மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . அப்போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு கிபந்த்து. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை, வைரத்தோடு, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், கடிகாரம் 3 , எல் இ டி டி.வி, உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.1.88 லட்சமாகும்.
சம்பந்தப்பட்டவரின் புகார் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனம்..
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய மதில்சுவற்றின் மீது வடக்குநோக்கி அமர்ந்திருந்த கருடாழ்வாருக்குவிஷேச பூஜைகள் நடந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..
இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை, சி.எஸ்.ஐ. மதுரை இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை மற்றும் ராமநாதபுரம் கிறிஸ்து ஆலயம் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வை நடத்தினர்.
புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பேரணியை திருமண்டில சட்ட ஆலோசகரும் பள்ளியின் தாளாளருமான மனோகரன் மார்ட்டின் தலைமையில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலையமையாசிரியர் பால்மாறன் ஆகியோர் முன்னிலையில் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன் துவக்கி வைத்தார். செயலாளர் பால்சன் வரவேற்றார்.
மதுரை இராமநாதபுரம் திருமண்டில சுற்றுச் சூழல் கரிசனைத்துறை இயக்குனர் அருள்திரு ஜே. ராஜன், கிறிஸ்து ஆலய போதகர் அருள்திரு கிறிஸ்டோபர் டேவிட் மற்றும் திருமண்டில பசுமைப் பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் மோசஸ் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் மரம் எவ்வாறு மனிதனுக்கு ஆக்ஸிஜனை அளித்து உதவுகிறது என்பதனைப் பற்றியும் விவரித்தனர்
புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிறிஸ்து ஆலயத்தை சென்றடைந்தது. சபை மக்களுக்கு 150 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பொருளாளர் முத்துராஜா நன்றி கூறினார்.
திருமண்டில மாமன்ற உறுப்பினர் ஆலிவர் ஃப்ரீமன், ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் மலைக்கண்ணன், மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக திறன் மேளா..
தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிபெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட வேண்டுமென ஆணையிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது.
எனவேää இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04.07.2018 அன்று நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்டமாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 26.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இத்திறன் மேளா நடைபெற உள்ளது. இத்திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு பதிவு செய்து பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு..
குறைந்த நீரில் விவசாயிகளின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40மூ அல்லது 50மூ மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20,000/-மதிப்பில் வழங்கப்படுகிறது. மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர் நடவு முறைகளில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ9,840/-மதிப்பீட்டிலும, கொய்யாவிற்கு ரூ.17,599/- மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.23,100/- மதிப்பீட்டிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
மஞ்சள், இஞ்சி, பூண்டு மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12,000/-வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ரோஜாää மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16,000/-வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
விவசாய பெருமக்கள் தங்களுக்குத் தேவையான விதைகள்ää நடவு செடிகளின் விவரங்களை ‘உழவன் செயலி” மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிரää விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படுமு; விபரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை இராமநாதபுரம் 9003631332, மண்டபம் 9443405365, திருப்புல்லாணி 9786751340, போகலூர் 9942673964ää நயினார்கோவில் 9842569664, பரமக்குடி 9789541143, கமுதி 9659246637, முதுகுளத்தூர் 9659584931, கடலாடி 9944080594ää ஆர்.எஸ்.மங்கலம் 7299462970, திருவாடானை 9442675926 அணுகி பெற்றுக்கொள்ளவும். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04567 230832, 230328
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ..
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவியுடன் 28.07.2018 முதல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
பட்டப்படிப்பு மற்றும் பட்டய வகுப்பில் மின்பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு (ELECTRONICS AND COMMUNCATION ENGINEERING)பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவில் 28 வயதிற்குட்பட்டவர்களும் பிற்படுத்தப்படட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவில் 30 வயத்திற்குட்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவில் 33 வயத்திற்குட்பட்டவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். திறமைவாய்ந்த சிறப்பு வல்லுநர்களுடன் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தப்படும்
தற்பொது தமிழ்நாடு காவலர் பணியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் அமிர்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி நாகசுந்தரி தனது 4 வயது மகள் ஒவியாவுடன் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ஒவியா சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பின்னர் அச்சிறுமியின் தாயார் நாகசுந்தரி புகாரின் பேரில் இராமேஸ்வரம் டவுன் போலீஸ் எஸ்.ஐ., பிரபு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா..
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் அருமையான பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வணக்கம் 20 கல்வி நிறுவனங்களை நிறுவி அதில் ஒன்றான கல்வியல் கல்லூரியை இந்த ராமநாதபுரத்தில் நிறுவி செம்மையான கல்வியை இப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த ஊர் ராமநாதபுரம் இக் கல்லூரி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது புன்னகையுடன் இருக்க வேண்டும் வகுப்பு அறை யிலும் வாழ்க்கையிலும் வெற்றியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். வகுப்பறையில் தோற்றுப் போகலாம் வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது, முதலாவதாக மாணவிகள் அதிகாலையில் எழ வேண்டும், படிக்கட்டாக வைத்துக்கொள்ள வேண்டும், நேரம் தவறாமை உண்மை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்தனைகள் மாறுபட வேண்டும், ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு வேலை இல்லை என்று ஒதுங்காமல் ஆன்லைன் டீச்சிங் கற்றல் குறைவான குழந்தைகளை தேர்ந்தெடுத்து பாடங்களை நடத்தி சுயசம்பாத்யத்தில் வாழ்க்கையை நடத்தலாம் என்று உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் முகமது சதக் டிரஸ்ட் சேர்மன் முகமது யூசுப் செயலாளர் ஷர்மிளா இயக்குனர் ஹபிப் ஹமீது இப்ராஹிம் முதல்வர் சோமசுந்தரம் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் சைடெக் முதல்வர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 45. நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் இவர் நடை பயிற்சி சென்றார். அப்போது அது வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் கவிதா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ராமநாதbம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி , 55. நேற்று முன் தினம் இரவு 9 மணி அள்வில் அப்பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கஸ்தூரி கமுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசாரின் வாகன சோதனையில் இருவர் சிக்கினர். விசாரணையில் பெருங்குளம் செல்வராஜ் மகன் மதன்குமார் 21, சடையன் வலசை நாகசாமி மகன் தமிழ்ச்செல்வன் 21 ஆகியோர் கவிதா, கஸ்தூரியிடம் செயின் பறித்தது தெரிந்தது. இருவரையும் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜீவரத்தினம் கைது செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக சுற்றுப்புற சூழல் பேரணி..
இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சிஎஸ்ஐ மதுரை இராமநாதபுரம் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனத்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபென்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் சேவைக்கு ஆலய குருவானவர் கிறிஸ்டோபர் டேவிட் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கரிசனத்துறை சேர்மன் அருள் திருமாறன் செயலாளர் பால்சன் ஆலிவர் முத்துராஜா மேல்நிலைப்பள்ளி முதல்வர் பால்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர் பேரணி முக்கிய வீதிகள் வழியாக வருகை தந்து சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தில் வந்தடைந்த பின்னர் அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்தில் இரண்டு சிறை கைதிகள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..
வேலூர் மத்திய சிறையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தண்டனை பெற்றுவந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதவன் கல்லீரல் பாதிப்பு காரணமாக வேலூர் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கலம்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் கொலை முயற்ச்சி வழக்கில் 6.6.2018 ஆம் தேதி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21/07/2018) மூச்சி திணறல் காரணமாக உயிரிழந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டது..
இராமநாதபுரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய அமைச்சர் மணிகண்டன் இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். அமைச்சர் மணிகண்டன் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது இப்பகுதியில் தேர்தல் வாக்குறுதியாக கூறியவற்றை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் உச்சிப்புளி அருகே இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் குறிப்பாக சுற்றுச்சுவர் உடனே உடனடியாக கட்டித்தருவேன் என வாக்குறுதி குறிப்பிட்டிருந்தார், அதனை நிறைவேற்றும் வகையில் தனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் அந்த நிதியின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கண்டிப்பாக போராடியாவது பெற்றுத்தருவேன் விரைவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி வந்துவிடும் என்பது உறுதியானது மாணவர்கள் நேர்மையாகவும் பிற்காலத்தில் பணியில் சேரும்போது ஊழலற்ற நிர்வாகம், பணியாற்றும் முறையில் தற்போது தங்களது நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனது தொகுதி நிதியிலிருந்து செய்யப்படும் அனைத்து பணிகளிலும் ஒரு பைசா கூட கமிஷன் பெறாமல் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன், இருமேனி ஊராட்சி கழக செயலாளர் நஜுமுதீன். பெருங்குளம் ஊராட்சி கழகசெயலாளர் ஜானகிராமன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வேதாளை கிராமத்தில் இன்று (21.07.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் அவர்கள் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பேசியதாவது: மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திடும் விதமாக நமது மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதற்கான ஒரு ஊராட்சிக்கு தலா ரூ.20,000/- வீதம் மொத்தம் ரூ.85.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளைப் பொறுவத்தவரையில் கபாடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும், வட்டு எரிதல், குண்டு எரிதல், நீளம் தாண்டுதல், 100மீ, 200மீ, 400மீ ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகள் ஆண்கள்ää பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகின்றது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கணைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் கிராமப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே சகோதரத்துவம் அதிகரிக்கின்றது. இப்போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இளைஞர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்துகொண்டு நமது மாவட்த்திற்கு பெருமை சேர்த்திடவேண்டும்.
இதுதவிர, வேதாளைப் பகுதிகளில் உள்ள கிராமப் பொதுமக்கள் நலனுக்காக இப்பகுதிகளில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்குத் தேவையான இடம் தேர்வு செய்யும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. அதேபோல இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது என பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.பிராங்க் பால் ஜெயசீலன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.ராஜா உட்பட அரசு அலுவலர்கள், கிராமப் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலர் கருப்பையா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கம் கிரி, பல்லாவரம் கருணாநிதி, ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பூத் கமிட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய செயலர்கள் பூபதி மணி (முதுகுளத்தூர்), பரமக்குடி (ஜெயக்குமார்). ரவி (நயினார்கோவில்). ரவி (திருவாடானை), மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அருள் பால்ராஜ், மாவட்ட வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலர் சண்முகநாதன், சாயல்குடி ஒன்றிய முன்னாள் செயலர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த சில வாரங்களுக்கு முன்பு JIO நிறுவனம் பழைய கைப் பேசிகளை கொடுத்து, ₹.501/- செலுத்தி புதிய JIO-2 மாடல் கைபேசியை பெறலாம் என அறிவித்திருந்தது. அச்சலுகை இன்று (21/07/2018) முதல் தொடங்கும் எனக்கூறி பல்லாயிர கணக்கான வியாபார முகவர்கள் முன் பணம் கட்டி புதிய கைபேசியை இன்று விற்பனைக்கு வாங்கினர்.
ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த புதிய மாடல் அலைபேசியை வாங்கும் வாடிக்கையாளர்கள் ₹.594/-கு ரீசார்ஜ் செய்வது அவசியம் என்ற அறிவிப்பை அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் முன் பணம் கட்டி அதிக எண்ணிக்கையில் கைபேசியை இருப்பில் வாங்கி வைத்த முகவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக பாண்டிச்சேரியை சார்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், எங்களிடம் 7 வாடிக்கையாளர்கள் முன் பதிவு செய்திருந்தனர், ஆனால் 1 நபர் மட்டுமே வாங்கியுள்ளார். அதேபோல் மற்றொரு நிறுவனத்தில் 24 பேர் பதிவு செய்ததில் 3 நபர்கள் மட்டுமே வாங்கியுள்ளதாக கூறினார்.
இதுதான் டிஜிட்டல் இந்தியா சலுகை…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளிகளுக்கு தொந்தரவு இல்லாமல் ரயில் டிக்கட்- ஒரு வாரத்தில் நடவடிக்கை – மாற்றுத் திறனாளிகள் திடீர் போராட்டத்தையொட்டி உறுதி..
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டண டிக்கட் எடுக்க, பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிதான் நேரில் வர வேண்டும், மருத்துவர் தரும் சலுகை சான்றை ஏற்க மாட்டோம் – ரயில்வே கோட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் சலுகை சான்றைத்தான் வாங்கி வரவேண்டும் – இப்படி விதிகளுக்கு புறம்பாக ரயில்வே டிக்கட் மைய ஊழியர்கள் ஏதாவது காரணத்தை சொல்லி டிக்கட் வழங்கி மறுக்கும் போக்கு பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னை மாம்பலம் முன் பதிவு மையத்தில் ஊழியர்கள் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அழைக்கழித்ததால், கடந்த 12ம் தேதி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர். இனிமேல் தவறுகள் நடக்காது என ஊழியர்கள் வாக்குறுதி அளித்ததால் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், மீண்டும் ஊழியர்கள் விதிமுறைகளுக்கு மாறாக காரணம் சொல்லி டிக்கட் வழங்க மறுக்கத் துவங்கினர். இதனை கண்டிக்கும் வகையிலும், நிரந்தர தீர்வை வலியுறுத்தியும், அடாவடியாக செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீண்டும் இன்று (21/07/2018) அந்த மையத்தில் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 3 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட வர்த்தக மேலாளர் நரேன் கூட்டு இயக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்று திறனாளிகளுக்கு சலுகை கட்டண டிக்கட் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊஊழியர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பயிற்சிகள் அவ்வப்போது அளிக்காத்தே இப்படி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இன்னும் ஒரு வார காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் பேரா.டி.எம்.என். தீபக், பா. ராதாகிருஷ்ணன், என்.சாந்தி, எஸ்.கே. மாரியப்பன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் ஆனி பிரமோற்சத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இத்தேரோடரட நிகழ்வில், கோயில் வாசல் முன் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த நிகழ்வில் வீற்றிருந்த கோதண்டராமசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த தோரோட்டத்தின் போது தேர் முக்கிய வீதிகள் வழியாக தேர் மீண்டும் கோயில் வந்து நிலை அடைந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்சை பொருத்தாமல் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொருத்தினால் உரிமம் ரத்து – ஆட்சி தலைவர் எச்சரிக்கை…
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை முறையாக பொருத்தாமல், பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொருத்திடும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் உரிமத்தினை ரத்து செய்வதோடு, காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்காக பொருத்துதல் கட்டணமாக ரூ.200-யை சந்தாதாரர்களிடம் பெற்றுக் கொண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இலவசமாக சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,01,372 அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களில் 50,330 சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் ஒரு சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்சை வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸை பொதுமக்களிடம் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விநியோகிக்கின்றனர் என மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸை பொருத்தாமல் பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக தனியார் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தும் ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சிக்னலை பிற தனியார் நிறுவன கேபிள் ஆப்பரேட்டர்கள் துண்டிப்பதும், தடைசெய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
அதேபோல தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸை விநியோகம் செய்யாமலும், அரசுக்கு செலுத்த வேண்டிய மாத சந்தா மற்றும் நிலுவை தொகைகளை செலுத்தாமல், பாக்கி நிலுவை வைத்துக் கொண்டும், சரியான இணைப்பு விபரங்களை அரசுக்கு தெரிவிக்காமல் அரசு கேபிள் டிவிக்கு எதிராகää அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸை உடன் பொருத்திட வேண்டும். அவ்வாறு அரசு செட்டாப் பாக்ஸ்களை முறையாக விநியோகம் செய்யாத பட்சத்தில், புதிய ஆப்பரேட்டர்களை பதிவு செய்து உரிமம் வழங்கி அரசு செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது கேபிள் டிவி ஆப்பரேட்டர் உரிமம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்து காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி மையம்..
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் இன்று 21.07.2018 நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.2.47 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதன் அடையாளமாக கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் விழாவிற்கு தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பிலும் தங்கச்சிமடம் ஊராட்சியில் ரூ.31.30 இலட்சம் மதிப்பிலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ரூ.31.30 இலட்சம் மதிப்பிலும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.30.70 இலட்சம் மதிப்பிலும், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பிலும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஏர்வாடி ஊராட்;சியில் 31.50 இலட்சம் மதிப்பிலும்ää பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் ரூ.31 இலட்சம் மதிப்பிலும், கமுதி ஊராட்சி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் ரூ.30.50 இலட்சம் மதிப்பிலும் என 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 ஊராட்சிகளில் மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்பில் புதிதாக அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 8 அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்களை இன்றைய தினம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்மூலம் அந்தந்த கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தினை செலவிடவும், இளைஞர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தினை பேணிப்பாதுகாத்திடும் வகையில் உடற்பயிற்சி செய்திடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15இலட்சம் மதிப்பிலும், இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6 இலட்சம் மதிப்பிலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வளாக சுற்றுச்சுவர்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமாலினி செயற்பொறியாளர் சிவராணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்லைவர் ஜெயஜோதி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தசெல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.