இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் ஷிபான்மருத்துவமனை அருகில் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் 35வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.இப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
Category:
மாவட்ட செய்திகள்
வாணாபுரம் அருகே மழை பெய்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் சிலை ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியுள்ளன. ஏரி மற்றும் குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழக அரசு சீரமைத்து வருகிறது. அந்த வகையில் வாணாபுரம் பகுதியிலுள்ள குங்கிலிய நத்தம், சதா குப்பம் மற்றும் தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளும் சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது ஏரிக்கரைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஏரிக்கு வரும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும், தூர்வாராததாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது வெகுவாக குறைந்து போனது.வாணாபுரம் அருகே உள்ள நரியாப்பட்டு, தச்சம்பட்டு, சர்க்கரதான்மடை, சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஏரிகள் வறண்டு கிடக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தச்சம்பட்டு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் சிறிதளவுகூட வரவில்லை. மேலும் ஏரி பகுதிகளுக்கு வரும் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போனதாலும், கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்று போனது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதியில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டுவது கிடையாது.சாத்தனூர் அணையின் தண்ணீரை நம்பியே நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய சூழல் உள்ளது. தற்போது சாத்தனூர் அணைக்கும் தண்ணீர் குறைவாக வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுமா? என்பது தெரியவில்லை.மேலும் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பார்களா? திறக்க மாட்டார்களா? என்றும் தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கால்வாய்களை தூர்வாரினால் மழையினால் வரும் தண்ணீர் ஏரிக்கு செல்ல வசதியாக இருக்கும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்க இடம் நிலப்பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த இடத்தில் விநாயகர் கோவில் உள்ளது அந்த கூட்டுறவு சங்கத்தில் திமுகவினர் ஆதிக்கம் இருந்து வருகின்றது. கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் கோவில் பகுதியை அபகரிக்க திமுகவினர் முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. கூட்டுறவு சங்கம் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்த தின் பேரில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை மற்றும் வருவாய்த்துறையினர் 92 சென்ட் நிலத்தை அளவீடு செய்து அறிக்கை அனுப்பப்பட்டது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
by mohan
written by mohan
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தூத்துக்குடி முதல் கொல்லம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் ஆலங்குளம் சாலையானது போக்குவரத்து இடையூறு, சாலை விபத்து என அடிக்கடி நிகழ்ந்த வண்ணமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆலங்குளம் தனி பிரிவு காவலர் ஜெயபாலன் சமூக ஆர்வலராக களத்தில் இறங்கி பல்வேறு சமூக ஆர்வலரை இணைத்து கொண்டு சாலை நடுவே பேரி கார்டு, கண்காணிப்பு கேமிரா, சிக்னல் விளக்கு , மருத்துவ வசதியுடன் போக்குவரத்து கண்காணிப்பு அறை, என பல பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் இதனை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் திறப்பு விழா காத்திருக்கையில் காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு பல்வேறு அமைப்பினர் மற்றொரு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.அதாவது இரண்டாவது கட்டமாக நல்லூர் விலக்கு முதல் ஆண்டிப்பட்டி விலக்கு சாலை வரை நடுவே பேரி கார்டு அமைக்க வேண்டும் இதனால் ஆலங்குளம் பகுதியில் விபத்து குறையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) , பீடி தொழிலாளர்கள் சங்க பெண்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 19/10/2019 அன்று மதுரை பசுமலை – மூலக்கரை
ரவுன்டானாவில் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரும் உயிர்பலி பயத்தை கொடுத்துக்கொண்டிருந்த சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலையை பற்றிய செய்தியை மதுரை நிருபர் காளமேகம் இணையதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். அந்த செய்தியின் எதிரொலியாக சிதிலமடைந்த சாலை மீது உடனடியாக நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் வொளியிட்டுள்ள நன்றி அறிக்கையில், சகோதரர், ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர், மதுரை, திரு. காளமேகம், அவர்களின் துரித செயற்பாட்டால், துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நெடுஞ்சாலை சரி செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் இயல்பான பயணத்திற்கு வித்திட்டுள்ளார். இத்தருணத்தில் அருமை சகோதரருக்கு பேரன்பும், வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை, நம் நிருபர் வி.காளமேகம் மற்றும் அவரை ஊக்கப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஜா புயல் இழப்பீடு- குறைபாடுகளை களைய வேளாண்துறை முதன்மைச் செயலாளரிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
by mohan
written by mohan
காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் பாதிப்படைந்து 2018 – 19 நிதி ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் துறை முதன்மை செயலாளர் உயர்திரு ககன்தீப்சிங்பேடி இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து எடுத்து கூறினார்.அப்போது அரசு துணை செயலாளர் ரபியுல்லா, தேசிய வேளாண் காப்பீடு நிறுவன சென்னை மண்டல மேலாளர் ராஜேஷ், அலுவலர் சூரியநாராயணன், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் சென்னை மண்டல தலைவர் இந்திரா காந்தி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்த சந்திப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், நாகை வடக்கு மாவட்ட தலைவர் சீர்காழி வைத்தியநாதன், சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், செயலாளர் தி நகர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களைசந்தித்துபேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:காவிரி டெல்டா மாவட்டங்களில் 2018-19 காப்பீட்டிற்க்கான இழப்பீடு வழங்குவதில் உள்ள குளறுபடிகளால் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு எடுத்துரைக்க வேளாண் துறை முதன்மை செயலாளரிடம் நேரில் எடுத்துக் கூறப்பட்டது.காப்பீட்டு நிறுவனம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 562 கிராமங்களில் 428 கிராமங்களுக்கு ரூ 290 கோடி விட்டுவிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
விடுபட்டுள்ள 134 கிராமங்களுக்கும் மகசூல் இழப்பின்படி இழப்பீடு வழங்க கணக்கீட்டுப் பணி நிறைவுற்றுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.குறைவான இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள கிராமங்களில் கஜா புயல் பாதிப்பினை கணக்கில் கொண்டு பாதிப்பின் இழப்பீடு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு உரிய இழப்பீடு கிடைப்பதற்கு தமிழக அரசு சார்பில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டத்தில் 16000 ம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை விடுபட்டுள்ளதாகவும், இரு இடங்களில் காப்பீடு செய்துள்ளது குறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகளை ஓரிரு தினங்களில் சென்னைக்கு அழைத்து காப்பீட்டு நிறுவனத்துடன் ஒத்திசைவு கூட்டம் நடத்தப்பட்டு உண்மையான விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் அறுவடை ஆய்வறிக்கையின் அடிப்படையில் விடுபடாமல் அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்க படும். தவறு செய்துள்ளவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.2017-18 இழப்பீடு தொகை வழங்கியதில் உள்ள குறைபாடுகள் குறித்து வேளாண் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் எதிர்வரும் காலங்களில் அறுவடை ஆய்வறிக்கைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் பெற வேண்டும்.
புள்ளியியல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு இறுதி செய்யும் முன் தமிழக அரசின் அனுமதி பெற்ற பின் இறுதிப்படுத்தப்படுவதை நிர்வாக ரீதியாக உறுதிப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொண்டோம். அதனை பரிசீலிப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது செய்தித்தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள், நாட்டின் தலைவராக யாரை தேர்வு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.புதிய ஜனநாயக முன்னணி சார்பில் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
அதனை அறிவிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (22ம் தேதி) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பேசுகையில், “வென்றெடுத்த ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமான ஒரு பொறுப்பு உள்ளது. கடந்த காலத்தில், நானும் எனது பிரதிநிதிகளும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடிஅமீன், ராபர்ட் முகாபே ஆகியோரை பின்பற்றி, அவர்களைப் போல உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லை. நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறும், அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ள ஊடகவியலாளர்கள், நாட்டின் தலைவராக யாரை தேர்வு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். நாட்டில், ஏகாதிபத்திய ராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா உருவாக்குவது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்” என்று தெரிவித்தார்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்
by mohan
written by mohan
மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாக வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு மூட முடியாது என்றும் படிப்படியாக மூடப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுகவின் எந்த முயற்சிகளும் எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், அதுகுறித்த விவதாங்கள் தேவையில்லை என்றார்.இதற்கிடையே முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுக்கடைகளை மூட வேண்டும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் சுற்றித் திரிந்தான். சுமார் 10 வயதுள்ள வாய் பேச வராத இச்சிறுவன் எங்கிருந்தோ தவறுதலாக வந்தானா அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு வந்தானா என தெரியவில்லை .இது குறித்து திருமங்கலம் நகர காவல் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த சிறுவனை காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி மஸ்ஜித் ஜாமிஆ குத்பா பள்ளிவாசல் ஹக்தார் உறவின்முறை ஜமாஅத்திற்கு உட்பட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டஆர்.துல் கருணை பாட்சா லெவ்வை , ஏர்வாடி தர்ஹா பொருப்பாளர் ஏ. செய்யது பாரூக் ஆலிம் முத்தவல்லி, கிட்டங்கி செய்யது இபுறாகீம், செயலாளர், எம்.செய்யது இபுறாஹிம் லெவ்வை பொருளாளர் ஆகிய நிர்வாகிகள் A .அன்வர் ராஜா. Ex. MP, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் DSP சின்னகண்ணு தலைமையில் SI.ஜெயபாண்டி, SI.முனியம்மாள், SSI.ரவி, .மணிகண்டன்,.மாரியப்பன், அழகுதுரை, .பிரபு, சுந்தரபாண்டி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் விரைந்து திருட்டில் தொடர்புடைய மாணிக்கம் (26), செல்வராஜ் (31) ஆகிய இருவரையும் கைது செய்து 17 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட காவல் துணை ஆணையாளர்கள் சசிமோகன், சுகுமாரன், தல்லாகுளம் காவல் உதவி ஆணையாளர் அசோகன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மருது சேனை சார்பில், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே கிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தீபாவளி திருநாளை முன்னிட்டு 24.10.2019 முதல் 26.10.2019 வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சில மாற்றங்களுடன் இயக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மண்டல பேருந்து நிலையங்களில் விளம்பர பலகை மூலம் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,சென்னையிலிருந்து, திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இதேபோல், சென்னையிலிருந்து, செய்யாறு, ஆரணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்.
by mohan
written by mohan
திருவண்ணாமலையில் வங்கிகள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள வங்கிகளை ஒன்றிணைத்து தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் எம். கணபதி தலைமை தாங்கினார். தலைவர் கே. ரவிச்சந்திரன், செயலாளர் ஆர். ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேங்க் ஆப் பரோடா வங்கி இணைப்பினால் 2000 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை பறி போவதை கண்டித்தும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சுமார் 750 பேர் பங்கு கொண்டுள்ளதாக பொதுச் செயலாளர் கணபதி தெரிவித்தார். அனைத்து வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் திருவண்ணாமலையில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி அருகே நதிக்குடியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்
by mohan
written by mohan
சிவகாசி அருகே நதிக்குடியில் அபிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ராக்கெட் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ராக்கெட் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். பட்டாசு தயாரிப்பு ஒரு அறை சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் விபத்தில் படுகாயமடைந்த கணேசன், சுதா, முருக சரஸ்வதி ஆகிய 3 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க பட்டாசு தயாரிப்பு அறைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.வெடி விபத்து தொடர்பாக மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
21/ 10 /2019 அன்று ஆர் எஸ் மங்கலம் பேருந்து நிலையத்தில் வயதான முதியவர் பேரூரை சேர்ந்த அழகு என்பவர் மரணம் அடைந்தார். திருமணம் செய்தது கொத்திடல்.25 ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.ஆர்எஸ் மங்கலம் காவல் துறையின் மூலமாக அவர் மனைவிக்கும், உறவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டும் வர மறுத்தனர்.எனவே இன்று 22/10/2019 காவல்துறை உதவியுடன் தி மு க அழகேசன் பேரூராச்சி கணேசன், வருவாய்த்துறை அதிகாரி சாந்தகுமார்,தீபம் இந்திய அறக்கட்டளை மதிவாணன், மக்கள் பாதை நூருல் அமீன், சமூக ஆர்வலர் பாதுஷா ஆசிரியர், போன்றோர் முன்னெடுத்து உடல் ஆர்எஸ் மங்கலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதிநிகழ்வில் பேரையூரை சேர்ந்த அவரின் உறவினர்கள் காளிமுத்தன் உட்பட ஐந்துபேர்,சமூக ஆர்வலரான பொய்யாமொழி சங்கர்,ஜோசப் ஆல்பட், இம்தாத்,நாம்தமிழர் கணேசன், தாஜுதீன், பிலால் போன்றோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பேரையூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காவலர் நினைவு தின போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் போட்டியில் வெற்றி பெற்ற, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ‘தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் உழைத்து வாழ்வில் முன்னேறுங்கள்’ என்று அறிவுரை கூறி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இந்த விழாவில் பேரையூர் உட்கோட்ட டிஎஸ்பி திரு.மதியழகன் மற்றும் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி மகாலெட்சுமி தனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்கு சந்தோசத்துடன் பகிர்ந்தளித்து அனைவைரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மகாலெட்சுமி கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த தகவலை இணையத்தில் தெரிந்து கொண்டு யோகாநாதன் புத்ரா என்பவர் தபால் மூலம் ஜெர்மனியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பென்சில்கள்,30க்கும் மேற்பட்ட பேனாக்களையும் , கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசு பொருள்களை குவியலாக தபால் மூலம் பள்ளிக்கு அனுப்பி இருந்தார். பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவி செய்த அடுத்த செயல்தான் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.தான் பெற்ற வெளிநாட்டு பரிசுகள் அனைத்தையும் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு சந்தோசத்துடன் வழங்கினார் .
பொதுவாக இளம் வயதில் மாணவர்களுக்கு தனக்கு தன் தந்தை வாங்கி கொடுத்த பென்சிலை கூட பக்கத்தில் இருக்கும் மாணவருக்கு கொடுக்க கூட மனது வராது .ஆனால் தனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை சக மாணவர்களுக்கு மகிழ்வுடன் வழங்கியது தொடர்பாக மகாலெட்சுமி கூறியது :எங்கள் பள்ளியில் கீழே கிடந்த பணத்தை எடுத்து கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தது எனக்கு பெருமையாக இருந்தது.இனி வரும்காலங்களில் தொடர்ந்து இது போன்று செயல்படவேண்டும் என்று முடிவெடுத்தேன்.எனது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.வறுமையிலும் நேர்மையை பாராட்டி ஜெர்மனியில் இருந்து எனக்கு கிடைத்த வெளிநாட்டு பரிசுகளை எனது சக மாணவர்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்து மகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன்.இந்த வாய்ப்பை வழங்கிய பள்ளிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.என்று கூறினார்.
நேர்மை மாணவியின் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : மாணவி மகாலட்சுமியின் பகிர்ந்தளிக்கும் எண்ணமும்,நேர்மை செயல்பாடும் எங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியில் இருந்து வந்துள்ள பரிசுகளை மாணவியிடம் காண்பித்தபோது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார் . சிறிது நேரத்தில் என்னிடம் வந்து,சார் இந்த பரிசுகள் அனைத்தையும் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.எனக்கோ நடப்பது கனவா,நினைவா என்று எனக்கு நானே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.ஏனென்றால் , வங்கிக்கோ ,வேறு எங்குமோ செல்லும்போது அருகில் இருப்பவரிடம் நமது பேனாவை கொடுத்தால்கூட உடனே கேட்டு பெற்றுக்கொள்வோம்.அல்லது மூடியை கழட்டி கொண்டு கொடுப்போம்.ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த பேனாவையும்,பென்சிலையும் இந்த மாணவி சக மாணவர்களுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னபோது எனக்கே கொஞ்சம் அதிசயமாக பட்டது.மாணவியின் நேர்மையான செயல்பாடே பெரும் வியப்பாக இருந்த நிலையில், பரிசுகளை பகிர்ந்து அளிக்கின்றேன் என்று சொன்னது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தோம்.பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.மாணவியின் செயல்பாட்டினை ஆசிரியர்களும், மாணவர்களும்,பெற்றோர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்களுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் வழி காட்டுதல் படி மாவட்ட முழுவதும் நடத்தி வருகின்றது.இதன் தொடர்சியாக 21/10/2019 காலை பத்து மணி முதல் பகல் இரண்டு மணி வரை திருப்புல்லாணி யூனியனை சேர்ந்த மாற்றுத்திரனாளிகளுக்கு திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்று.
இந்த முகாமில் கீழக்கரை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தனி வாகனங்கள் மூலம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பயணாளிகளை இலவசமாக அழைத்து சென்றதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். மக்கள் நல பாதுகாப்புக்கழகம் செயலாளர் முகைதீன் இப்ராகீம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் பொறுப்பாளர் தாஜீல் அமீன், மஜ்மா-உல்- ஹைராத்தியா கல்வி அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான், S D P I அப்துல் காதர், அபுபக்கர் சித்தீக், திருப்புல்லாணி நகர் செயலாளர் முஹம்மது ஹனீபா, அலையன்ஸ் இரத்ததான சேவை ஒருங்கினைப்பாளர் ஹபீப் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு உதவி செய்தனர்.
இந்த நிகழ்வின் பொது நலன் கருதி கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் சார்பாக இந்த முகாம் நடை பெறுவதை துண்டு பிரசுரம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
கீழக்கரை சமூக ஆர்வலர்ளின் இந்த பணியை இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் மற்றும அலுவலர்கள் பாராட்டினார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை டெல்லி முரளி வழங்கினார். டிஎஸ்பிதுரைப்பாண்டி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
கே.எம்.லாரியார்
You must be logged in to post a comment.