மாவட்ட செய்திகள்
கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை..
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை, சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.
போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..!
சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார். இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பார்வர்டு பிளாக் மாநில முன்னாள் தலைவர் முத்துவேல் நினைவிடத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அஞ்சலி …
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் ஃபீர்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவருமான முத்துவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கமுதி அருகே உள்ள நீராவி கரிசல் குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்த 14 வயது சிறுவன். இவன் அப்பகுதியேச் சேர்ந்த 4 வயது சிறுமியை நேற்று முன் தினம் அங்குள்ள காட்டு கருவேல்மரப் புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் . சிறுமியின் தந்தை புகார்படி இராமநாதபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டா கலாராணி சிறுவனை கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சைவ பாண்டி. இவரது மகன் குணசேகரன், 31. இவருக்கு திருமணமாகி இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சென்னை – திருவனந்தபுரம் வழித்தடத்தில் டிரைவராக பணியாற்றினார் . விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊர் வந்திருந்தார். கோட்டை மேடு வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை கடைக்கு வந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தார். சைவ பாண்டி புகார் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உளுந்தூர்பேட்டை அருகே சோதனையில் இருந்த தலைமை காவலருக்கு கத்தி குத்து ..
உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டு கிராமத்தில் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார்(35) என்பவர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தலைமை காவலர் செந்தில்குமாரை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு ஓட்டம்.
தப்பி ஓடிய 3 பேரும் பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த தலைமை காவலர் செந்தில்குமார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ளஇந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய்
திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர்.
மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். மேட்டூர் அணையை இதுவரை இரண்டுமுறை மின்னல் தாக்கியது, இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார்.
இந்த உத்திரவை போட்ட ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது. இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.
இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில்ந நிற்காமல், நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின் அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல், 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது. அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன. மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.
இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை,
அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்…
தொகுப்பு
அ.சா.அலாவுதீன்
கீழை நியூஸ்
மூத்த நிருபர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மேலத்தெரு, அருஸியா தைக்காவில், திருகுர்ஆன் மனனம் செய்யும் ஆலீம் படிப்புடன், உலக கல்வியையும் 1998 ஆண்டு முதல் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. இங்கு 60 பேர்களுக்கு மேல் படிக்கிறார்கள்.
இன்று (22.07.18) மாலை தைக்காவில் கல்வி பயிலும் 3 மாணவர்கள் ஆலீம் பட்டம் பெற்றார்கள்.
(முகம்மது அசாருதீன் BCA,மதுரை, முகம்மது காசிம் BE வெளிப்பட்டிணம், அக்பர் அலி MBA வேதாளை.). மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் தைக்கா டிரெஸ்ட்டி K.T.M பசீர் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஹாஜி சலாவுதீன்,மேலத்தெரு கத்தீப் மன்சூர் ஆலீம், அப்துல் சலாம் ஆலீம், ஆரீப் ஆலீம்,ரசீது ஆலீம் மற்றும் ஜமாத்தார்கள், பட்டம் பெறும் குடும்பத்தார்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தகவல் : மக்கள் டீம் :
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு- அறிக்கையை வழங்கி உறுதி ஏற்பு கூட்டம் ..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு நற்செய்தி கூட்ட அரங்கில் நடைப்பெற்று வருகிறது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . அப்போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு கிபந்த்து. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை, வைரத்தோடு, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், கடிகாரம் 3 , எல் இ டி டி.வி, உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.1.88 லட்சமாகும்.
சம்பந்தப்பட்டவரின் புகார் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனம்..
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய மதில்சுவற்றின் மீது வடக்குநோக்கி அமர்ந்திருந்த கருடாழ்வாருக்குவிஷேச பூஜைகள் நடந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..
இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை, சி.எஸ்.ஐ. மதுரை இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை மற்றும் ராமநாதபுரம் கிறிஸ்து ஆலயம் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வை நடத்தினர்.
புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பேரணியை திருமண்டில சட்ட ஆலோசகரும் பள்ளியின் தாளாளருமான மனோகரன் மார்ட்டின் தலைமையில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலையமையாசிரியர் பால்மாறன் ஆகியோர் முன்னிலையில் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன் துவக்கி வைத்தார். செயலாளர் பால்சன் வரவேற்றார்.
மதுரை இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை இயக்குனர் அருள்திரு ஜே. ராஜன், கிறிஸ்து ஆலய போதகர் அருள்திரு கிறிஸ்டோபர் டேவிட் மற்றும் திருமண்டில பசுமைப் பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் மோசஸ் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் மரம் எவ்வாறு மனிதனுக்கு ஆக்ஸிஜனை அளித்து உதவுகிறது என்பதனைப் பற்றியும் விவரித்தனர்
புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிறிஸ்து ஆலயத்தை சென்றடைந்தது. சபை மக்களுக்கு 150 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பொருளாளர் முத்துராஜா நன்றி கூறினார்.
திருமண்டில மாமன்ற உறுப்பினர் ஆலிவர் ஃப்ரீமன், ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் மலைக்கண்ணன், மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக திறன் மேளா..
தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிபெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட வேண்டுமென ஆணையிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது.
எனவேää இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04.07.2018 அன்று நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்டமாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 26.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இத்திறன் மேளா நடைபெற உள்ளது. இத்திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு பதிவு செய்து பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு..
குறைந்த நீரில் விவசாயிகளின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40மூ அல்லது 50மூ மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20,000/-மதிப்பில் வழங்கப்படுகிறது. மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர் நடவு முறைகளில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ9,840/-மதிப்பீட்டிலும, கொய்யாவிற்கு ரூ.17,599/- மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.23,100/- மதிப்பீட்டிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
மஞ்சள், இஞ்சி, பூண்டு மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12,000/-வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ரோஜாää மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16,000/-வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
விவசாய பெருமக்கள் தங்களுக்குத் தேவையான விதைகள்ää நடவு செடிகளின் விவரங்களை ‘உழவன் செயலி” மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிரää விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படுமு; விபரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை இராமநாதபுரம் 9003631332, மண்டபம் 9443405365, திருப்புல்லாணி 9786751340, போகலூர் 9942673964ää நயினார்கோவில் 9842569664, பரமக்குடி 9789541143, கமுதி 9659246637, முதுகுளத்தூர் 9659584931, கடலாடி 9944080594ää ஆர்.எஸ்.மங்கலம் 7299462970, திருவாடானை 9442675926 அணுகி பெற்றுக்கொள்ளவும். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04567 230832, 230328
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ..
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவியுடன் 28.07.2018 முதல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
பட்டப்படிப்பு மற்றும் பட்டய வகுப்பில் மின்பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு (ELECTRONICS AND COMMUNCATION ENGINEERING)பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவில் 28 வயதிற்குட்பட்டவர்களும் பிற்படுத்தப்படட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவில் 30 வயத்திற்குட்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவில் 33 வயத்திற்குட்பட்டவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். திறமைவாய்ந்த சிறப்பு வல்லுநர்களுடன் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தப்படும்
தற்பொது தமிழ்நாடு காவலர் பணியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் அமிர்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி நாகசுந்தரி தனது 4 வயது மகள் ஒவியாவுடன் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ஒவியா சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பின்னர் அச்சிறுமியின் தாயார் நாகசுந்தரி புகாரின் பேரில் இராமேஸ்வரம் டவுன் போலீஸ் எஸ்.ஐ., பிரபு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா..
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் அருமையான பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வணக்கம் 20 கல்வி நிறுவனங்களை நிறுவி அதில் ஒன்றான கல்வியல் கல்லூரியை இந்த ராமநாதபுரத்தில் நிறுவி செம்மையான கல்வியை இப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த ஊர் ராமநாதபுரம் இக் கல்லூரி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது புன்னகையுடன் இருக்க வேண்டும் வகுப்பு அறை யிலும் வாழ்க்கையிலும் வெற்றியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். வகுப்பறையில் தோற்றுப் போகலாம் வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது, முதலாவதாக மாணவிகள் அதிகாலையில் எழ வேண்டும், படிக்கட்டாக வைத்துக்கொள்ள வேண்டும், நேரம் தவறாமை உண்மை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்தனைகள் மாறுபட வேண்டும், ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு வேலை இல்லை என்று ஒதுங்காமல் ஆன்லைன் டீச்சிங் கற்றல் குறைவான குழந்தைகளை தேர்ந்தெடுத்து பாடங்களை நடத்தி சுயசம்பாத்யத்தில் வாழ்க்கையை நடத்தலாம் என்று உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் முகமது சதக் டிரஸ்ட் சேர்மன் முகமது யூசுப் செயலாளர் ஷர்மிளா இயக்குனர் ஹபிப் ஹமீது இப்ராஹிம் முதல்வர் சோமசுந்தரம் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் சைடெக் முதல்வர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 45. நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் இவர் நடை பயிற்சி சென்றார். அப்போது அது வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் கவிதா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ராமநாதbம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி , 55. நேற்று முன் தினம் இரவு 9 மணி அள்வில் அப்பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கஸ்தூரி கமுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசாரின் வாகன சோதனையில் இருவர் சிக்கினர். விசாரணையில் பெருங்குளம் செல்வராஜ் மகன் மதன்குமார் 21, சடையன் வலசை நாகசாமி மகன் தமிழ்ச்செல்வன் 21 ஆகியோர் கவிதா, கஸ்தூரியிடம் செயின் பறித்தது தெரிந்தது. இருவரையும் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜீவரத்தினம் கைது செய்தார்.
You must be logged in to post a comment.