மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 63 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகராட்சி சார்பில் ஆணையாளர் அழகேஸ்வரி முன்னிலையில் சுகாதார துறை அதிகாரிகள் அகமது கபீர், சரவணபாண்டியன் இலவச சீருடைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பாண்டி, மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
விருதுநகரில், 7ம் வகுப்பு பயின்றுவரும் 12 வயது மாணவி ஒருவர் தனது கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு 25 வகையான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் பி.எஸ்.சி பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹர்ஷ நிவேதா(12). சிறுவயது முதலே யோகக் கலையில் சிறந்து விளங்கும் இவர், உலக சாதனையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று (23ம் தேதி) தன்னுடைய இரண்டு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல் கலாம் படம் வரைதல், பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்யூப்பை சரிசெய்தல், சைக்கிள் ஓட்டுதல் என 25 வகையான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.இந்த சாதனையை, ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. சாதனை படைத்த மாணவி ஹர்ஷ நிவேதாவை, பி.எஸ்.சி பள்ளி முதல்வர் சாந்தி, துணைத்தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சரவணாபிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பகல் 3 மணி நிலவரப்படி இரண்டு மாநில சட்டமன்ற தோ்தலிலும் பா.ஜ கட்சி முன்னிலை பெற்றுள்ளது.அதன் விபரம் வருமாறு -ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் பா.ஜ.க+ – 41 காங்+ – 31 மற்றவை – 18
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் பா.ஜ.க+ – 165 காங்+ – 96 மற்றவை – 27
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடந்து முடிந்த தமிழக நாங்குநோி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டியாக மாநகராட்சி சார்பாக பெட்டிக் கடைகளை அகற்றச் சொல்லியதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரர் தற்கொலை
by mohan
written by mohan
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே பெட்டி கடை வைத்திருந்த மாற்று திறனாளி கடையை ஸ்மார்ட்சிட்டி பேருந்து நிலையம் அமையுள்ள இடத்தில் கடை உள்ளதாக கூறி கடையை காலி பண்ண மாநகராட்சியினர் கூறியதால் மனமுடைந்து தன் கடையினுள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் .வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி.மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல்
by mohan
written by mohan
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு பயிறு வகைகள் உணவாக வழங்கப்படுகிறது.தினமும் மாலை நேரத்தில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தட்டப்பயிறு,பட்டாணி ,கொண்டக்கடலை போன்ற சத்தான உணவு வகைகள் பள்ளியில் வழங்கப்படுகிறது.இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : பள்ளியில் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது பள்ளியில் பயிலும் இளம் வயது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு நாள் ஒன்றுக்கு ஒரு சத்தான உணவு என்கிற வகையில் தட்டப்பயிறு ,பட்டாணி ,கொள்ளு,கொண்டக்கடலை.கடலை பருப்பு ,பாசிப்பயிறு போன்ற உணவு வகைகள் பள்ளியில் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மாணவர்கள் சத்தான உணவினை சாப்பிட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் தங்களது பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.இளம் வயது மாணவர்கள் பசி அறிந்து உணவு வழங்கி சாப்பிடுகையில் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.இதனால் பயிற்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.இவ்வாறு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் .முத்துராமலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீசார் இணைந்து கப்பலூர் பாலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்மாதிமங்கலத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.54¼ லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
by mohan
written by mohan
கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலசபாக்கம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:-தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் மூலம் மாவட்டம் முழுவதும் சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகக் குறைவாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது.பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு பிறகு திருமணம் செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். ஆண்களை வளர்ப்பது போல் பெண்களையும் நாம் சமமாக வளர்க்க வேண்டும். நமது கலாசாரத்தை அனைவரும் காக்க வேண்டும். முதியோர்களை நீங்கள் எப்படி பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அது போல் தான் உங்களையும் முதுமை காலத்தில் உங்கள் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள். உங்களுக்கு ஆரம்ப வாழ்க்கையை கொடுத்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.முகாமில் ஆரணி உதவி கலெக்டர் மைதிலி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் வில்சன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் 572 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்
by mohan
written by mohan
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் 572 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 78 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கினார்.இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் பெண்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, பெண் கல்வியினை ஊக்குவித்திடும் நோக்கில் 2011-ஆம் ஆண்டு முதல் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகின்றது. 2011-12ஆம் நிதியாண்டு முதல் 2016-17-ஆம் நிதியாண்டு வரையில் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு நிதியுதவியாக ரூ.50,000-ம், 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள பெண்களுக்கு நிதியுதவியாக ரூ.25,000-ம் திருமண திருமாங்கல்யத்திற்கு விலையில்லாமல் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி,2011-12ஆம் நிதியாண்டு முதல் 2016-17ஆம் நிதியாண்டு வரையில் இத்திட்டத்தின் கீழ் 22,972 ஏழைப் பெண்கள் ரூ.93.16 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 8,261 ஏழைப் பெண்கள் ரூ.51.19 கோடி மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 பட்டதாரி பெண்கள், 272 பட்டதாரி அல்லாத பெண்கள் என 572 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவித் தொகையாக ரூ.2 கோடியே 18 லட்சம், ரூ.17 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் என ரூ.3 கோடியே 78 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கப்படுகின்றதுஎன பேசினார்.இவ்விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.வ.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் திருமதி.முத்துலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடலாடி தாலுகாவில் 55 பேருக்கு ரூ 14.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட,கடன் உதவி
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், எஸ்.டி.சேதுராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 55 பயனாளிகளுக்கு ரூ.14.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையிலான அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாக மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பருவ மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழை நீரை சேமித்திட தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள் ரூ.37.57 கோடி மதிப்பில் தூர் வாரப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலும், 988 ஊரணிகள் தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நீர்நிலை புனரமைப்புப் பணிகள் தற்போதைய மழைநீரை சேகரிக்க ஏதுவாக அமைகின்றது.
இக்காலத்தில் நமக்கு எதிர்பார்த்த மழையின் அளவான 182.06 மி.மீ.-ல் இதுவரை நமக்கு 117.82 மி.மீ. கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது. நமது மாவட்டத்தில் 1,25,000 ஹெக்டேர் மதிப்பில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு இந்த மழை பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி மிளகாய் மற்றும் சிறுதானியங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. நமது கிராமத்திலுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்போடு தான் நாம் இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். விவசாயிதாரர்களின் நலனை காத்திடவும், அவர்களது விவசாய நிலங்களில் தலா ரூ.1 இலட்சம் மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு மழைநீரை சேமிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த பண்ணைக்குட்டைகளை பயன்படுத்தி விவசாயதாரர்கள் தங்களது விளைநிலத்திற்கு தேவையான நீரின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த ஆண்டு மட்டும் 2565 பண்ணைக் குட்டைகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் இதுவரை ஏறத்தாழ 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுதவிர, விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டில் 1,20,846 விவசாயிகளுக்கு ரூ.529.06 கோடி மதிப்பிலும், 2017-18 ஆம் ஆண்டில் 1,44,369 விவசாயிகளுக்கு ரூ.469.99 கோடி மதிப்பிலும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல நடப்பாண்டில் முதற்கட்டமாக 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கிராமங்களுக்கு உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயதாரர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கிடவும் அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள் விவசாயத் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்கள் மற்றும் மானிய விலையில் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயதாரர்களின் விலைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டு செய்து விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயதாரர்களுக்கு வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆரணி – தி.மு.க. பிரமுகா் பிரியாணிகடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்திமார்க்கெட்ரோடுபுதியபேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், பழக்கடைகள், தேநீர்விடுதி, பேக்கரிகள், உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், காலாவதியான உணவுப்பொருட்கள், பயன்பாட்டில் இருந்ததை ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர்.மேலும் தேநீர்விடுதி, பேக்கரி, உணவகங்களில், சூடான டீ, காபி, சாம்பார், மற்றும் பிரியாணி கடைகளில் பிளாஸ்டிக்பாக்ஸ், கேரிபேக்கில் குருமா ஆகியவற்றை பிளாஸ்டிக் கேரிபேக்கில் பார்சல் வாங்கி மக்கள் பயன்படுத்துவதால் கேன்சர் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பேருந்துநிலையம் மணிகூண்டு அருகே திமுக. பிரமுகர் அன்சர்பாஷா என்பவருக்கு சொந்தமான பைவ்ஸ்டார் பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த பிரியாணி கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குககள் பயன்பாட்டில் இருந்ததை பறிமுதல் செய்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் பறிமுதல் செய்து அங்கேயே கிழித்து அழித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று சுகாதார ஆய்வாளரை ஆய்வு செய்ய அதிகாரம் உனக்கு உள்ளதா எனவும், 40 ஆண்டு காலம் தொழில் செய்வதாகவும் மூன்று முறை நகராட்சி திமுக கவுன்சிலர் என்றும் எனக்கு சட்டம் தெரியும் எனவும், திடீர் ரெய்டுக்கு வருவதாக சொல்லிவிட்டுத்தான் வரனும். உன்னுடைய அதிகாரம் என்னவென்று எனக்குத் தெரியும் என மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா அன்வர் திகான்பேட்டை அடுத்த மேல்ஆவதம் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தும் நபர் சந்திரசேகர் அந்த பகுதியில் ஏரி மற்றும் கால்வாயில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளான். பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு புகார் அளித்தனர் பானாவரம் ஆர் ஐ சமரபுரி அன்வர்தி கான் விஏஓ ஆனந்தராஜ் ஆகியோர் மணல் கடத்திய 2 டிராக்டர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் 2 அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான் விவரம் அறிந்த நெமிலி தாசில்தார் சதீஸ் விசாரணை மேற்கொண்டு ராணிப்பேட்டை சப்-கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார் சப்-கலெக்டர் இளம் பகவத் மணல் கடத்தல் குற்றவாளி சந்திரசேகரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உத்தமபாளையம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெயபாண்டி, முனியம்மாள் மற்றும் போலீசார்கள் க.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு ஆகியவற்றில் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் தங்களுக்கும் தங்களது உறவினருக்கும் ஏற்படக்கூடிய பாலியல் தொந்தரவு குற்றங்கள் தொடர்பான புகாரினை 24 மணி நேர இலவச தொலைபேசி எண். 1098 அல்லது காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என்று கூறி விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வேலைப்பளு ஒப்பந்தப்படி பதவிகளை அனுமதித்து பதிவுகளை உடனடியாக வழங்கிட வேண்டும் மின் வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து தொழிலாளர் அலுவலர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மின் வாரியமே சம்பளம் வழங்கிட வேண்டும் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கைவிடவேண்டும் கஜா புயலில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
by mohan
written by mohan
திருநெல்வேலி மாநகராட்சியின் பணிகளுக்காக அல்லது மாநகராட்சி அனுமதி பெற்று சாலைகளில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரை சாலையை உடைத்து எடுக்கப்பட்டு பிறகு வேலை முடிந்ததும் மீண்டும் உடைத் தெடுக்கப்பட்ட சாலையை தார் கொண்டு நிரப்பி சமதளப்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்படும் நிலை தொடர்கிறது.இதில் நெல்லை டவுண் ஆர்ச் சமீபம் பல் மருத்துவமனை அருகே உடைக்கப்பட்ட சாலை பணிமுடிந்து மாதங்கள் கடந்தும் மீண்டும் சரி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலை முக்கியமான சாலையாகும். ஏனெனில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் தான் செல்கிறது. இந்த பள்ளத்தில் விழுந்து நிலை தடுமாறி விபத்தை நோக்கி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிகம்.வாகனங்கள் பல இரவு நேரங்களில் விபத்துகளுக்குள்ளாகும் அபாய நிலை உள்ளதால் விரைவாக இந்த பள்ளத்தை ஜல்லி தார் கொண்டு நிரப்பி சமப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுநலன் கருதி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்கம் நெல்லை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வரும் முன் காப்போம் நிகழ்வாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வி.கே.எஸ் அகாடமி என்ற தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது.
மொத்தம் 3 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.இதனையறிந்த பெற்றோா்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் பள்ளி நிா்வாகத்தை பாராட்டினா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மக்களை நோக்கிய பயணத்தில் மாநிலம் தழுவிய வட்டார பிரச்சாரம் . 36 ஆண்டுகளாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிரந்தரமில்லாத பதவி உயர்வு காலமுறை ஊதியம் பெறாமல் இருப்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த பிரச்சார பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்டதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் அம்மா முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது பேருந்து பொதுமக்களுக்கு நிலையத்தில் பேர் என்ன பேரு சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
by mohan
written by mohan
உசிலம்பட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு வரவிடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம், எங்கெங்கு கொசுக்கள் உற்பாத்தியாகிறது போன்றவைகளை நகராட்சி அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் பழைய டயர், தேங்காய்கூடுகள், வீட்டில் உள்ள தொட்டிகள் போன்றவைகளில் மழைநீர் தேங்கவிடாமல் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுகொண்டனர். இந்த முகாம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழச்சியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலா, நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, சுகாதார துறை அதிகாரி அகமதுகபீர், சித்தா பிரிவு மருத்துவர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் சுகாதார செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே குடும்பதகராறில் கணவர், மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கணவர் உயிரிழப்பு.
by mohan
written by mohan
உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியில் குடும்பதகராறில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.கணவர் உயிரிழப்பு, மனைவிக்கு தீவிர சிகிச்சை.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் ராமச்சந்திரன் (28). இவரது மனைவி பாக்யலட்சுமி (26). இவர்களுக்கு 3வயதில் ரிகாஸ்ரீ என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் ராமச்சந்திரன் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் தனது மனைவி பாக்யலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் தகராறு முற்றியநிலையில் மனைவி பாக்யலட்சுமி தோட்டத்தில் பயிர்களுக்கு தெளிக்க வைத்துள்ள பூச்சிகொல்லி மருந்தினை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதை கவனித்த கணவர் ராமச்சந்திரனும் அதே மருந்தினை குடிததுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் கணவர் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி பாக்யலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. இத குறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட #திருநங்கையை கைது செய்து அவரிடமிருந்து 11.5 கிலோ தன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.சிந்தாதிரிப்பேட்டை போலீசார் திருநங்கை சித்ராவை கைது செய்து அவரிடமிருந்து 11.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்…!!
You must be logged in to post a comment.