வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. வேலூர் சரக டிஐஜி சென்ற மாதம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து எச்சரித்தார்.ஆனால் சில நாட்களாக சில ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில்தாறுமாறாக சென்று கொண்டுதான் உள்ளன.இந்நிலையில் நேற்று 18-ம் தேதி வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாக பழைய பஸ் நிலையம் சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
உடன் மேயர் சுஜாதா, மாநகராட்சிஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கன்னியப்பன் மற்றும் அலுவலர் இருந்தனர்.
செய்திகள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ரயில்பாதையில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து இருப்பதாக காட்பாடி ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் முரளி மனோகர், இறந்த வாலிபரின் பிரேதத்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த வாலிபர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஜனை கோயில்தெருவில் வசித்த கார்க்கி என்பவரின் மகன் அரசு(45) என்று தெரியவந்தது. இவர் சிறியளவில் இசை கச்சேரி நடத்திவந்தார்.நேற்று காலை ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையிலிருந்து காட்பாடி சென்ற ரயில் மோதி பலியானது தெரியவந்தது.
இறந்த அரசுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடக மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இஸ்லாமிய சமூத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாஅத்கள்,அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 18.03.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே தவ்ஹீத் ஜமாத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முஹம்மது ஒலி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் ஜலாலுதீன், துணைத் தலைவர் மசூது சாகிப், துணை செயலாளர்கள் ஹாஜா,பீர்முகமது, அன்வர் சாதிக், தொண்டரணி செயலாளர் புகாரி மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர் மூவர்ண உடை அணிந்தும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் தலையில் தேசியக்கொடி வண்ணத்தில் மப்தா அணிந்து பங்கேற்றனர். இதற்கான பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேந்திரன் டிஎஸ்பிக்கள் கணேஷ், பொண்ணரசு, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜாராம் ,வேல்கனி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம்;ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு..
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்காசி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் புளியங்குடியில் நடந்தது. மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. புளியங்குடியில் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் அருணாசலம் தலைமையில் நடந்தது. இதில் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் முகைதீன் கலந்து கொண்டார். கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், அதற்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புளியங்குடி காமராஜர் சிலை அருகே 25.03.2022 வெள்ளிக்கிழமை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞரணி தலைவர் ஜெர்ன் குமார்,மாநில ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் நெல்லை த.அ. உமர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேனி மணிகண்டன் ஆகியோர்களை கண்டன உரையாற்ற அழைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் அனைத்து நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வு அலுவலகம்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்டிஓ அலுவலகம் அமைந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அலுவலகம் வேறு எந்த பகுதியிலும் இல்லை. ஆலங்குளம் வளர்ந்து வரும் பெரிய நகரமாகும். இங்கு அரிசி ஆலைகள், காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகள் மற்றும் சிறு குறு தொழில்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் அதிபடியாக விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் வாகனங்கள் அதிகமாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்ற அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் அருகில் இருந்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் பயிற்சி வகுப்புகள்; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17.03.2022 வியாழக்கிழமை க்ரையான்ஸ் ஓவிய பயிற்சி நடத்தப்பட்டது. இந்த ஓவிய பயிற்சியினை சபாநாயகர் மு அப்பாவு துவங்கி வைத்தார். இப் பயிற்சியினை சேரன் கவின் கலைக் கழகம் சிவராமகிருஷ்ணன் மற்றும் வீராசாமி ஆகியோர் நடத்தினர். புனித இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாளான 18.03.2022 வெள்ளிக்கிழமை காகிதக் கலை பயிற்சி நடத்தப்பட்டது. வண்ண தாள்கள் கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் இந்த பயிற்சியினை வருவாய் அலுவலர் சுகன்யா அவர்கள் துவங்கி வைத்தார். இப் பயிற்சியினை கலையாசிரியர் சொர்ணம் நடத்தினார். சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இன்று பனை ஓலை கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புகையிலை பொருட்கள் அழிப்பு..
புளியங்குடி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 1 டன் புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு காவல் துறையினரால் 1.200 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அழிப்பதற்காக புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் சிவகிரி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியதை தொடர்ந்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், புளியங்குடியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுவான இரண்டு நபர்களின் முன்னிலையில் 1.200 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி)பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல் : இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி)பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல் : இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக நலன் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் நடத்தினார்.உலக நலன் மற்றும் ஆன்மீக எழுச்சி வேண்டியும் உலகில் இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருக்கவும் சென்னை புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அக்னி ஜுவாலைக்கு நடுவே ஒன்றரை மணிநேரம் தவமிருந்தது பக்தர்களுக்கு இடையே நெகிழ்ச்சியை உண்டாக்கியதுபரத்வாஜ் சுவாமிகள்சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரை பழங்கா நத்தத்தில் இன்று பஞ்ச அக்னியில் தவமிருந்து மகா வராகியை தியானம் செய்தார்மௌன நிலையில் யாரிடமும் பேசாமல் நேற்று பௌர்ணமியில் தொடங்கி எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளான பங்குனி உத்திரம் தினத்தன்று இன்று மதுரை மீனாக்ஷி அம்மனின் அருள் ஆட்சி பீடமான மதுரை பழங்காநத்தம் பகுதியில் வேத காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் செய்தது போல எந்த ஆரவாரமின்றி ஒரு நிலைப்பாட்டோடு தீ நாக்குகள் வளைந்து வளைந்து வந்த போதும் நெக்குருக தேச மக்கள் நலன் பெற வேண்டியும் ஆன்மீக எழுச்சி வளரவும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அக்னி ஜுவாலை கிடையே தவமிருந்தது பக்தர்களுக்கு இடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் உண்டாக்கியதுபரத்வாஜ் ஸ்வாமிகள் மேலும் கூறியதாவதுஒவ்வொருவரும் உயிர்களிடத்தில் செடிகொடிகள் பிராணிகள் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும். மனிதகுலம் அரக்க குணத்தை விட்டு இரக்க குணத்தை கடைபிடிக்க வேண்டும்.அக ஒழுக்கத்தை
யும் புற ஒழுக்கத்தையும் ஆண் பெண் இருபாலரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்எவரிடத்திலும் அன்பு காட்டுவதோடு மட்டுமன்றி மனசாட்சிக்கு பயந்து ஒவ்வொருசெயலையும் செய்யவேண்டும் என்று கூறினார்இன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணிநேரம் பஞ்சாக்னி ஜெபத்தை ஸ்வாமிகள் செய்ததைப் பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.பரத்வாஜ் சுவாமிகள் அக்னியையும் சூரியனையும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வேள்வியை நிறைவு செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சித்தூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு கடத்த முயன்ற 15 கிலோ கஞ்சா காட்பாடியில் சிக்கியது.
வேலூர் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் நேற்று காட்பாடி அடுத்த கிறிஸ்தியன் பேட்டை செக்போஸ்டில் சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றை நிறுத்தி உள்ளே சென்று ஆய்வு செய்தனர் அப்போது சந்தேகத்தின் பெயரில் 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் முப்பத்தி ஆறு ராஜமுந்திரி சேர்ந்த ஜெகதீஷ் சாய் 20 என்பது தெரியவந்தது இவர்கள் கஞ்சாவை சித்தூர் பைபாஸில் வைத்து வாங்கியதும் இதை பாளையங்கோட்டைக்கு சென்று விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது தொடர்ந்து பஸ் மேற்கூரையில் இரண்டு மூட்டைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையான காட்பாடி அடுத்த கிறிஸ்தியன் பேட்டை செக்போஸ்டில் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது இதையும் மீறி இந்த செக்போஸ்ட் வழியாக போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தப்பட்டு தமிழ் காட்பாடி வழியாக வேலூர் வந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கஞ்சா அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று மதுரைக்கு வந்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது தமிழிசைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. தொடர்ந்து கோவில் யானை ஆசீர்வாதம் வழங்கியது.அதன்பிறகு தமிழிசை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நிதியிலும் சாமி தரிசனம் செய்தார். சுமார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 45 நிமிட நேரம் தரிசனம் செய்த தமிழிசை, அம்மன் சந்நிதி வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு 4000 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161 ன் படி நீண்ட காலமாக சிறைவாசிகளாக இருந்து வருகிற அனைத்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையிலும், நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் மதுரை இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் இருந்து பேரணியாக வந்து மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் சுமார் 4000 அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் தபால் பெட்டியில் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்த, ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிறந்த தினம் இன்று (மார்ச் 18, 1838).
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) மார்ச் 18, 1858 ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். அவரது பெற்றோர் தியோடர் டீசல் பாரிஸில் வசிக்கும் பவேரிய குடியேறியவர்கள். வர்த்தக அடிப்படையில் ஒரு புத்தக விற்பனையாளர். 1848ல் தனது சொந்த ஊரான பவேரியாவின் ஆக்ஸ்பர்க் நகரிலிருந்து வெளியேறினார். டீசல் பிறந்த சில வாரங்களிலேயே, ஒரு வின்சென்ஸ் விவசாயி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அங்கு அவர் தனது முதல் ஒன்பது மாதங்களை கழித்தார். அவர் தனது குடும்பத்தினரிடம் திரும்பியபோது, டீசல் குடும்பம் நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. இதனால் இளம் ருடால்ப் டீசல் தனது தந்தையின் பட்டறையில் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒரு பரோவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தோல் பொருட்களை வழங்க வேண்டியிருந்தது. அவர் ஒரு புராட்டஸ்டன்ட்-பிரெஞ்சு பள்ளியில் பயின்றார். விரைவில் சமூக கேள்விகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். ஒரு நல்ல மாணவராக இருந்ததால், 12 வயதான டீசல் சொசைட்டி பர்.எல் இன்ஸ்ட்ரக்ஷன் எல்மென்டேர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
அதே ஆண்டு பிராங்கோ-ப்ருஷியப் போர் வெடித்தபோது, அவரது குடும்பத்தினர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் இங்கிலாந்தின் லண்டனில் குடியேறினர். அங்கு டீசல் ஒரு ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், டீசலின் தாய் 12 வயது ருடால்பை தனது அத்தை மற்றும் மாமா பார்பரா மற்றும் கிறிஸ்டோஃப் பார்னிகல் ஆகியோருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் சரளமாகவும் பேச மற்றும் அங்கு அவரது மாமா கணிதம் கற்பித்தார். தனது 14 வயதில், ஒரு பொறியியலாளர் ஆக விரும்புவதாக டீசல் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். 1873 ஆம் ஆண்டில் தனது அடிப்படைக் கல்வியை முடித்த பின்னர், புதிதாக நிறுவப்பட்ட ஆக்ஸ்பர்க் தொழில்துறை பள்ளியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் முனிச்சின் ராயல் பவேரியன் பாலிடெக்னிக் நிறுவனத்திடமிருந்து ஒரு தகுதி உதவித்தொகையைப் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு குளிர்சாதன பெட்டிகள் தயாரித்தல், உயர் அழுத்த இயந்திரங்கள் மற்றும் வெப்ப இயந்திரங்கள் குறித்த ஆராய்ச்சி தொழிற்சாலையில் பணியாற்றினார். பாரில் உள்ள விண்டோ ஜஸ் இயந்திர ருடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1885 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1890ல் பெர்லினில் சென்றார், உள் எரிப்பு இயந்திரங்கள் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக 1897 இல் டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்தார். அப்போதிருந்து டீசல் என்ஜின்கள் கப்பல் என்ஜின்களாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. மேதும் என்ஜின்களின் எடை ஆராய்ச்சியாளர்களால் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அவை வாகனங்கள் மற்றும் பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. டீசல் என்ஜின் இயந்திரத்தில் கடலை எண்ணெய் பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினர்.
1913 ஆம் ஆண்டில் வெற்றியின் உச்சியில் உச்சத்தில் டிரஸ்டன் டெக் திடீரென இங்கிலாந்து செல்லும் வழியில் காணாமல் போனது. 1901ல் எல்லியட் கிரொசான் பதக்கம் வழங்கப்பட்டது. புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் செப்டம்பர் 29, 1913 தனது 55வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை,ஒத்தக்கடையில் உள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர்,’கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, 12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருது வழங்கும் விழா” கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா.
விருது வழங்கும் விழா” கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா கொண்டாடப்பட்டது* மதுரைசேவா ரத்னா டாக்டர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் – ன் சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதை விருதுநகர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் ஆ.மணிவண்ணன் விருது வழங்கினார். நகைச்சுவை மன்ற உறுப்பினர் வீரமணி நேரில் வாழ்த்து தெரிவித்தார். எஸ்.டி.சுப்பிரமணியன்,அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, கருங்காலக்குடி சந்துரு, சாதிக், ராஜா, மீசை தங்கராஜ், தங்கப்பாண்டி, செந்தில் ராஜன், எஸ்.டி.எஸ்.மீனா, மாளவிகா, நிரோஷ், சீமா, மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழுவினர்களும், தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்களும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் சி.எம்.வினோத், சங்க அலுவலக மேலாளர் பாலா அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா பொட்ட கானிபள்ளி விவசாயி ஆனந்த் (28) 15 அடிமரத்திலிருந்து தவறி விழுந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தனர். அதன்படி கல்லீரல், சிறுநீரகம், கண்தானமாக பெறப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் திருமதி.இளமதி. சிறுவன் வீட்டிற்கே சென்று வாழ்த்து.
திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், பல்வேறு குர்ஆன் வசனங்கள், ஐந்து நிமிடங்கள் தலைகீழாக நிற்பது, ஒற்றைக் கையில் சைக்கிள் ஓட்டுதல், பல நிறங்களையும் பல்வேறு தலைப்புகளையும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அரபி, ஆகிய நான்கு மொழிகளில் கூறியும், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 26.35 செகண்டில் கூறியும் மேலும் இது போன்ற கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தனது தனி திறன் கொண்டு அறிந்து ஒப்புவித்து உலக சாதனை படைத்து “கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இதனை அறிந்த திண்டுக்கல் மேயர் திருமதி.இளமதி அவர்கள் திண்டுக்கல் மதார்பாவா தெருவில் வசித்துவரும் சிறுவன் முகம்மது இக்ராம் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.மேலும் எனது ஊரைச் சேர்ந்த சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று திண்டுக்கல்லுக்கு மாபெரும் பெருமையை தேடி தந்துள்ளார் எனக்கூறினார்.சிறுவனின் தாய் நவ்ரின் தந்தை கிதர் முகமது இருவரையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டலின் படியும் திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்ஙி பாடுபடுவோம் என கூறினார்.இது சம்பந்தமாக சிறுவன் முகம்மது இக்ராமின் குடும்பத்தினர் கூறியதாவது;பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் வளர்ந்து விடுவார்கள் அப்படி அல்லாமல் அவர்களின் திறமைகளை ஆற்றல்களை பெற்றோர் கண்டறிந்து அதன் பக்கம் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும்; மதிப்பிற்குரிய திண்டுக்கல் மேயர் திருமதி. இளமதி அவர்கள் வீட்டிற்கு வந்து பாராட்டுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளது சிறுவனின் வளர்ச்சிக்கு மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கம் நிகழ்வின் போது நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், அதனை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இளவேலங்கால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நடுகற்கள் பற்றியும் மாணவிகளிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மரபு நடைபயணமாக கிருஷ்ணாபுரம் கோயில் மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் ஏதீஷ்குமார் அகழாய்வு பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது ஆய்வு மாணவர்கள் அருண் குமார் மற்றும் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர். இப் பயிலரங்கம் மற்றும் மரபுநடை பயணத்தில் ராணி அண்ணா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் உமாதேவி, சுதாமதி, சகாயமேரி ஆகியோர் உடன் வந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமண விழாவில் வரும் மொய் பணம் அனைத்தையும் ஆதரவற்றோருக்கு வழங்கிய தம்பதியினர்.
மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை மதுரை பாலரங்காபுரம் இதில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது.இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் மொய்யை குறி வைத்தே நடத்தப்படுகிறது.இச்சூழலில் மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.திருமண விழாவுக்கு நாமும் சென்றோம். மொய் எழுதும் மேஜை அருகே காகித உறைகளையும் பேனாவும் வைத்திருந்தார்கள். மொய் வைக்க நினைபவர்கள் தங்கள் பெயரை எழுதி தொகையை உறைக்குள் வைத்து அருகிளுள்ள பானைக்குள் போட்டு சென்றார்கள். யார் எவ்வளவு பணம் என்பதையும் குறிப்பிடவில்லை. அவர்கள் வைத்த மொய்யை நோட்டிலும் எழுதவில்லை.இதுகுறித்து மணமகளின் தந்தை ஆத்மராவிடம் பேசினோம், “என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதுக்கு ஒத்துக்கல. இத நான் பப்பளிசிட்டிக்காக பண்ணல, மன திருப்திக்காகவும் இதைப்பார்த்து இன்னும் பல பேர் ஆதரவற்றோர்களுக்கு உதவ முன் வரணும் என்கிற எண்ணத்தாலும்தான். எவ்வளவு மொய்ப்பணம் வந்தாலும் அதை மொத்தமா கொடுக்கப் போறோம்.” என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.