கடந்த வாரத்தில் மதுரை அருகே காண்டை எனும் கிராமத்தில் சமீபத்தில் இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்று கொண்ட மக்கள் ரமலான் மாத தேவைகளுக்காக வடக்கு தெரு சமூக நல அமைப்பை நாடி இருந்தார்கள். அம்மக்களின் வேண்டுகோளை ஏற்று நாசா அமைப்பினர் அக்கிராமத்தில் வசிக்கும் 20கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 35ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தனர்.
இப்பணியை நாசா அமைப்பு சார்பாக அவ்வமைப்பின் நிர்வாகிகள் பசீர் , மிர்சா, அரபாத் ஆகியோர் நேரில் சென்று தேவையான பொருட்களை வழங்கினர்.
You must be logged in to post a comment.