இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய ஆஃப்கள் வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமானவும் ஒரு ஊடகமாகவும் மாறியுள்ளது . விவசாயிகளுக்கு பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும் மருந்துகளையும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள் விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி புரிகிறது . இந்த ஆப்பை நாம் அன்றாட பயன்படுத்தும் மொபைலின் மூலம் எந்த ஒரு பணம் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல் டவுன்லோட் செய்யலாம்என்றும் விவசாயிகளுக்கு இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு அதன்மூலம் பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Category:
செய்திகள்
யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..
by Askar
written by Askar
யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..
பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.
வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு.
இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..
written by Abubakker Sithik
இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்..
இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் (தேர்தல் அதிகாரி) எஸ். ராஜலிங்கம். திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவரது தந்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு மற்றொரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்-ஆக வெற்றி பெற்று உத்தர பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேச மக்களிடையே திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம், வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான தென்காசி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இந்திய பிரதமர் மோடி மற்றும் தேர்தல் அதிகாரி தென்காசி ராஜலிங்கம் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை தென்காசி மாவட்ட வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், ஸ்ரீகோமதியம்பாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் சென்னை உத்தரவுக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், DON BOSCO TEAM. Mass Movement for Transformation (MMT) and Nuture Bhel) என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல்வழிகாட்டுதலுடன் தொழில் சார்ந்த படிப்பும் (professional course) மற்றும் காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்லா ஆவணமும் இருக்கு எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..
by Askar
written by Askar
எல்லா ஆவணமும் இருக்கு எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..
சென்னை: அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருந்த போதிலும் ஏன் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே கடந்த 6 ஆம் தேதி போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வாசுதேவன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய சரக்கு வாகனம் ஒன்று பள்ளி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த சரக்கு வாகனத்தை மறித்த டிராபிக் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதிக்க முயன்றனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரக்கு வாகனத்தின் டிரைவர் எந்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிராபிக் போலீஸ் அணிந்த சீருடையில் அவருடைய பெயர் பேட்ஜ் இல்லை. இதனால், நீங்கள் போலீஸ்தானா.. உங்களின் ஆவணத்தை காட்டுங்கள் என்று ஓட்டுநர் போக்குவரத்து போலீசிடம் கேட்டார்.
தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது பிறகு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள். வேலிட் லைசன்ஸ் இருக்கு. வேலிட் புக் இன்சுரன்ஸ் இருக்கு.. எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கு.. அப்புறமும் அப்ஸ்ட்ரகஷன் என்று அபராதம் போடுகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஐஜி அலுவலகத்தில் புகாரளிப்பேன் என வாக்கு வாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், போலீசாரிடம் வாக்கு வாதம் செய்த டிரைவர் செந்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆவணங்களை காட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் செந்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறப்பு கவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் செந்தமிழன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டமின் இணைப்புகள் இருந்தால் அவற்றைஇணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
by Askar
written by Askar
ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட
மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை
இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக அரசு, இப்போது அதை மீறுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,‘‘அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதிக இணைப்புகள் இருந்தால் அவற்றில் ஓர் இணைப்பு 1டி கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.
ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் நுகர்வோருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறு இணைக்கப்படும் போது ஒரு வீட்டைத் தவிர, குறிப்பிட்ட வளாகத்தில் உள்ள மற்ற அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். அதுமட்டுமின்றி, ஏதேனும் ஓர் இணைப்பு 1டி கட்டணப் பிரிவுக்கு மாற்றப்பட்டால், அந்த இணைப்புக்கு யூனிட்டுக்கு ரூ.8.15 கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன், நிலையான கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூ.204 வசூலிக்கப்படும். இது வழக்கமான மின் கட்டணத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதை தவிர்க்க முடியாது. சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அத்தகைய வீடுகள் அனைத்தும் ஒருவருக்கு சொந்தமானது என்பதால் அனைத்து வீடுகளுக்குமான மின் இணைப்புகளும் ஒருவர் பெயரில் தான் இருக்கும். சில இடங்களில் வீடுகளின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான வீடுகளை தங்களின் வாரிசுகளுக்கு பிரித்து வழங்கினாலும் கூட பலரும் மின் இணைப்பின் பெயரை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஆனாலும், அந்த வீடுகளில் குடி இருப்பதும், மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் தான். அவ்வாறு இருக்க அனைத்து வீடுகளுக்கான மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கமாக செலுத்த வேண்டிய ரூ.1125 கட்டணத்திற்கு பதிலாக ரூ.3464 கட்டணம் செலுத்த வேண்டும். இது 3 மடங்குக்கும் கூடுதலான தொகை. இது நுகர்வோரை சுரண்டும் செயல் என்பதில் ஐயமில்லை.
2022&ஆம் ஆண்டில் நிறைவில் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. ஒவ்வொருவரின் பெயரிலும் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து அவை அனைத்தையும் இணைப்பதற்காகவும், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தவும் தான் அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி விளக்கமளித்த அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் இணைப்புகள் இணைக்கப்படாது. இது தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளை மின்சார நுகர்வோர்கள் நம்ப வேண்டாம்’’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
அதேபோல், ஒரு வளாகத்துக்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என திருவெறும்பூர் தமிழ்நாடு மின்சார வாரியம் பயனாளி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்புகள் தொடர்பாக விளக்கமளித்த மின்வாரியம்,‘‘கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் இணைக்கவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டு வருகிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்’’ என்று பொதுமக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
ஆனால், அதன்பின் ஓராண்டு மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளில் மின்சார வாரியம் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது தமிழக மக்களுக்கு செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம். அதிலும், குறிப்பாக தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு பேசிய தமிழக அரசும், மின்சார வாரியமும், தேர்தலுக்குப் பிறகு தங்களின் கோரமான உண்மை முகத்தை காட்டுவதை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏற்கனவே, சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டிய தமிழக அரசு, இப்போது மின்னினைப்புகளை இணைக்கத் துடிப்பது பெரும் பாவம்.
எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, இப்போதுள்ள முறையே தொடர அனுமதிப்பதுடன், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தேதிகளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்..
by Askar
written by Askar
தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்க எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம்..
by Askar
written by Askar
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள் கூட்டம்..
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் இன்று (மே.14) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் மீளாய்வு நடைபெற்றது.
ஜனநாயகத்தை காக்கும் வகையில் தமிழக முழுவதும் பரவலாக தங்களது வாக்குரிமை நிறைவேற்றிய வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முஹம்மது முபாரக் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜூன் 04 அன்று வெளியாகும் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் 21 எஸ்டிபிஐ கட்சியின் துவக்க தினத்தை மக்கள் நல திட்டங்களோடு மாநில முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சார பேச்சுக்களுக்கு கண்டனம்:
ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்குப் பொருந்தாத வெறுப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கும், அதனை கட்டுப்படுத்தாத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கும் இந்த செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்கு பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம்.
தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பேச்சுகளை, மதரீதியான விழிப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுத்து நிறுத்தி, தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயலற்றத் தன்மையை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான ஆரோக்கியமற்ற வெறுப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
எஸ்டிபிஐ கட்சியின் மக்கள் அரசியலின் 16ஆம் ஆண்டு துவக்க தினம்:
பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்கிற கொள்கை முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சிக்காக போராடிவரும் எஸ்டிபிஐ கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், ஆதரவற்றோருக்கான நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல், ரத்ததான முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுடன் கட்சி துவக்க தினத்தை கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டது.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழக முழுவதும் பரவலாக போதைப் பொருட்கள் பயன்பாடும் அது தொடர்பான
குற்றச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறிவருவது கண்கூடாகத் தெரிகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றுதல் என்கிற நடவடிக்கையை தாண்டி, அதன் பயன்பாடு, அதன் மூலம் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்தல், அதன் காரணமாக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாகவே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை அரசு தடுக்க முடியும்.
ஆகவே, போதையின் பிடியிலிருந்து தமிழக இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் புழக்கத்தில் மிக முக்கிய பங்கை டாஸ்மாக் வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆகவே எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவரும் மதுவிலக்கை அமல்படுத்தி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஒரு பொறுப்புள்ள அரசாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் பரவலாக நிகழும் மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வேண்டும்:
கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்களை இயக்க முடியாத சூழலும் நிலவுகின்றது. ஆகவே தமிழக அரசு இதனை கவனத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரிசெய்திட வேண்டும் என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்:
தமிழகத்தில் பரவலாக குடிநீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் காரணமாக உயர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆகவே குடிநீர் பிரச்சினையை சரிசெய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பை அதிகரிக்க மராமத்துப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
by Askar
written by Askar
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
கடந்த 1991 மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. அத்தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசு கருதுகிறது.
“இலங்கை உள்நாட்டுப் போட்டில் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டபோதும், தனி ஈழம் என்ற கொள்கையை அது இன்னும் கைவிடவில்லை. தனி ஈழம் அமைப்பதற்கான பிரசாரமும் நிதிதிரட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து ரகசியமாக இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், உயிர்தப்பிய விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகள் இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் அவ்வமைப்பை மீண்டும் கட்டமைப்பதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அவ்வியக்கத்திற்கு ஆதரவானோர் மக்களிடம் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றனர்.
“இந்தியாவிலும், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இது இந்திய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று இந்திய உள்துறை அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரளாவில் அடிச்சு வெளுக்க போகும் “கன” மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
by Askar
written by Askar
கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அதேசமயம் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மே 15 ஆம் தேதியும், பட்டினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, மாலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 16 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, இடுக்கி, மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 17 ஆம் தேதி மற்றும் மீண்டும் திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மே 18 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..
written by Abubakker Sithik
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் தற்போது கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு சமூகத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலை மதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயள்பெறுவார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண் உரிமையை நிலைநாட்டிய கலைஞர் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் வாயிலாக 1,82,656 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத் தலைவிகள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: (ஆவுடையம்மாள், தென்காசி) : என் பெயர் ஆவுடையம்மாள். சொந்த ஊர் தென்காசி. முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து வழங்கி வருகிறார்கள். இந்த பணம் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் எங்கள் எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் இதர சில்லரைச் செலவுகளை எங்களால் சமாளிக்க முடிகிறது. இதனால் எங்களுக்கு மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடிகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எங்களால் வாங்க முடிகிறது. இதனால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி.
பார்வதி தென்காசி மாவட்டம் அழகப்பபுரம்: என் பெயர் பார்வதி. சொந்த ஊர் தென்காசி மாவட்டம் அழகப்பபுரம் கிராமம். முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து இருக்கிறார்கள். மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குடும்பச் செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுகிறது. எந்த ஒரு அரசும் இது போல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியது இல்லை. எங்களைப் போல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த தொகை மிகவும் உதவியாக உள்ளது. எங்கள் குழந்தைகளின் சின்னச் சின்ன தேவைகளை நிறைவேற்றவும், அத்தியாவசியத் தேவைக்கும் இத்தொகை உதவியாக உள்ளது. இந்த நிதியை எங்களுக்கு வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்டம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை..
by syed abdulla
written by syed abdulla
நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை..
தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
மகப்பேறு நிதியுதவி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு சத்தான உணவு மற்றும் இணை உணவுகள் வழங்கப்பட வேண்டும்; குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இதற்கு மாறாக குழந்தை பிறந்து பல மாதங்களுக்குப் பிறகும், சில நிகழ்வுகளில் ஆண்டுகள் கடந்தும் கூட மகப்பேறு நிதியுதவி வழங்கப்படாததால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடுகிறது. கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களைக் காப்பதற்கான மகப்பேறு நிதியை வழங்குவதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாகவே மகப்பேறு நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதால், கருவுற்ற பெண்களின் விவரம், அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவை குறித்த விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு பதிவு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளால் தான் மகப்பேறு நிதி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் குறை உடனடியாக களையப்பட வேண்டும்.
மகப்பேறு நிதியுதவி பெறும் பெண்கள் அனைவரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஏழைகள் ஆவர். மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும், பிற உதவிகளும் அவர்களுக்கு மிகப்பெரியவை ஆகும். அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகளால் ஏழைப் பெண்களுக்கு கிடைக்கும் உதவிகள் பாதிக்கப்படக் கூடாது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைந்து 2 லட்சம் தாய்மார்களுக்கும் நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..
by Askar
written by Askar
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்தனர்.இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்து காவல்துறை வாகனம் மூலம் உரிய பாதுகாப்புடன் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி அழைத்து வரப்பட்டு அங்குள்ள மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து பெலிக்ஸ் ஜெராலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதன் பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெலிக்சை மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..
written by Abubakker Sithik
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம், கலை, பொறியியல், வடிவமைப்பு, விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிடைக்கும் தொழில் வேலைவாய்ப்புகள் சார்ந்து வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) 13.05.2024 அன்று தென்காசி இ.சி.ஈ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது, கல்லூரி கனவு எனும் இந்த நிகழ்ச்சியின் மூலம் உயர் கல்வியில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நம்முடைய சமுதாயத்தில் பள்ளிப்படிப்பே போதும் உயர்கல்வி எதற்கு என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. அதிலும் பெண் குழந்தைகள் கல்லூரிக்கு சென்று ஏன் படிக்க வேண்டும் என்ற மனநிலை பல பெற்றோரிடம் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு உயர் கல்வி மிகவும் அவசியமானது. பல்வேறு நாடுகளின் வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தால் வேளாண்மையை அதிக அளவில் சார்ந்திருக்கும் பொருளாதாரம் உள்ள நாடுகளில் ஏழ்மை அதிகமாக இருப்பதை அறியலாம். வேளாண்மையிலிருந்து தொழில் துறை சார்ந்த பொருளாதாரமாக மாறும் போது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ஆரம்பிக்கிறது. அதுவே சேவைத்துறை அதிக அளவில் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் போது மக்களின் வாழ்க்கை முறையிலும் வாழ்க்கை தரத்திலும் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தியா பொருளாதார ரீதியாக ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு அதிக அளவில் திறன் சார்ந்த மனிதவளம் தேவை. அதற்கு அதிக அளவில் உயர் கல்வி படித்த மக்களை உருவாக்குவது அவசியமாகிறது.
1980-இல் இந்தியா – சீனா இரண்டு நாடுகளின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதன் பிறகு, சீனா உயர் கல்விக்கு முக்கியத்துவம் தந்து பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 13,400 டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அது 2,730 டாலர் தான் (As per IMF report 2024). உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியச் செய்தி இது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம். பீஹார், உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் இதில் பின் தங்கியிருக்கின்றன. வட மாநிலங்களில் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதற்கு இது முக்கியக் காரணம். இந்தியாவில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 28.4%, ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 50% மேல். தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு முக்கியமான காரணமாகும். எனவே பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும். அதிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி கற்க முன்வர வேண்டும். அதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பெண் அதிகாரிகள் உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கல்வி கற்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் மூலமும், கல்விக்கடன் வழங்குவதன் மூலம் உயிர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகிறது. வேகமாக மாறிவரும் இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புகளும், புதிய தொழில் நுட்பங்களும் உதாரணமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆட்டோமேஷன் (Automation), மெஷின் லேர்னிங் (Machine learning), Virtual Reality போன்றவை தொழில்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏற்ப திறன் சார்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல்வேறு தொழில்கள் இன்று உள்ளது. அதேபோல இனி வரும் காலங்களிலும் பல்வேறு புதிய தொழில்களும், வேலை வாய்ப்புகளும் உருவாகும். அதனால் அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அதிக மார்க் வாங்கியவர்கள் தான் அனைத்து வசதியான வாழ்க்கையையும் வாழ்வார்கள் எனும் தவறான மனப்போக்கை மாணவர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய் என்று பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் முதலில் உயர் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது, அதில் என்னென்ன பட்டப்படிப்புகள் இருக்கிறது, அதில் நமக்கு விருப்பமான பட்டப்படிப்பு எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, பிடித்த. ஈடுபாடுள்ள துறையிலான படிப்பைத் தேர்வு செய்வது அவசியம்.
அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் ISRO, CSIR போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானியாக பணிபுரியலாம். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் அலோபதி. சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி போன்றவை படிக்கலாம். கால்நடை மருத்துவப் படிப்பான B.V.Sc., (B.P.T) பிபிடி எனப்படும் பிஸியோ தெரபி, பி.எஸ்.ஸி. நர்ஸிங், பிஃபார்ம் டிஃபார்ம் பார்மஸி படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஊடகத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பி.ஏ. ஊடகத்துறை, பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, ஜர்னலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பிளஸ் டூவில் வணிகம், கணக்குப்பிரிவு படித்த மாணவர்கள், பி.காம் படிக்கலாம். அதைத் தொடர்ந்து CA. CMA. ICWAL, ACS., ICS, பொறியாளருக்கு இணையான பதவியும், ஊதியமும் கிடைக்கும். உயர்ந்த நிறுவனங்களில் ஆடிட்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பி.பி.ஏ எனப்படும் மேலாண்மை படிப்பு பெரிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். எம்பிஏ முடித்தால் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி புரியலாம்.
உலகம் கணினிமயம் என்பதால் கணினித் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் பி.சி.ஏ. பி.எஸ்.ஸி கணினி அறிவியல் கல்வியில் சேரலாம். ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஓவியத்தில் திறமை இருப்பவர்கள் அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் BFA., படிப்பில் சேரலாம். இசைத்துறையில் ஆர்வமிக்கவர்கள் அரசு இசைக் கல்லூரிகளில் சேரலாம். திரைப்படத்துறையில் கால்பதிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் பல பிரிவுகளுக்கு டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி, புதிய டிஸைன்கள் வடிவமைப்பு போன்ற பட்டப்படிப்புகள் இதில் சொல்லித் தரப்படுகின்றன. சென்னை தரமணியில் ஒன்றிய அரசுக் கல்லூரியான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (NIFT) என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயிலலாம். பி.எஸ்.சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை போன்ற வேளாண் படிப்புகள் படிக்கலாம். பி.டெக் எனும் Food Process Engineering படிப்பு வேலை வாய்ப்புள்ள படிப்பு தான். சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை போன்ற படிப்புகள் நேரிடையாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும். ஐடி நிறுவனங்கள் மட்டும் தான் வெளிநாடுகளில் பணிவாய்ப்பு வழங்கும் என்றில்லாமல் உணவுத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகள் விமானம், கப்பல் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் புகழ்பெற்ற சமையல் நிபுணராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கும்.
தற்போது பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி, டயட்டீஷியன், ஹோம் சயின்ஸ், உளவியல் போன்ற பட்டப்படிப்புகளையும் படிக்கலாம். பொறியியல் துறையில் அகில இந்திய அளவில் பி.இ. பி.டெக்., படிக்க விரும்பும் மாணவர்கள் ஐ.ஐ.டி.,என்.ஐ.டி நிறுவனங்களில் சேரலாம். இதற்கென பிரத்யேக நுழைவுத்தேர்வுகள் உண்டு. ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்.ஐ.டி.யிலும் ஜே.இ.இ.அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டியிலும் சேர்ந்து படிக்கலாம். இவற்றைத் தவிர்த்து பொறியியல் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறை இல்லாமல் கலந்தாய்வு முறையில் சேர்க்கை நடைபெறுகிறது. இது தவிர்த்து பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் விரிவாக விளக்குவார்கள். மேலும் UPSC, TNPSC, SSC, Railway Exams Bank Exams போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதுவதற்கும் உயர் கல்வி அவசியமானது. எனவே, அனைத்து மாணவ மாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான துறையில் உயர்கல்வி தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நான் முதல்வன் என்னும் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகார் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 முன்னாள் அரசு பள்ளி மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை) காணொலி காட்சி வாயிலாக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். போட்டித் தேர்வின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி மதிவதனா, மாவட்ட பதிவாளர் (கூட்டுறவு) செல்வி.பூர்விஷா, மாவட்ட பதிவாளர் (பொது நிதி நிர்வாகம்) செல்வி திவ்யா, வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்), செல்வி.கவிதா. மாவட்ட பதிவாளர் அணு ஸ்வாதிகா, செல்வி.இன்பா (UPSC). செல்வன்.பேச்சி முத்து (UPSC) ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தார்க்ள்.
உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது எப்படி என அனிதா (உயர்கல்வி ஆலோசகர், பாரதியார் பல்கலைக்கழகம், விரிவாக்கம், தொழில் வழிகாட்டுதல் மற்றும் மாணவர் நலன் துறை) விளக்கி பேசினார். பொறியியல் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஏ.பழனிச்சாமி (துறைத்தலைவர்) சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம்) எடுத்துரைத்தார். கலை மற்றும் கலை சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் விக்டோரியா தங்கம் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்) விளக்கமாக எடுத்துரைத்தார். அறிவியல் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் சுந்தரம் (தலைமையாசிரியர்) விளக்கி பேசினார்.
மனிதநேயம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் பாலச்சந்தர் (துறைத்தலைவர் & உதவி பேராசிரியர், வணிக நிர்வாகத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குளம்) விளக்கமாக எடுத்துரைத்தார். செந்தில்நாதன் (இணைத்தலைவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், திருச்சி) மற்றும் லட்சுமணன் (தொழில் நுட்ப மேலாளர் ஜப்பான்) ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து பேசினார்கள். நான் முதல்வன் திட்டத்தின் சிறப்புகள் குறித்து கல்யாண்குமார் (மாவட்ட திட்ட மேலாளர், நான் முதல்வன் திட்டம்) விளக்கி பேசினார். மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கல்விக்கடன் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கீதா சின்னராணி (முதன்மைக்கல்வி அலுவலர், தென்காசி) அனைவரையும் வரவேற்று பேசினார். பிராங்க்ளின் (உதவி இயக்குநர், மாவட்ட திறன் வளர்ச்சி அலுவலகம்) நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம், கலை, பொறியியல், வடிவமைப்பு, விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிடைக்கும் தொழில் வேலைவாய்ப்புகள் சார்ந்து வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் கடனுதவிகள் சார்ந்து விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறையினை சேர்ந்த வங்கிகள், கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்து வசதி, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை, பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா..
written by Abubakker Sithik
பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ..
கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் S.சிவஆனந்த்,.மாவட்ட கழக இணை செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட கழகத் துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட கழக பொருளாளர் சண்முகையா உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள் உட்பட பலர் உடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம் இவர் தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ளதனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக கை வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பாலமேடு அருகே கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு !
by Baker BAker
written by Baker BAker
.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23).கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளம் போல் தேங்கியிருந்த நீரில் மிதந்ந நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரசேகர் கல்குவாரி பள்ளத்திற்கு எதற்காக வந்தார் என்றும், இறப்புக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அப் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது விபத்து மரணமா? என்பது குறித்து அவர் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பாலமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் விவசாய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
4-ம் கட்ட தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குப்பதிவு..
by Askar
written by Askar
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.மாலை 5 மணி நேர நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.ஆந்திரா- 68.04 சதவீதம், பீகார்- 54.14 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 35.75 சதவீதம், ஜார்கண்ட் 63.14 சதவீதம், மத்திய பிரதேசம் 68.01 சதவீதம், மகாராஷ்டிரா 52.49 சதவீதம், ஒடிசா 62.96 சதவீதம், தெலங்கானா61.16 சதவீதம், உத்தர பிரதசேம் 56.35 சதவீதம், மேற்குவங்கம் 75.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மணி நேர நிலவரப்படி 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
by Askar
written by Askar
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.