மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது என நமதுகிழை நியூஸ் இணையதள செய்தியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத்தொடர்ந்து தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் தற்போது சாலையை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சியும் தேசியநெடுஞ்சாலை துறையும் கண்டுகொள்ளாத நிலையில் காவல்துறையை நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் போக்குவரத்து காவல்துறை ஜேசிபி எந்திரம் மூலம் சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.