தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் (35). மருத்துவ பிரதிநிதி. இவர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், தேனி செல்லும் அரசு பஸ்சில் ஏறி நேற்று29.08.19 மாலை 4 மணிக்கு அமர்ந்து இருந்தார். அப்போது கண்டக்டர் அலெக்ஸ், டிக்கெட் கேட்டுள்ளார். ‘‘பஸ் எப்போது கிளம்பும்’’ என விஜய் கேட்டுள்ளார். இதற்கு கண்டக்டர், ‘‘இன்னும் 10 நிமிடத்தில் கிளம்பி விடும்’’ என கூறினார். ‘‘அதற்குள் டிக்கெட் போட வேண்டுமா’’ என விஜய், கண்டக்டர் அலெக்ஸ் மற்றும் டிரைவர் தினகரனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கண்டக்டரும், டிரைவரும் விஜயை தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளினர். பின்பு பஸ்சில் இருந்து இறங்கி வந்தும் டிரைவரும், கண்டக்டரும் விஜயை தாக்கினர். பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் மத்தியில் பயணி ஒருவரை டிரைவர், கண்டக்டர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து டிரைவர், கண்டக்டர் மீது விஜய், திண்டுக்கல் நகர் போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் காயமடைந்த விஜய், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல கண்டக்டர் அலெக்ஸ், டிரைவர் தினகரன் தங்களை விஜய் தாக்கியதால், காயமடைந்ததாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் விஜய் மீது போலீசில் அளித்துள்ளனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இருதரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Category:
செய்திகள்
தடை செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு
by mohan
written by mohan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் நடராஜ் (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவருடைய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அதே கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி ராஜகோபால் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களுர் மருத்துவமனைகளிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்தும் மருத்துவ கழிவுகள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கழிவுகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரியின் மூலம் கொண்டு வந்து தரம் பிரித்து எரிப்பதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு தலைசுற்றல் மூச்சு தினறல் மற்றும் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் இன்று காலை மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர் பஞ்சப்பள்ளி காவல் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி பொதுமக்களை கலைந்து போக சொன்னதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், துனை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர் 2 நாட்களில் அங்கு கொட்டி வைத்துள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் ..அதனையடுத்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது இச்சம்பவம் இப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம். காட்பாடியில் மணல் வண்டி ஓட்டி வந்த இளைஞர் உயிரிழப்பு…காட்பாடி விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த நரேந்திரன்(20) என்பவர் பாலாற்றில் இருந்து மணல் மாட்டுவண்டி ஓட்டிவரும் போது …வண்டியில் இருந்து தவறி விழுந்து வண்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு…இது குறித்துவிருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 15-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடந்தது.
by mohan
written by mohan
காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 204 பேருக்கு பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்றார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பல் கலைக் கழக பதிவாளர் பெருவழுதி மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றியும்,சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கிலும் அரசு வகுத்துள்ள சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி துவக்கி வைத்தார். மேலும் எஸ்.ஐ-க்களான உமா மகேஸ்வரி, ஜெயராஜ், கல்யாண சுந்தரம், எஸ்எஸ்ஐ செய்யது இப்ராகிம் மற்றும் காவலர்கள்,பொதுமக்கள்,ஆகியோர் ஹெல்மெட் அணிந்து மாடசாமி கோவிலிருந்து கிளம்பிய விழிப்புணர்வு பேரணி பஸ்ஸ்டாண்ட் ரோடு, மற்றும் முக்கிய சாலைகள் வழியாக தினசரி மார்க்கெட் வந்தடைந்தது.
பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ 1000 அபராதம், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ 1000 அபராதம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ 5000 அபராதம் மற்றும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டப்பட்டு விழிப்புணர்வு பேரணி இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏழை அந்தண சமுதாய மாணவனுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகையை மாநில மகளிரணிசெயலாளர் உமா கனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் மகளிரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள்..வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.அந்தணர் முன்னேற்ற கழகம்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான டாக்டர் அபி சரவணன்.!
by mohan
written by mohan
தற்போது மலேஷியாவின் தேசம் ஊடக சாதனையாளர் விருது விழாவில், அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் விருது பெற்றார்.!மலேஷியா மண்ணின் முன்னணி பத்திரிகை நிறுவனமாகத் திகழும் “தேசம் ஊடகம்” நடத்திய 2018, 2019 ம் ஆண்டிற்கான தேசம் சாதனையாளர் விருது விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு மொத்தம் 130 விருதுகள் வழங்கி வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.மலேசியா சாதனையாளர் புத்தகத்தில் பெயர் பதித்த தேசம் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 8 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தேசம் பத்திரிகை நிறுவனர் குணாளன் மனியம் தலைமையில் கடந்த 24/08/2019 அன்று மலேசியா தலைநகரமான கோலாலம்பூரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பிரபல நடிகருமான டாக்டர் அபி சரவணன் அகில உலக அளவிலான நடிகர்களில் “சிறந்த சமூக சேவகருக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சமீப காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வித பிரதிபலனும் பாராமல் தமது சொந்த பணத்தை கொண்டு உதவிகள் செய்ததும்,அதே போல் தேனி குரங்கனி மலை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, சமீபத்தில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்து விவசாயிகளுக்கு ஆடு மாடுகள் வழங்கியது, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, மிகவும் முக்கியமாக அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு பல நூறு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வந்த நிலையில் தமிழகத்தில் இருந்து டாக்டர் அபி சரவணன் லட்சக்கணக்கான அத்தியாவசிய பொருட்களுடன் நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து உணவு, உடை, தண்ணீர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார், இதன் காரணமாகவே டாக்டர் அபி சரவணன் அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விருதை மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் வழங்கி கௌரவித்தார்.நடிகர்கள் பலர் பணம் ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல் பட்டு வரும் நிலையில் நடிகர்களில் இப்படியும் ஒரு சமூக ஆர்வலரா என்று அந்த அரங்கில் குழுமியிருந்த அதிகாரிகளும் பொது மக்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அபி சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பாராட்டி மகிழ்ந்தனர்.மேலும் டாக்டர் அபி சரவணன் பல்வேறு வகையான சாதனைகளுக்காக பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.”மண்ணின் மைந்தன்””தங்க மகன்””அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர்”இன்னும் பல்வேறு வகையான விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற மீனவர்கள் முயற்சியை போலீசார் முறியடித்தனர்.
by mohan
written by mohan
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன் தூள், மீன் எண்ணெய் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ஜூலை 1, 2017-முதல் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக படகுகளை நாட்டுடமையாக்கக் கூடாது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஆக. 24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.29), ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவ சங்க நிர்வாகிகள் போஸ், தேவதாஸ், சேசு ராஜா, சகாயம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலுக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு பேரணி சென்றனர்.ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் ரயில் மறியலுக்கு முயன்ற மீனவர்களை அரசு மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,அரசு மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நகர் செயலாளர் கே.இ.நாசர் கான், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜா மணி, தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு
by mohan
written by mohan
29.8.2019 அன்று வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் களஞ்சியம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ களஞ்சிய முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி முன்னிலை வகித்தார்.முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சேவியர் ராஜப்பா அவர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.சிறுசேமிப்பு குறித்த தகவல்களை வழங்கினார்கள்SBI LIFE INSURANCE கிளை மேலாளர் அஸ்மத் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களை கேட்டு அறிந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானிப்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து ஒரே நாளில் தானிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 11 கள்ளச்சாராய வியாபாரிகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை .
by mohan
written by mohan
திருவண்ணாமலை நகரில் உள்ள புதுத்தெரு ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவர் மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலாள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஸன் மேல் நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சதிஷ்குமார் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிவா ஆகிய இரண்டு பேருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் காய்ச்சல் குணமடையததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளனர்.மருத்துவர்கள் சோதித்ததில் சதிஷ் மற்றும் சிவா ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவலாயங்களில் கொடி ஏற்றம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் கொடி ஏற்றம் துவங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு பல நாடுகளிலிருந்து Uக்தர்கள் வருவார் கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.77.23 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒருகிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கிகூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் ஆக. 21 முதல் 31 வரை, தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இதுவரை 265 கிராமங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5,600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மீதமுள்ள கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் ஆய்வு
செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் மீது தீர்வு காண அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலை புனரமைப்பு பணிகளில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்” என்பதை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் திறந்த வெளி மலம் கழித்தலற்ற முழு சுகாதார ஊராட்சிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரித்து பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கலாம். தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிப்பு அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது. பொதுமக்கள்,
வணிகர்கள் , வியாபாரிகள், உணவு விற்பனையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பிளாஸ்டிக் பொருட்களை
தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், மாவட்;ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணக்கண்ணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கோபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல்
உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு துறை பணியில் சேர சிறப்பு பயிற்சி விழிப்புணர்வு கருத்தரங்கு
by mohan
written by mohan
இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடற்படை பணியில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சேருவதற்கானபயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் தமிழ்நாடு மீன் வளத் துறை சார்பில் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.மண்டபம் மீன் வளத் துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் தலைமை வகித்தார். பாதுகாப்பு அகாடமி இயக்குநர் ஏ.சுரேந்திரன் கூறுகையில் விழுப்புரம், கடலூர், சீர்காழி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு அமைப்புகளான கடலோரக் காவல், கப்பற்படையில் நேவிக்(பொதுப்பணி), மாலுமி உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வில் பங்கேற்பது தொடர்பாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி இப்பயிற்சியில் சேர விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 17- 22 வயது, குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம், பார்வை திறன் 6/6- 6/9 உடைய இளைஞர்கள் கல்வி தகுதி அடிப்படையில் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். இவர்களுக்கு சென்னையில் 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் அடிப்படையில் இந்திய கடலோரக் காவல், கப்பற்படை, விமானப் படை ஆகியவற்றில் பொது பிரித, மாலுமி ஆகிய பணிகளுக்கான எழுத்து, உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு எளிதில் சேர வாய்ப்புண்டு என்றார்.
இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் , பாம்பன், மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் , மீனவ இளைஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மீன் வள ஆய்வாளர்கள் ரகுமத்துல்லா கான் (ராமேஸ்வரம் ), சகுபர் சாதிக் (மண்டபம்), மீன்வள சார் ஆய்வாளர் தர்மதுரை, மீன் வள மேற்பார்வையாளர் சர்புதீன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயனி ஒருவரை சூழ்ந்து தாக்கிய நடத்துனர்கள்
by mohan
written by mohan
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடத்துநர் மற்றும் பயணிக்கு இடையே கடுமையான மோதல் ஒருவரை ஐந்துக்கும் மேற்பட்ட நடத்துனர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியை கண்ட கூடி நின்ற மற்ற பயணிகள் அவர் தவறே செய்திருந்தாலும் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தது தவறு என்று கூறினர்.இந்நிலையில் தாக்கிய நடத்துனா்கள் காயம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக தேனி, போடி, கேரளா, திண்டுக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லுவதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில் உசிலம்பட்டியின் ரவுன்டானா பகுதியான தேவர்சிலை அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகனை சாலையிலே வழிமறித்து சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால் பின்னால் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்தை இயக்கும் வான ஓட்டிகள் பெரிதும் சிரமபட்டுவருகின்றனர். பெரும்பாலும் சரக்கு வாகனங்களை சோதனை செய்வதலில் ஆர்வம் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையே வழிமறிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
போக்குவரத்தை சரிசெய்யும் போலீசாரே போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகனசோதனை செய்யாமல் வேறு இடத்தில் சோதனை மேற்கொண்டால் நெரிசலை தவிர்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அராஜகம் செய்யும் தலைமை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
by mohan
written by mohan
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நீண்ட காலமாக நிலவி வந்த மருத்துவர் பற்றாக்குறை நீங்கி தற்சமயம் சுமார் 12 மருத்துவர்கள் வரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவை இப்பகுதி பொதுமக்களின் மருத்துவத் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாய் உள்ளது. இருப்பினும் இங்கு மேல் அதிகாரிகளின் அதிகாரங்களைக் காட்டிலும் இங்கு தலைமை செவிலியராய் பணிபுரியும் சந்திரா என்பவரது அதிகாரம் மேலோங்கியுள்ளது. இவரின் செய்கையால் இம்மருத்துவமனையில் பணிபுரியும் இடை நிலை ஊழியர் முதல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வரை பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்களின் வரிப்பணம் கொண்டு அமைக்கப்பட்ட பொதுமக்கள் அமரும் இருக்கைகளை எந்த அறிவிப்பின்றி மேல் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் அப்புறப்படுத்தியுள்ளார். மேலும் மருத்துவமணைக்கு மருத்துவ தேவையை எதிர்பார்த்து வரும் பொதுமக்கள் அவசர சிகிச்சை பிரிவு அருகே சற்று இளப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் அப்புறுப்படுத்தியுள்ளனர். அதே போல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எல்லா இருக்கைகளும் அகற்ற திட்டமிடபட்டுள்ளதாக செவிலியர் சந்திரா இருப்பதாக மருத்துவ மனை வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் இம் மருத்துவமனையில் பிரசவ பிரிவு, (ம) பிரசவ பண்டுவ பிரிவில் அதிக அளவில் ஊழல் நடைபெற்று வருகின்றது. இது குறித்து தலைமை செவிலியர் மீது இணை இயக்குநர் சரஸ்வதியிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரக்கூடிய நிர்வாகமே அதை இடித்து தரைமட்டமாக்கி பல மரணங்கள் நிகழ காரணமாக இருக்கப் போகும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அதிகார போதையில் ஜாதி வெறியோடு செயல்படும் செவிலியர்களின் கண்காணிப்பாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டும் அல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி பல முறைகேடுகளை செய்துவரும் இவரை வேறு மாவட்ட மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யவும், இவரின் மீது சுகாதார துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் சுங்கச்சாவடியில் துப்பாக்கிசூடு நடத்தி தப்பியோடிய 5 நபர்களை உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சுங்க கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர்களில் 5பேர் தப்பியோடிய நிலையில் அவர்கள் தேனியை நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார்கள் மடக்கிபிடிப்பதற்கான உஷார் நிலையில் இருந்தனர். அப்போது உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் காரில் வந்துகொண்டிருந்தபோது போலீசாரை கண்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஆட்டோவில் ஓட முயன்றனர். உடனே போலீசார் ஆட்டோவை நோக்கி பின்தொடர்ந்து மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரனை நடத்தியதில் என்னூரைச் சேர்ந்த தனசேகரன், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹரிகிருஷ்ணன், வேலூரைச் சேர்ந்த துளசிராஜன், மற்றும் மதுரையைச் சேர்ந்த ரகுபதி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 கள்ள துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறையில் பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் பெருமைகளையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் மாணவ மாணவிகள் வரலாற்றை அறிந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைமாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(27) இவர் மீது கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ளவர்களிடம் தகராறு செய்து சிறை சென்று மீண்டும் பெயிலில் வெளிவந்தவர் பரமேஸ்வரி என்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் கொடுத்த புகாரில் காடுபட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.