வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அக்கிரெட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (65) இவர் இரு சக்கர வாகனத்தில் காட்பாடி வரும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலி தகவலறிந்த காட்பாடி போலீசார் உடலை மீட்டு வேலூர் தலைமை அரசு மருத்துவமனை உடலை அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Category:
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வருகின்ற 01.11.2019 அன்று சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம் சிறு நாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம் ,அம்மாபட்டி, அணைப்பட்டி ,குண்டலபட்டி , நூத்து லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என நிலக்கோட்டை உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்தார்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய பல்கலை தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த காரைக்குடி அழகப்பா பல்கலை., துணை வேந்தருக்கு வாழ்த்து
by mohan
written by mohan
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கியூ.எஸ்.நிறுவனம் இந்தியா உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் மத்திய, மாநில மற்றும் நிகர்நிலைப் பல்கலை.,கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இத்தர வரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை., தேசிய அளவில் 24ஆம் இடம் பிடித்துள்ளது. கியூ.எஸ்.இந்தியா தரவரிசை என்பது கல்வி சார் மதிப்பீடுகள், பல்கலை., பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கட்டுரைகளின் மேற்கோள் எண்ணிக்கை, மாணவர்: ஆசிரியர் விகிதாச்சாரம், பன்னாட்டு மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும்.
தமிழக அளவில் சென்னை ஐஐடி., அண்ணா பல்கலை.,யை அடுத்து காரைக்குடி அழகப்பா பல்கலை., 3 ஆம் இடம் பெற்றுள்ளது. கலை, அறிவியல் பல்கலை., களின் தர வரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை., தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய தர வரிசை பல்கலை பட்டியலில் கலை, அறிவியல் பல்கலை., யில் அழகப்பா பல்கலை மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை அக்.21 ல் கோவாவில் நடந்த கியூ.எஸ்.உச்சி மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் நா.ராஜேந்திரனிடம் வழங்கினார். தேசிய தரச்சான்று பெற்று பல்கலை.,க்கு பெருமை சேர்த்த துணை வேந்தர் நா.ராஜேந்திரனை, அழகப்பா பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.விநாயகமூர்த்தி, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ஆ.வள்ளி விநாயகம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலைகள் சேதம். கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்..
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்காநத்தம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தற்பொழுது பெய்த மழையில் மேலும் சாலைகள் சேதம் அடைந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் ஏற்படுகிறது. நடு சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை சொல்லியும் தேசிய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்குமா
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் பயனற்ற திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்ட இயக்குனர் ஜெயசுதா உத்தரவிட்டார்
by mohan
written by mohan
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூடுவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டாக்டர் அரவிந்த், ஆணையாளர் தி.அண்ணாதுரை, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா பேசியதாவது:-நமது ஊராட்சிகளில் எங்கெல்லாம் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் பயனற்ற நிலையில் உள்ளதோ அவற்றை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பொதுமக்களுக்கு தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது ஊராட்சிகளில் எங்குமே பயனற்ற திறந்தவெளி கிணறுகள் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து அறிக்கை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.இதை மீறி ஊராட்சிகளில் பயனற்ற திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் பயனற்ற நிலையில் இருந்தால் அதையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.மேலும் மழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 69 ஊராட்சி செயலாளர்கள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 47 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
by mohan
written by mohan
சுர்ஜித் வில்சன் ஆழ்துழை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் படி ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் புதிதாக அமைக்கும் போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி பெற வேண்டும். இது குறித்த விதிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற்ற பின் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பணிகளை தொடர வேண்டும். புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள விண்ணப்பம் உரிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு படிவம் A-யில் உரிய விண்ணப்ப கட்டணம் ரூ.100-க்கான வங்கி வரையோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி படிவம் B-யில் 30 நாட்களுக்குள் உரிய அலுவலர்கள் உரிய அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த அனுமதி தொடர்பாக படிவம் C-யில் பதிவேடு பராமரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் படிவம் D-யில் மாதாந்திர அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் புதிய திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தகாரர்கள் ரூ.1,500 கட்டணமாக செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மட்டுமே ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படும்.பதிவு செய்யாத ஒப்பந்தகாரர்கள் உள்ளாட்சி விதிகளை மீறி பணிகள் செய்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முறையாக அனுமதி பெற்று கிணறு வெட்டும் போதும், ஆழப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் போதும் கிணற்றின் உரிமையாளர்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் ,பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியை செய்ய வேண்டும்.
கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்தில் கிணறு மூடி இருக்கிறதா? என்பதை கவனிக்கப்பட வேண்டும்.கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு சமதளமாக மூடப்பட வேண்டும்.ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பின்னர் கிணற்றை சுற்றி உள்ள குழிகளை மூடி இருக்க வேண்டும்.ஊரகப்பகுதியில் தனியார் நிலங்களில் உள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழை சேகரிப்பாக மாற்றிட தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளையும் மீறி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டு விட்டால், உள்ளாட்சி சட்டத்தின் படி கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது குறித்து மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்- 0462-2329329, நகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்-0462-561998, பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்- 1800 4251426, கிராம ஊராட்சிகள்- 0462- 2501279, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை- 1077 ஆகிய தொலை தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது.வேலூர் மாவட்டத்தில் நேற்று 29-ம் தேதி இரவு சோளிங்கரில் அதிக Uட்சமாக 138 மி.மி. மழை பதிவாகி உள்ளது. அடுத்து பொன்னையில் 91.8 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. குறைந்த பட்சம் திருப்பத்தூரில் 4 .3 பதிவானது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை. மேலும் மதுரை மாவட்ட திமுக கழக செயலாளர் திரு கோ தளபதி மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அங்குள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக., மாவட்ட செயலருமான எம்.ஏ.முனியசாமி, அதிமுக., மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் அருகில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றி அறிக்கை தர வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 3,362 பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிக்கை தர ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால் ஆணையர், விஏஓ உள்ளிட்டோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருநெல்வேலி திண்டுக்கல் நான்கு வழி சாலையில் வடிவேல்கரை என்ற இடத்தில்(AKR பார்சல் சர்வீஸ் அருகே மின்கம்பம் விழுந்து உயரழுத்த மின் கம்பம் மற்றும் மின் வயர்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனா். மின் ஊழியர்கள் வயர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் திருநெல்வேலி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பல கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உயர்திரு மதுரை மாவட்ட ஆட்சியாளர் இன்று30.10.19 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இடைவிடாது மழை பெய்து வருவதால் ஆங்காங்கு தேங்கியுள்ள நீர்களை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த பள்ளி மாணவ, மாணவிகள் நகராட்சியில் மனு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்களை கடித்து அச்சமூட்டி வருகிறது. இது சம்பந்தமாக பல அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் 10க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாயினர்.
இதை தொடர்ந்து கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மேற்பார்வையில் 50கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகளிடம் உட்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் விபத்தில் அடிபட்ட வாலிபா் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிாிழப்பு
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி டவுன் அருணிகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி மணிகண்டன்(23) இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆரணி சேத்துப்பட்டு சாலையில் துந்தகரீகம்பட்டு கிராமத்தின் கூட்ரோடு அருகில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு சிகிச்சைகாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 16 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரச சிகிச்சைக்கு 1மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். விபத்தில் சிக்கிய மணிகண்டனை சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் சுமார் 1மணி நேரமாக மணிகண்டன் உயிருக்கு போராடி இருந்துள்ளான். பின்னர் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவ ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் போலீசார் உறவினர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மணிகண்டன் உறவினர்கள் கலைந்து சென்றனர்.விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் . ஆஸ்டின்பட்டி போலீஸார், காந்திநகர் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டவிரோதமாக டாஸ்மாக் விடுமுறை அன்று, திருப்பரங்குன்றம் டாஸ்மாக்கில் பணி செய்யும், பதினெட்டு (45 ) தனது வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 99 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தும் மேற்படி பதினெட்டு மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியில் சுற்றுலா வேன்கள் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் காயம்.
by mohan
written by mohan
இராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ராமேஸ்வரம் சென்ற இரண்டு சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 5 பேர், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மண்டபம் போலீசார் விசாரித்தனர். பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ், திருச்சியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த 10 நாட்களில் இந்த கடற்கரை பூங்கா பகுதியில் 7 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியில் தார் சாலை மிகவும் வழுவழுப்பாக இருப்பதால் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். தொடர் விபத்துக்குள்ளாகும் அச்சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் தனியாா் பள்ளி (கெரன் பள்ளி) செயல்பட்டு வருகிறது.மாலை பள்ளிககுழந்தைகள் 30 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளிப் பேருந்து அல்லிகுண்டம் அருகே சென்ற கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.அதிா்ஷடவசமாக உயிாிழப்பு ஏதும் ஏற்படவில்லை.பள்ளிக்குழந்தைகளில் 3ம் வகுப்பு மாணவன் அட்சயப்பிரபுக்கு (8)லேசான காயம் ஏற்ப்பட்டது. .அவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்…சம்பவவமறிந்த சேடபட்டி போலிசாா் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியா் செந்தாமரை ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனா்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை ஈரப்பதமாக இருந்ததினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தொியவந்தது.இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தீபாவளிக்கு முன்பாக நிலுவைத் தொகை 55 கோடியை வழங்காததைக் கண்டித்து மனுகொடுத்து பணம்பெறும் போராட்டத்தால் பரபரப்பு
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் பகுதியில் தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 55 கோடியை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 03 ஆம் தேதி போளூரில் அரை நிர்வாணத்துடன் தமுக்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சமரசம்பேசி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் மைதிலி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பாக நிலுவைப்பணம் முழுவதும் தருவதாக ஆலை நிர்வாகம் சார்பில் ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்தனர்.
இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல் ஆலைநிர்வாகம் தீபாவளிக்குள் நிலுவை தொகையை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50 – க்கும் மேற்ப்பட்டோர் ஒன்றுகூடி கரும்பு விவசாய சங்கத்தினர் மூலம் மனு கொடுத்து பணம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போளூர் தாசில்தார் ஜெயவேல் மற்றும் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் சமரசம்பேசி இன்னும் 15 தினங்களுக்குள் கரும்பு நிலுவைத் தொகையில் ஒரு பகுதி வழங்கப்படும் என உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் தனியார் சர்க்கரை ஆலை பரபரப்பாக காணப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.சுர்ஜித்தின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் சாலைகளின் குறுக்கே நிற்கும் மாடுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்-நெல்லை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
by mohan
written by mohan
நெல்லை மாநகர் முழுவதும் குறிப்பாக பேட்டை,டவுண்,ஜங்ஷன், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை, கேடிசி நகர்,புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் நடுவே மாடுகள் சுற்றி திரிகின்றது.இதனால் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் நடுவே இருக்கும் மாடுகள் ஏதிர்பாராத விதமாக திடீரென எழுந்து ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நெல்லை மாநகரில் மட்டும் மாடு மோதி சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாலையில் நிற்கும் வாயில்லா ஜீவன்களுக்கும் பலந்த காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மனித உயிர்களையும், மாட்டின் உயிர்களையும் கவனத்தில் கொண்டு மாடுகளின் உரிமையாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.மேலும் உயிர்பலிகளும், விபத்துகளும் நடைபெறமால் இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து கோசலையில் விட வேண்டும். மீண்டும் சாலைகளில் மாடுகள் வராமல் தடுக்க உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதித்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.