மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்காநத்தம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தற்பொழுது பெய்த மழையில் மேலும் சாலைகள் சேதம் அடைந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் ஏற்படுகிறது. நடு சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை சொல்லியும் தேசிய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்குமா
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.