மாவட்ட செய்திகள்
வேளாண்மைத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.05.2018) ‘கிராம சுவராஜ் அபியான்” (கிராம சுயாட்சி இயக்கம்) திட்டத்தின் கீழ் அறிவுருத்தியுள்ளபடி, வேளாண்மைத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
மத்திய வழிகாட்டுதல் அலுவலர் (ம) மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் இணைச் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் திட்ட விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சிறப்புரை ஆற்றி இத்துறை மூலம் தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கினார்.
பின்னர் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி அதிக மகசூல் ஈட்டிய 11 விவசாயிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும்ää 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளும்ää மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் 1 பயனாளிக்கு சலவைப் பெட்டியும்ää மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பே.இந்திராகாந்தி, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.டி.மோகன், கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ந.சாத்தையா, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.டி.ஏ.விஜயலிங்கம், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சி.இராஜமாணிக்கம், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) .ஜே.இராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் .வி.அப்துல்காதர் ஜெய்லானி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.இராஜா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..
இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுனர் குழு அமைக்க வேண்டும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் கடந்த 2017, 18ம் ஆண்டுகளில் அரசு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இராமேஸ்வரம் கோசுவாமி மடம் டிரஸ்ட் மகாலில் நடந்தது.
இராமநாதபுரம் மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகியுமான ராஜா என்.குமரன் சேதுபதி மற்றும் ராணி லட்சுமி குமரன் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராஜா பரிசு வழங்கி பாராட்டினார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி எல்ஐசி நாராயணன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் இளங்கோவன் 2017-18ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். அதை தொடர்ந்து பொருளாளர் விஜயகுமார் வரவு செலவு கணக்கினை சமர்பித்து ஏகமனதான ஒப்புதலை பெற்றார். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுநர் குழு அமைத்தல், ஆங்கிலம் மற்றும் தமிழ்தட்டச்சு புகுமுக இளநிலைத் தேர்வினை ஏனைய நிலைத் தேர்வுகள் போல் ஆகஸ்ட் பருவ தேர்வு மட்டுமல்லாது பிப்ரவரி பருவத் தேர்விலும் நடைபெற செய்ய வேண்டும், தட்டச்சு தனியார் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் முழு விவரத்தினையும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வாளர்கள் பட்டியலை சம்பந்தபட்டவர்களுடைந வரிசை எண் அளித்து உடனடியாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும், தட்டச்சு பொறிகளின் உற்பத்தி இல்லாத நிலையில் அரசுத் துறைகளில் உபயோகிக்காமலுள்ள தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பொறிகளை மாணவர் நலன் கருதி தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கையாக தீர்மானம் பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வக்ஃப் போர்டு தலைவராக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தேர்வு.. சரித்திரம் திரும்புமா?? மாறுமா??.. கீழக்கரை பிரமுகர்கள் வாழ்த்து ..
தமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இன்று அதிமுக கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றியை வாழ்த்தி தமிழகத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் மற்றும் கீழக்கரை பைத்துல்மாலின் துணை தலைவருமான ரஃபீக் சாதிக் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வக்ஃபு போர்டு பதவி என்பது அமைச்சர் அந்தஸ்த்துக்கு சமமான பதவியாகும். இஸ்லாமிய சமுதாயத்தின் அமானித சொத்துக்களை பராமரிக்கும் பணியாகும். இப்பதவியில் தடம் பதித்தவர்களும் உண்டு, தடம் புரண்டவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் புதிய சேர்மனின் தமிழ்நாடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்த அளவு நன்மை பயக்கும் என்பதை??
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகள் மீது கொலை வெறி தாக்குதல்…திட்டமிட்ட சதியா??
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்ட செயற்குழு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழக்கரையில் இருந்து 500 பிளாட் கிளை நிர்வாகிகள் 7 பேர் ஆம்னி வாகனத்தில் இன்று (29/04/2018) மாலை இராமநாதபுரம் சென்றார்கள். அவ்வாறு செல்லும் வழியில் ஆர்.எஸ் மடை ஊரை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சென்ற வாகனம் மீது விழுவது போன்று இருசக்கர வாகனத்தில் அருகில் ஓட்டி சென்றுள்ளனர்.
வண்டியில் பயணம் செய்தவர்கள், கீழே இறங்கி கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். அச்சமயம் இசரசந்தர்ப்பத்திற்காகவே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் வேனில் பணித்தவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.
வாகனத்தில் இருந்த நிர்வாகிகள் சுதாரிக்கும் முன்பு கிளைத்தலைவர் சுல்த்தான் தனது சட்டைப்பையில் வைத்திருந்த 4000ரூபாயையும், டிரைவிங் லைசன்ஸ், உறுப்பினர் அட்டைகள் ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு கருவேல மரங்கள் வழியே தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கிளை செயலாளர் ஹாஸிம் ரஸ்வி(24) யை உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் மாநில நிர்வாகிகள் இராமநாதபுரம் B1காவல் நிலையத்தில், மத நல்லிணக்கத்தை குழைக்கும் வண்ணம் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். இது போன்று சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடக்க ஆரம்பித்துள்ளது, இதை ஆரம்பத்திலேயே காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இது போன்று மத மோதலை உண்டு பண்ண துடிக்கும் கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை மெத்தனப்போக்கை கையான்டால் மாநில தலைமையின் ஆலோசனை படி அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட செயலாளர் சாகுல் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது.
கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் ஆகிய இருவருக்கும் “சிகரம் 2018” என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவில் கீழக்கரையில் சினர்ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.ஹுசைன் பாஷாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுகூட்டம்………..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வேலை தேடும் சாமானிய மனிதன் முதல் வேலை தேடும் பட்டதாரிகள் வரை நாடிச் செல்லும் நிறுவனம்தான் “கீழக்கரை கிளாசிஃபைட்”, உச்சரிக்கும் பெயர்தான் எஸ்.கே.வி சேக்.
You must be logged in to post a comment.