இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகர் செல்வம். இவரது மகன்கள் சுரேஷ்குமார் 37, குமார், 34. இருவரும் மீனவர்கள். சுரேஷ்குமாருக்கு 2 பெண் குழந்தைகள், குமாருக்கு தலா ஒரு பெண், ஆண் குழந்தை உள்ள்னர். இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் வந்த இருவரும், மாலை வீடு திரும்பினர். அரசு போக்குவரத்து கழக பணி மனை பகுதியை விரைவாக கடக்க முயன்றபோது சாலையில் குறுக்கிட்டவர் மீது இரு சக்கர வாகனம் மோதாமலிருக்க சுரேஷ்குமார் துரிதமாக பிரேக் அணைத்தார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது அது வழியாகச் சென்ற வேன் சக்கரத்தில் சிக்கிய சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் , மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து இராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Category:
செய்திகள்
திருநெல்வேலி இரயில் நிலையத்தில் 70 வயது மதிக்கதக்க வடமாநிலத்தை சேர்ந்த முதியவருக்கு 13.08.19 அன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.அதனை கண்ட அங்கு பணியில் இருந்த நெல்லை சந்திப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் விரைந்து செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதலுதவி அளித்து அவரது உயிரை காப்பாற்றினார்.
பின்னர் முதியவரை விசாரித்ததில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் தாஸ் என்பது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் இச்செயலை அங்கு இருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.இத்தகவலறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் பாராட்டு தெரிவித்தார்கள்.தனது உயிரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரையும் 108 ஊழியரையும் முதியவர் வாழ்த்தினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னீர்பள்ளம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பிளாஸ்டிக் தவிர்க்க மாணவர்களுக்கு சில்வர் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம், முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கபில்சுப்ரமணியன் தலைமை வகித்தார். ‘நேதாஜி அன்பு கரங்கள் அறக்கட்டளை’ தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மனோகர், அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கபில்சுப்ரமணியன் தேசியக் கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
இதையடுத்து, பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், மாணவ – மாணவியரிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 32 பேருக்கு உள்ளூர் பனியன் தயாரிப்பாளர் இசக்கிமுத்து மற்றும் ஆசிரியர் காந்திராஜா ஆகியோர் இணைந்து சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கினர்.தொடர்ந்து, மாணவ – மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசியர்கள் காந்திராஜா, கோமதி, வீரலட்சுமி, சுதா ஆகியோர் செய்திருந்தனர். நிறைவில், ஆசிரியர் காந்திராஜா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்தில் இறந்த வளர்ப்பு நாயின் உடலை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.இதுகுறித்த விவரம் வருமாறு; தெலுங்கான மாநிலம் நிஜாமாபாத் நகரில் உள்ள போயகாலி காலனியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 14 ஆண்டுகளாக தங்கள் காலனி பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். ஷியாம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அந்த ஆண் நாயை, காலனியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்போல் பராமரித்து வந்தனர்.அதுபோல், தன் மீது மக்கள் செலுத்திய அன்புக்கு ஏற்ற வகையில், அந்த நாயும் மிகவும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் காலனிவாசிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த அந்த நாயை காலனி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நாய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இதையறிந்ததும், தங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்ததுபோல் துடித்த காலனிவாசிகள், அந்த நாயை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, நாய் உடலை மலர்களால் அலங்கரித்து ஒரு வேனில் கிடத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.பின்னர், ஊர் பொது மயானத்துக்கு நாய் உடலை கொண்டு சென்று, இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தினர். பலரும் அங்கு வந்து நாய் உடலுக்கு வாய்க்கரிசி, வாய்க்காசு போட்டு வணங்கினர்.இதையடுத்து, அங்கு தயாராக தோண்டப்பட்டிருந்த குழியில் நாய் உடலை கிடத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். நாய் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பலரும் விழுந்து வணங்கி கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினர்.ஒரு வளர்ப்பு நாயின் மரணத்தை, தங்கள் உறவினர் மரணம்போல பாவித்து இறுதி மரியாதை செலுத்திய இந்த மக்களின் செயல், கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழைநீரை பாதுகாக்கும் விதமாக செயல்படுத்தப்படும் திட்டமான ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் சீர்கேடுகளுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து, வெளியே வந்த விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறியபோது, தேசிய அளவில் மழைநீர் சேமிப்பை வலுப்படுத்த, ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மழை நீரை பாதுகாக்க செய்யப்பட்ட திட்டங்கள் பலனளிக்கவில்லை தோல்வியடைந்து விட்டது. ஜல்சக்தி அபியான் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு, செலவாகும் தொகையை விட, பலமடங்கு அதிகமாக பில் போடப்பட்டு பணம் முறைகேடாக எடுக்கப்படுகிறது. அதிக அளவிலான ஊழல் நடைபெறுகிறது. ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் திட்டமாக மாறிப்போனது என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மூர்த்தி, திருவண்ணாமலை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16/08/2019 மாலை 03.00 மணியளவில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் தலைமையில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் K.மெகருன்னிஷா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினர் C.சரவணன்,உதவிப் பேராசிரியர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை, அவர்கள் தான் தேர்ந்தெடுத்த பாடத்தில் திறனை வளர்க்குமாறும், தீய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நற்குணத்தை வளர்க்குமாறு மாணவிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை ஆங்கிலத் துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை ஒன்றியத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் குடி மராமத்து பணிகள் துவக்கம்
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , சிலுக்குவார்பட்டி வேம்பன் குல கம்மாய் , கோட்டூர் ஊராட்சி கூலீஸ் ஈஸ்வரன் கம்மாய் , ஆகிய 4 ஊராட்சிகளில் 35 ஊரணி , 9 குளங்களும் தூர்வாரும் பணி தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து பணி யில் இருந்து 80 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மண்டல அலுவலர் சதீஷ் பாபு தலைமையில் துவங்கப்பட்டது.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர்கள், முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன் , உதவி செயற்பொறியாளர் வெற்றி வீரன், உதவிப் பொறியாளர் டெல்லி பாபு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, ஊராட்சி கழக செயலாளர்கள் ஜெயசீலன், விஜய பாலமுருகன், ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகரில் சகோதர சமுதாய மக்களை அழைத்து, நடத்த இருக்கும் ”சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி” இன்ஷா அல்லாஹ்.. (17.08.2019) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், ஹுசைனியா மஹாலில், விருந்து உபசரிப்புடன் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியினை கீழக்கரை சமூக நல அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் கீழக்கரையில் மழை இல்லாமலே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சில சாரல் மழையாக பேய்ந்தது.
இன்று (16/08/2019) மாலை நான்கு மணிமுதல் மேகம் நன்றாக இருட்டி ஜில்லென்று காற்றுடன் மிகவும் குளிர்ச்சியாக இருந்து வந்தது. அதனைத்தொடர்ந்து காற்றுடன் மழை பேய்ந்து வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் தமிழக அரசால் டிஎன்டி சான்றிதழ் கிடைத்ததை கொண்டாடும் வகையில் கிடாவெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
by mohan
written by mohan
டிஎன்டி சான்றிதழ் கேட்டு கடந்த சில வருடங்களாக போராடி பல போராட்டங்களுக்கு பின் தமிழக அரசால் டிஎன்டி சான்றிதழ் வழங்க தமிழக அரசு இதற்கென தனி அரசானை வெளியிட்டு டிஎன்டி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களில் டிஎன்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ் நீண்ட நாட்களுக்கு பிறகு டிஎன்டி என கிடைத்துள்ளதால் இதனை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பா பட்டி கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் சீர்மரபினர் நல சங்கம் மற்றும் பொது மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதனை தொடர்ந்து கிடா வெட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மேலும் சீர்மரபினர் நல சங்க மாநில செயற்குழு தலைவர் சோலைராஜா, சீர்மரபினர் நல சங்க மாநில பொருளாளர் தவமணி அம்மாள் , மாநில ஒருங்கிணைப்பாளர் ஒச் சாத்தேவன், ஆசை ராஜன், மூர்த்தி, முத்துராமலிங்கம், முருகன், காசிமாயன், ஜெயபாலன், மற்றும் சீர்மரபினர் நல சங்கத்தின் மாநில செயலாளர் ஆதிசேடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சாா்பில் கீழக்கரை வட்டாச்சியா் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2015-16 ம் ஆண்டில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.கழிப்பறை கட்டப்பட்ட ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இதனை உபயோகப்படுத்தி வந்தனா்.நாளடைவில் இக்கழிப்பறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.சமூக விரோதிகள் தண்ணி அடிக்கும் இடமாகுமாக மாறியுள்ளது.அவா்கள் போதையில் கழிப்பறையிலுள்ள தண்ணீா் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.எனவே பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி கழிப்பறையை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோாிக்கை விடுத்துள்ளனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை ஒன்றிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.!
by mohan
written by mohan
நிலக்கோட்டை ஒன்றிய அளவில் 14 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான கபடி போட்டி நிலக்கோட்டை HNUPR பள்ளியில் நடைப்பெற்றது.இப்போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இதனை அடுத்து சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,ஆசிரியை கு.நா.லட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்,தலைமை ஆசிரியர் விஜயகுமார் சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்றினார், பிறகு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற்றன.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,HNUPR பள்ளியில் ஒன்றிய அளவில் நடைபெற்றகபடி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர் சுதர்ஸன் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கியது மட்டும் அல்லாமல். இப்பள்ளியின் தாளாளர் சுதாகரன், தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்கள் கூறினர்.ஆசிரியை ரா.ராஜி நன்றியுரை கூறினார் பிறகு நாட்டுப் பண்பாட விழா இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா
by mohan
written by mohan
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைப்பெற்றது. பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவி லிபிகா ஜனனி தாயார் ஜெய ரூபா தனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்கள். பள்ளி முதல்வர் சாஹிரா பானு விழாவிற்கு தலைமையேற்றினார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன
இவ்விழாவில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சிராஜுதீன் மற்றும் மேலாளர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரையூர் கிராம சபையில் மக்கள் பாதை இயகத்தின் சார்பில் மக்கள் பங்கெடுப்பு…..
by mohan
written by mohan
மக்கள் பாதை சார்பாக கமுதி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட பேரையூர் ஊராட்சியில் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற எழுத்தர் ரமேஷ் குமார், கமுதி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,மக்கள் பாதை பேரையூர் ஊராட்சி பொறுப்பாளர் ம.மனோஜ் பிரபாகரன், சேர்ந்தகோட்டை கிராம மக்கள் பாதை திட்ட பொறுப்பாளர் பாபு, மக்கள் பாதை உறுப்பினர்கள் சூரிய பிரகாஷ்,யோக குமார் மற்றும் புதுவாழ்வுதிட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் கிராம மக்கள் கலந்துகொண்டு 7 கிராமங்களுக்கான தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையேற்று, வி73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழிப்புணர்வு பேரணிழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் பள்ளியின் தாளாளருமான சி.த செல்ல பாண்டியன், முன்னிலை வகித்தார் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பள்ளியின் தலைமையாசியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் வரவேற்று பேசினர்..மாணவர்கள் தேசதலைவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜர் போன்று முகமூடி அணிந்து பேரணி சென்றனர். பள்ளியின் முன்பு பேரணி துவங்கி மட்டக்கடை 1ம் கேட் வழியாக மாநகராட்சி வந்து பின்பு பள்ளியை வந்தடைந்தது..பேரணிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் கிளாட்சன் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், நாட்டு நலப்பணி இயக்க பொறுப்பாசிரியர் பேட்ரிக் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர் அதனாசியஸ், மதுரம், பட்டதாரி ஆசிரியர் செல்வின் ஜெயக்குமார் பால்ராஜ் ,ஜெயமணி, மனோ,போன்றோர் செய்திருந்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு
by mohan
written by mohan
சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மக்காச்சோள படைப்புழு தாக்குதலுக்கு தமிழக அரசு வழங்கிய முழு நிவாரணத் தொகை வழங்காமல் மிகவும் மோசமாக குறைத்து வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விருதுநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் ஸ்ரீராம் பாபநாசம் செல்வம் திருவேங்கட ராமானுஜம் மற்றும் ஆகியோர் உடன் விவசாயிகள் கோட்டாட்சியர்அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் நிவாரண தொகை குறைத்து வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி முழு தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிருணஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தில் டாஸ்மாக் ஊழியர் எஸ்.ராஜா என்பவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, கடையில் கொள்ளையடித்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
டாஸ்மாக் சங்க தொமுச தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தொமுச பேரவை பொதுச் செயலாளர் க.சௌந்தரராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி மற்றும் எஸ்.ஆனந்தன், ஏஐடியுசி நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்தையன், மற்றும் மாதேஸ்வரன், இரா. தங்கராஜ், விசிக நிர்வாகிகள் வழக்கறிஞர் க.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து சங்கங்கள் சார்பில் தொமுச ஆறுமுகம், சிஐடியு வெங்கடேசன் ஏஐடியுசி வரதராஜன், பாட்டாளி தொழிற் சங்கம் செல்வராஜ் முத்துகனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்., பாதுகாப்பற்ற இடங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூர்த்தி, திருவண்ணாமலை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா… பள்ளிக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த கீழை நியூஸ் நிர்வாகத்துக்கு வாழ்த்து..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கீழக்கரை நாடார் மகாஜன சங்கத்தலைவரும் கீழக்கரை நாடார் மெட்ரிக் கல்விக்குழு உறுப்பினர் KRT.கிருஷ்ண மூர்த்தி மற்றும் கும்பிடு மதுரை ஜமாத் தலைவர் மற்றும் பொருப்பாளர்கள், இளைஞர் சங்க தலைவர் மற்றும் பொருப்பாளர்களும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
சிறப்பு பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கீழை நீயூஸ் நிர்வாகத்தின் நிறுவனர் செய்யது ஆப்தீன் முயற்சியால் பள்ளிக்கு வழங்கப்பட்ட மாணவர்கள் அமரும் சேர், வட்ட வடிவ மேஜைகள், பள்ளிக்குஸ்மார்ட் டிவி, கனிணி மானிட்டர், பிரிண்டர் வழங்கியதை பெற்றோர்களுக்கும் வந்திருந்திருந்த அனைக்கும் தெரிவிக்கப்பட்டு கீழை நியூஸ் நிர்வாகத்துக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் “73வது சுதந்திர தின விழா” 15.08.2019 அன்று காலை 9.00 மணி அளவில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் சென்சாய் M.P விஜய் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் பின் சுதந்திர விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சினை 6 ஆம் வகுப்பு மாணவன் H. முகமது இர்பான் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் S.N. ஆலியா வரவேற்புரை வழங்கினார். பின் மாணவர்களுக்கு எண்ணங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் எண்ணம் தான் நம் வாழ்க்கையின் மூலதனம் என்றும் நம் எண்ணங்களே நம்மை வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்லும் என்று கூறி சுதந்திர தின விழா வாழ்த்துரை வழங்கினார்.
அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சென்சாய் M.P. விஜய் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். எங்கள் பள்ளி நிர்வாக அதிகாரி G. கல்யாண குமார் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார். அதன் பின்பு மாணவர்கள் தங்கள் கலைத் திறனையும், பேச்சாற்றலையும் வெளிப்படுத்தினார்கள். அதில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம், சுதந்திர உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றை வெளிபடுத்தும் வகையில் பங்காற்றினார்கள். பல விதமான கலைநிகழ்ச்சிகளின்; மூலம் மாணவர்கள்; சுதந்திர உணர்வை ஊட்டினார்கள். சிறப்பு விருந்தினர் அவர்கள் தன் வாழ்த்துறையில் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாகவும்இ தன்னம்பிக்கை உடையவர்களாகவும் செயல்படவேண்டும் என்று கூறினார்.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆசிரியர்களாக இல்லாமல் ஒரு நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருந்தால் மாணவர்களின் திறமைகளை எளிமையாக வெளிக்கொணர முடியம் என்றும் கூறினார். நம் பள்ளியில் பயிலும் திவ்யதீக்ஷீதா – 2 ஆம் வகுப்பு மாணவியின் ஸ்கேட்டிங்கின் முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டார். பின் மாணவர்களின் கலை திறமையை வெகுவாக பாராட்டினார். இறுதியாக எமது பள்ளி ஆசிரியை G. நித்யா நன்றி உரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் (15/08/2019) அன்று பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முகைதீன் இபுராஹிம் தலைமை தாங்கினார். தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் கொடியேற்றினார்.
பின்னர் பள்ளிக்குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
You must be logged in to post a comment.