மீது வழக்கு தொடரப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து அனுப்பினர் ..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் சிஎம்சி மருத்துவமனை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு.
by mohan
written by mohan
வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு உள்ளாடு மற்றும் வங்காளதேஷம், நேபாள் போன்ற நாடுகளிலிருந்து நோயாளிகள் அதிகயளவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற வரும்போது கோவிட் பரிசோதனை செய்யப்படுகிறது.கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இந்த நோய் தாக்குகிறது.இவர்களுக்கு பூட்டு தாக்கு பகுதியில் புதியதாக அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் வேலூர் மாவட்ட தொற்றுகணக்கில் சேருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).
by mohan
written by mohan
இராபெர்ட் உட்ரோ வில்சன் (Robert Woodrow Wilson) ஜனவரி 10, 1936ல் டெக்சாசில் அமைந்த அவுசுட்டனில் பிறந்தார். அவுசுட்டன் சார்ந்த இரிவர் ஓக்சுவில் உள்ள இலாமார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அவுசுட்டனில் உள்ள இரைசு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டார். இவர் இங்கே பை- பீட்டா- கப்பா கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் முதுபட்டப் படிப்பைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றுள்ளார். வில்சன் பெல் ஆய்வகத்தில் 1944 வரை இருந்தார். இவர் 1944 இல் அப்போது மசாசூசட் கேம்பிரிட்ஜில் உள்ள ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை உதவியாளராக அமர்த்தப்பட்டார். இன்றும் இவர் அம்மையத்தில் தான் பணிபுரிகிறார். வில்சன் நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரில் வாழ்ந்துவந்தார். வில்சன் எலிசபெத் உரோட்சு சாவின் அவர்களை மணந்தார்.
நியூசெர்சியில் உள்ள ஓல்ம்டெல் நகரத்தின் பெல் ஆய்வகத்தில் ஓல்ம்டெல் கொம்பு உணர்சட்டத்தை ஆயும்போது தம்மால் விளக்கமுடியாத இரைச்சல் வாயிலைக் கண்டுபிடித்தனர். புறா எச்சம் உட்பட மற்ற வாய்ப்புள்ள இரைச்சல் வாயில்களை எல்லாம் அகற்றியதும், கடைசியாக இந்த இரைச்சல் அண்ட நுண்னலைக் கதிர்வீச்செனக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெருவெடிப்புக் கோட்பாட்டை நிறுவும் சான்றாக விளங்கியது. வில்சன் ஆர்னோ ஆலன் பெஞ்சியாசுடன் 1964ல் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார். கபித்சாவின் பணிக்கும் மற்ற இருவரின் கண்டுபிடிப்புக்கும் தொடர்பேதும் இல்லை. வில்சனும், பெஞ்சியாசும் 1977ல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றனர். 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெஞ்சியாசுடனும் பியோத்தர் இலியனிடோவிச் கபித்சாவுடனும் பெற்றார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளஞ்சி பகுதி அருகில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் ரோந்து பணியில் இருந்த போது அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த வல்லம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (26) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செட்டியார்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் தார்ச்சாலை.
by mohan
written by mohan
இராஜபாளையம் தொகுதியில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் *கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் 157 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை வார்டு-11,12 நாயுடு தெற்கு தெரு மற்றும் வி.ஐ.பி நகரில் வாறுகாலுடன் கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணியை சென்னையிலுள்ள கண்காணிப்புப் பொறியாளர் திருமாவளன் சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் MLA பார்வையிட்டனர், இந்நிகழ்வில் , தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியில் செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மற்றும் கிராமப்பகுதிகளில் விரைவில் 100% தார்ச்சாலை மற்றும் பேவர்பிளாக் தளம் மூலம் சாலை வசதி மேம்படுத்தப்படும் என MLA கூறினார்.இந்நிகழ்வில் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் உதவி நிர்வாக பொறியாளர் சுரேஷ்குமார் செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்திரவிட்டுள்ளது.பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும், நடைப்பெறும் “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் “மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்” நடைப்பெறாது என, மதுரை மாவட்ட ஆட்சியர்மரு.எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உள்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனே விடுதலை செய் என கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மண்டலம் சார்பில் ஒற்றை கோரிக்கை ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றதுதெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வரவேற்புரை நிகழ்த்தினார் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்!மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை நிகழ்த்தினார்…விடுதலை சிறுத்தைகள் கட்சிமாநில துணை பொதுச்செயலாளர்வன்னி அரசு,தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது,எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்தீக், நஜ்மா பேகம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்கள்இறுதியாக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தடுத்த பொதுமக்கள் மூன்றாவது முறையாக திரும்பி சென்ற அதிகாரிகள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப் பெருமாள் பட்டி கிராமத்தில் விவசாய பாதைக்கு இடைஞ்சலாக உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டிய வீட்டின் படிக்கட்டுகளை அகற்ற சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அங்கு ஜேசிபி வாகனத்துடன் காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செய்வதறியாது திகைத்து நின்றனர் பின்பு மற்றொரு நாளில் அகற்றலாம் என்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர்.இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்த மகாராசன் கூறும்போது ஆக்கிரமிப்பை அகற்ற பல்வேறு மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை இதனால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உத்தரவு வாங்கி வந்து அகற்ற காத்திருந்த வேளையில் பொதுமக்கள் என்ற போர்வையில் சிலரின் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் சென்றது மிகுந்த கவலை தருவதாக தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் இது போன்று மூன்று முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி எடுத்தும் அகற்ற முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார் இதனால் விவசாய விலை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார் ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய விளை பொருளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்இதுகுறித்து பொது பாதையை ஆக்கிரமித்து தாக கூறப்படும் பெண் கூறும்போதுபத்திர படி சரியாக வீடு கட்டி இருப்பதாகவும் அரசு உத்தரவு போட்டுள்ளது என்று ஏதோ காரணம் சொல்லி படியை இடிக்க வருவதாகவும் பாதையை ஆக்கிரமித்து கட்டவில்லை என்றும் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் வாசல் படியால் பொது பாதைக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லை என்றும் தெரிவித்தார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரானா அச்சத்தின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் – 2 பேர் பலி. 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்ஜிஆர் நகரைச்சேர்ந்தவர் ஜோதிகா, இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.முன்னிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா மற்றும் தனது தம்பிகளுடன் சாணி பவுடரைகுடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் ஜோதிகா மற்றும் ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர் மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பைபாஸ் பகுதியில் வாரச்சந்தையில் குவிந்த மக்களால் நோய்த்தொற்று பரவும் அபாயம்.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்கிரான் தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கு இன்றே வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலை பகுதியில் வழக்கமாக செயல்படும் வாரச்சந்தையில் காய்கறி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.தனிமனித இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அதிகளவொல் காய்கறிகளை வாங்க கூடியுள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.கடந்த வாரம் வரை ஒருநாள் பாதிப்பு 50க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக கொரானா பாதிப்பு என்பது அதிகரித்து உள்ளது.கொரானாவை கட்டுப்படுத்த 12 குழுக்கள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் உள்ள நிலையில் வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டத்தை முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கொரானா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாரச்சந்தையில் கூட்டமாக கூடியது நோய்த்தொற்று வேகமாக பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை:அரசு பிறபித்த ஊரடங்கு காரணமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், மருந்தகம், பால் விற்பனை நிலையங்களை தவிர மற்ற வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைகப்பட்டிருந்தன.இதனால், மதுரையில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலர் உணவுக்காக அலைய நேரிட்டதாம்.சில இடங்களில் போலீஸார் தடுப்புகளை சாலையில் வைத்து, இரு சக்கரவாகனத்தில் வருவோரை தீவிரமாக விசாரித்து அனுப்பினர்.வெளிமாநில லாரிகளை தவிர உள்ளூர் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மதுரை- சிவகங்கை சாலையில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆலயங்கள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி தனூர் மாத பூஜை நடைபெற்றது.கொரானா பெரும் தொற்று காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால், சாலைகளான, பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாநகர் முழுவதும் சைக்கிள் முதல் இருசக்கர வாகன வரை பொதுப் போக்குவரத்து மற்றும் அனைத்து வாகனங்களும் செல்லாமல், சாலைகள் வெறிச்சோடியது. மேலும், பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்த நோபல் பரிசு பெற்ற ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினம் இன்று (ஜனவரி 9, 1922).
by mohan
written by mohan
ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana) ஜனவரி 9, 1922ல் பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் கிராமத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பம் வறுமையில் வாடிய போதும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தந்தை மிகுந்த ஆர்வம் காட்டினார். சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். மேற்கு வங்கத்தில் உள்ள மூல்டான் என்ற ஊரில் அமைந்திருந்த டி.ஏ.வி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ‘இரத்தன்லால்’ என்ற ஆசிரியர் இவரைக் கவர்ந்தவராக விளங்கினார். பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்த இவர் லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். இங்கு பேராசிரியரும் சிறந்த ஆய்வாளருமான ‘மதன்சிங்’ என்பவரின் மேற்பார்வையில் 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
குரானா 1945ல் இந்திய அரசின் உதவித்தொகை கிடைக்கப்பெற்று இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இங்கு ‘ரோஜெர் ஜே.எஸ்.பீர்’ என்பவர் இவருக்கு வழிகாட்டியாய் விளங்கினார். இங்கு வந்த பிறகு மேலைநாட்டுக் கலாச்சார வழியைப் பின்பற்ற ஆரம்பித்தார். 1948-49களில் சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். விலாடிமிர் பிரிலாக் என்ற பேராசிரியர் இவருடைய முன்னேற்றத்திற்கும் அறிவியல் ஆர்வம், பணியில் ஈடுபாடு, அதற்கேற்ற திறன்களை வளர்ப்பது ஆகியவற்றின் வழிகாட்டியாக விளங்கினார். 1952ல் கனடா சென்ற குரானா, அங்கு சுவிஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மகள் எஸ்தர் எலிசபெத் சிப்லர் என்ற மங்கையின் நட்பு கிடைத்தது. பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். 1949 இறுதியில் இந்தியா இந்தியா திரும்பினார். இந்தியாவில் பல மாதங்கள் வேலையின்றி வாடிய குரானா மேற்கொண்டு ஆய்வு செய்யும் எண்ணத்தோடு மீண்டும் இங்கிலாந்து சென்றார்.
முனைவர் ஜி.டபிள்யூ.கென்னெர், நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர் அலெக்சாண்டர் டாட் என்பவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952ல் பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம் என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார். முனைவர் ஷ்ரம் அவர்கள் அளித்த உற்சாகத்தினாலும் முனைவர் ஜேக் கெம்பெல் அவர்களின் ஆலோசனையுடன் பாஸ்பேட் எஸ்டர்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் மேலும் பலரும் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்த போதும் ‘முனைவர் கோர்டன் எம். டெனெர்’ என்பவர், குழுவின் ஆய்வு முன்னேற்றதிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார். 1960ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து அனைத்து ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர் வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
குரானா 1959ல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். அடுத்த ஆண்டில் குரானா அமெரிக்கா சென்று விஸ்கான்சின் பல்கலைக்கழக நொதி ஆய்வு நிறுவனத்தில் தமது நோபல் பரிசு சக ஆய்வாளர் மார்சல் நோரென்பர்க் உடன் சேர்ந்து செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர்களின் ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் அவர் ஆற்றிய ஆராய்விற்காக 1968ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி (Holley) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் 1970ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது. எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகள் (bacteria) மனித மற்றும் விலங்கினங்களின் குடற் பகுதியில் இருப்பது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே அதன் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
குரானாவும் அவருடைய குழுவினரும் இந்நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக முயன்று இந்நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர் 1976 ஆகஸ்டில் இச்செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியில் செருக, அது இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தமது ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவுக்கும் அவருடைய குழுவிலிருந்த 24 உதவியாளர்களுக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. நோபல் பரிசுடன் கூட கொரானா மேலும் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார். 1969ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. 1968ல் ஹாவாயில் ஹோனலூலுவில் அமைந்துள்ள வாட்டுமுல் அமைப்பு ‘சிறப்பு மிக்கச் சேவைக்கான விருதை’ இவருக்கு அளித்துச் சிறப்பித்தது. 1971ல் பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கழகத்தின் ‘செயல்வெற்றிச் சாதனைக்கான விருதை’ (American Academy of Achievement Award)அளித்தது. 1972ல் கொல்கொத்தாவில் உள்ள போஸ் நிறுவனம் ‘ஜே.சி. போஸ்’ பதக்கத்தை அளித்தது.
1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் சிகாகோ பிரிவு வில்லர்ட் கிப்ஸ் பதக்கத்தை இவருக்கு வழங்கியது. ‘கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது’, ‘லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு’ ,’ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது’ முதலிய விருதுகளை கொரானா பெற்றுள்ளார். அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் முதலியவற்றில் இவர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1971ல் ரஷ்யாவின் அறிவியல் கழகதில் அயல் நாட்டு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். 1974ல் இந்திய வேதியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினராக அமர்த்தப்பட்டார். ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் இவர் ஓர் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத்துறை, இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து 2007ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கியது. இது கொரானாவின் பெயரில் தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்திய மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை, மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு முதலியவற்றில் முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. 2009 -ல் கொரானாவை இந்நிகழ்வுக்கு வரவழைத்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள். புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்த நோபல் பரிசு பெற்ற ஹர் கோவிந்த் குரானா நவம்பர் 9, 2011ல் தனது 89வது அகவையில் மாசசூசெட்ஸ் கன்கார்ட், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
10 வயது சிறுமியின் சிலம்ப சாதனை “நோபல் புக் ஆப் ரெக்கார்டில் “இடம்பெற்றது.
by mohan
written by mohan
பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்பச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.பத்து வயதில் பன்னிரெண்டு (12) பதக்கங்கள் மற்றும் உலக சாதனை. சாதனை சிறுமி ஹரிணி மதுரை காமராசர் பல்கலைக்கழகத் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர். மேஷாக் பொன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழியல் துறைத் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் இயக்குநர் (பொ) முனைவர் சத்தி யமூர்த்தி ஒருங்கிணைப்பில், துணைபதிவாளர் மீனாட்சிசுந்தரம், நோபல் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பாளர்.கௌதம் முன்னிலையில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை சோம சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணப்பாண்டியன்-ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் ஹரிணி (வயது10)கடந்த 6 வயது முதலே சிலம்பம் பயின்று மாநில அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுளார்.தற்போது “நோபல் புக் ஆப் ரெக்கார்டு” சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கு அந்நிறுவனத்தால் தேர்வு செய்யபட்டுள்ளார். பத்துவயதில் 10 நிமிட’ம் 10 நொடிகளில் சிலம்பக் கலையில் 32 தற்காப்பு முறைகளை பயன்படுத்தி சாதனை புரிந்துள்ளார்.சமுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்டு தற்காப்பு முறையை பயன்படுத்தி பாலியல் தொல்லை , மற்றும் சமுக விரோதிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும். தன்னம்பிக்கையளிக்கும் சிலம்ப பயற்சி உதவுவதாக சிறுமி ஹரிணி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் தொடங்கியது. கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர்.இதில், நாட்டு காளை மாடுகள் மட்டுமே அனுமதிக்கபடும். திமிலின் அளவு, வயது மூன்றரை, நான்கு பற்கள் உடையது, மாட்டு கொம்புகள் இரண்டுக்கும் நடுவில் குறிப்பிட்ட அளவு இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர்.
மேலும், நாட்டு மாடுகள் அல்லாததை தகுதி நீக்கம் செய்தனர். மாட்டின் முதுகில் தழும்புகள் ஏதேனும் இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர்.காளை வளர்ப்பவர்கள் காளைகளுடன் சேர்ந்து நின்ற புகைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை கொண்டு வந்து மருத்துவரிடம் சமர்ப்பித்தனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, காளைகள் துன்புறுத்தலை தடுக்கவும் காளை உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வழங்கினர்.
இந்த பரிசோதனை முகாமானது, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. தகுதியுள்ள காளைகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலக்கால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம்: வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஒரு அணியாகவும், வார்டு உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் இருப்பதால், ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலக்கால் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் திமுகவை சேர்ந்தவராகவும், வார்டு உறுப்பினர் ஒன்பது பேர்களில் பாதிக்கு மேற்பட்டோர் திமுகவை சேர்ந்தவர் ஆகவும், மீதிப்பேர் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பதாகவும் தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் ,அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு அதிகாரிகளால் வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து சமரசம் செய்து வைப்பது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் தான் தாழ்த்தப்பட்டோர் என்பதால் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக வார்டு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய தன் காரணமாக அனைவரையும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரவழைத்து விசாரணை செய்து அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குப் பின்பும் சமரசம் அடையாத தலைவர் ,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால், ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் திமுக அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதில், வார்டு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் 7 பேர் ராஜினாமா செய்யப் போவதாக கூறுகின்றனர். மேலக்கால் ஊராட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையால் பொட்டல்பட்டி ஆகிய கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு உடனடியாக ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் தடையில்லாமல் நடைபெற உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.