ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதியை ஏற்ற மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதை அடுத்து மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் விடுவிக்கப்படாவிட்டால் மீனவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நடை பயணம் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடரும் என தெரிவித்தனர். மீனவர்களின் நடை பயணம் காரணமாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடை பயணம் செல்லும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக ராமேஸ்வரம் மரைன் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மரைன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநில செய்திகள்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!- என்னென்ன சிறப்பம்சங்கள் விரிவான ஓர் பார்வை..
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.
ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
விவசயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்.
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1775 கோடி ஒதுக்கீடு.
தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.
இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்
‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
பயிற்சிபெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு.
‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.
2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு உருவாக்கிட ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.
மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.
ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு சி டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.
கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.
இவ்வாறாக அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி நிறைவு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -16
(கி.பி.750-1258)
செல்ஜுக்கிய மன்னர் அல்ப் அர்ஸலான் அவர்களின் மருமகன் சுலைமான் அவர்களிடம் ரோமப்பகுதிகளும்,
சின்னாசிய பிரதேசங்களும்
ஒப்படைக்கப்பட்டன.
செல்ஜுக்கியர்கள் ரோமப்பகுதியில் குடியேறினர்.
அவர்கள் ரோம செல்ஜுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர்.
செல்ஜுக்கிய சுல்தான் அல்அர்ஸலான் கொல்லப்பட்டார்.
அப்பாஸிய பேரரசர் காயீமும் மரணமடைந்தார்.
அல் அர்ஸலான் அவர்களின் மகன் மலிக்சா பதவி ஏற்றார்.
இவருக்கு அல் அர்ஸலான் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களே வழிகாட்டியாகவும் அமைச்சராகவும் இருந்தார்.
செல்ஜுக்கிய சிற்றரசில், அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களின் ஆலோசனையின்படி
ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
தலைநகரான
பாக்தாத் நகரில் கல்லூரிகள்,
மருத்துவமனைகள்
நூலகங்கள்,
பள்ளிவாசல்கள்,
மதரசாக்கள்,
வணிகர்கள் தங்கிச் செல்ல இடைஇடையே தங்கும் விடுதிகள்,
வானிலை நிலையம்
ஆகியவைகள் அமைக்கப்பட்டன.
வானிலை நிலையத்தில் வானிலை அட்டவணைகள்,
காலண்டர்கள் வெளியிடப்பட்டன.
நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது.
மலிக்சா “சியாசாநாமா ”
என்ற அரசியல் நூலை எழுதினார்.
பாக்தாத்தில்
“நிஜாமியா பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது.
இமாம் கஜ்ஜாலி (ரஹ்)சஃதி போன்ற அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மன்னர் மாறுவேடம் பூண்டு மக்களின் குறைகளை கண்டறிந்து கலைந்தார்.
கல்வி,கணிதம் போன்றவைகளில
சிறந்து விளங்கிய இக்காலத்தில் கவிஞர் உமர்கய்யாம்
ஜலாலி ஆகியோர் இருந்தனர்.
வணிகம், கைத்தொழில்கள் செழித்தது.
முறையற்ற வரிகள் நீக்கப்பட்டன.
இது “செல்ஜூக்கியர்
களின்
பொற்காலம் “என அழைக்கப்படுகிறது.
மலிக்சா மரணமடைந்தார்.
அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களின் நண்பரே பொறாமை காரணமாக ஹசீசியா என்ற இயக்கத்தை ஆரம்பித்து,
அமைச்சர் நிதாமுல் முல்க்கை ஹசீசியா இயக்கத்தினரே கொலை
செய்தனர்.
அப்பாஸிய பேரரசின் மன்னராக 19 வயதே நிரம்பிய முஹ்ததிர் பதவி ஏற்றார்.இவர் சிறு வயதே ஆனாலும் மிகச்சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
இவர் அப்பாஸிய பேரரசிலும்,
பாக்தாத் நகரத்திலும்
கேளிக்கைகளை தடை செய்தார்.
சூதாட்டங்களையும் தடைசெய்து சூதாட்டக்காரர்களை
வெளியேற்றினார்.
அந்தாக்கியா,புகாரா
குவாரிஜிமி ,
சாமர்கந்து,கஸ்கர் போன்ற பிரதேசங்களை வென்றார்.
இதனால் அப்பாஸிய பேரரசு எழுச்சி பெற்றது.
செல்ஜூக்கிய மன்னர் மலிக்சா ,
அமைச்சர் நிதாமுல்முல்க் ஆகியோரது
மரணங்கள்,
பின் வந்த செல்ஜூக்கிய மன்னர்களின் திறமையின்மை,
அப்பாஸிய பேரரசரின் எழுச்சி,
துருக்கியர்களின் புரட்சி,சிலுவைப் படைஎடுப்புகள்,
ஆகியவைகளால் செல்ஜூக்கியர்
களின்
அரசு வீழ்ச்சி அடைந்தது.
பாத்திமியாக்கள்
உயிர் பெற்றனர்.
மீண்டும் சியாக்களின் கொள்கை உயிர்பெற்றது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு மாநில காவல் துறையின் 63-வது மண்டல தடகள போட்டிகள்..
தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல 63வது தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம், வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சிதம்பரம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளி, வெண்கல பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், வெண்கல மற்றும் வெள்ளி பதக்கமும், சைபர் கிரைம் காவல் நிலைய தலைமை காவலர் முனீஸ்வரன் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், கீரைத்துறை காவல் நிலைய தலைமை காவலர் முகமது முபாரக் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கல பதக்கங்களும், சென்ட்ரல் போக்குவரத்து முதல்நிலை காவலர் இளையராஜா 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கமும், தல்லாகுளம் காவல் நிலைய முதல்நிலை காவலர் சின்னபாண்டி மற்றும் ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் ஆகியோர் கோ-கோ விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற அனைவரையும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு..
மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு..
மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையில் பி. எம்.சி. என்ற தொழிற்சார்ந்த அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றார். பி. எம். சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இயக்குனர் கோபிசன் பேசினார். விழாவில் திருச்சி தொழிலதிபர் அருள் மகேஷ் சிறப்புரையாற்றினார். பி. எம். சி. தொழில் அமைப்பினை குத்து விளக்கேற்றி தொடங்கி வீட்டு உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, இன்றைய காலகட்டத்தில் தொழில் செய்வது கடினமாக இருக்கிறது நம்முடைய பொருட்களை விற்பதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பழைய காலத்தில் பொருள் தேவைப்படுவோர் நம்மை தேடி வருவார்கள். இன்று காலம் மாறிவிட்டது. நாம் டிஜிட்டல் மீடியா உலகத்தில் இருக்கிறோம். நாம் சிரமமான காலகட்டத்தில் இருக்கிறோம். எல்லாத் துறையிலும் வரி கூடிவிட்டது. தொழில் லைசென்ஸ் பதிவு செய்வது உட்பட எல்லாம் சிரமம் ஆகிவிட்டது. ஒரு தொழில் தொடங்குவதற்கு 27 லைசென்ஸ் வாங்க வேண்டியதாக இருக்கிறது.
மதுரைக்கு புதிய திட்டங்கள் வருவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயற்படுத்தினாலே போதுமானது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 8,500 கோடி ரூபாய் திட்டம் தயாரிக்கப்பட்டு அதை உடனடியாக அதை செயல் படுத்த வேண்டும். மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் உருவாக வேண்டும். 62 வருடம் ஆகியும் இன்னும் பன்னாட்டு விமான நிலையம் உருவாகாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மதுரை சுற்றி இருக்கிற எந்த மாவட்டத்திலும் இன்னும் தரமான தொழிற் சாலைகள் உருவாகவில்லை. உங்களைப் போன்ற இளைஞர்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எப்படி என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார். முடிவில் பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு..
சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு..
சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வனத்துறை நெல்லை வன உயிரின சரணாலயம், சிவகிரி வனச்சரகம் சார்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர். R. முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் செல்வி. இரா. மௌனிகா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன் மற்றும் தலைமை ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விஸ்வநாதப்பேரி கிராமம் ஆகிய இடங்களில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த கலை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என உசிலம்பட்டியில் இளம்வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற நிவாஷ் பேட்டி…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் நிவாஷ் (24). தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ளார். இவரது தாய் தனலட்சுமி நிவாஷ் சிறுவயது இருக்கும்போதே இறந்து விட்டார். அவரது தாய் இறந்தபின்பு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவரது தாத்தா பாட்டியான மணவாளன்-காசம்மாள் மற்றும் அவரது தாய் மாமன்களின் பராமரிப்பில் வளர்ந்து வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கடந்த 2017-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதன் பின்பு கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுரை அரசு சட்டக் கல்லூரியில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் பயின்றுள்ளார். பின்பு மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் உசிலம்பட்டி தாலுகா நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.இவருக்கு உசிலம்பட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பின் நிவாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்
நான் வெள்ளைமலைப்பட்டி அரசுப்பள்ளியில்தான் படித்தேன்.இளம் வயதிலேயே தாயை இழந்து பாட்டி மாமா அரவணைப்பில் வளர்ந்தேன்.அவர்கள் நான் எப்படி படிக்கின்றேன் என பள்ளியில் ஆசிரியர்களிடம் வந்து கேட்பர்.இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பற்றி ஆசிரியர்களிடம் கேட்டால் போதும். அரசுப்பள்ளயிலுள்ள ஆசிரியர்கள் சிறப்பாகத்தான் பாடம் நடத்துகின்றனர்.நாம்தான் அவர்களிடம் சந்தேகங்களை கேட்க வேண்டும்.அவர்கள் பதில் அளிக்க தயாராகதத்தான் உள்ளனர்.தனியார் பள்ளிகளில் படித்தால்தான் கௌரவம் என்ற நினைப்பதை மாற்ற வேண்டும்.அரசு பல்வேறு நலத்திட்டகளை அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றது.அரசுப்பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் வாழ்க்கை வரலாற்றை பார்க்க வேண்டும்.எனக்கு முன் கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த ஆதியன் என்பவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.தற்போது நான் தேர்வாகியுள்யேன்.நாளை யார் வேண்டுமாலும் வரலாம்.இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்பது தெரிகின்றது.மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் எனக் கூறினார்.
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் கடும் போக்குவரத்து நெரிசல்; ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை..
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்; ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை..
சோழவந்தானில் பெரிய கடை வீதி முதல் மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் வரை ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ் காலதாமதமாக வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் புதியபஸ் நிலையம் திறக்கப்பட்டு இதில் நகர பேருந்துகள் மட்டும் இங்கு வந்து செல்கின்றன. மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு பஸ் செல்வதற்கு ஒரு வழி பாதை இல்லாததால் மீறி வாகனங்கள் எதிரே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் காலதாமதமாக ட்ரிப் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் காவல் துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மார்க்கெட் ஒரு வழி பாதையாக கடைப்பிடித்து காலப்போக்கில் இதை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல சிரமத்திற்கு வாகன ஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். இதனால் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் சோழவந்தானில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏற்கனவே இருந்து வரும் மார்க்கெட் ரோட்டை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மிகவும் சிறப்பு பெற்று வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்மனை தரிசிக்க வாகனத்தில் வருகின்றனர். இதனால் மாரியம்மன் சன்னதி ரோட்டை ஒரு வழிப்பாதையாக ஏற்படுத்தி கொடுத்து அந்த ரோட்டில் இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி நெல்லை இடையே 1 TO 1 அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ வலியுறுத்தல்..
புளியங்குடி நெல்லை இடையே 1 to 1 பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..
புளியங்குடி பகுதியிலிருந்து நெல்லைக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த 1 to 1 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்து உள்ளதாகவும், இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் துணை தலைவரும், கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளருமான யாசர்கான் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், புளியங்குடியில் இருந்து நெல்லைக்கு அதிகாலை 5.15, 5.30 , 5.45 மணிக்கு 1 to 1 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த பேருந்துகள், புளியங்குடி பகுதியிலிருந்து தென்காசி வரை சாதார பேருந்தாகவும், தென்காசி பகுதியிலிருந்து நெல்லைக்கு 1 to 1 சேவை பேருந்தாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில் புளியங்குடி, சொக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், இடைகால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகள், பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், வியாபாரிகள் மற்றும் நெல்லை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடிய முதியோர்கள் என பலரும் சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக புளியங்குடியில் இயக்கப்பட்டு வந்த 1 to 1 பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்த பஸ்கள் வேறு டிப்போக்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த பேருந்துகளை பயன்படுத்தி வந்த பயணிகள் தற்போது கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். என மக்கள் நலன் கருதி இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் யாசர்கான் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க தம்பதியர்; மாவட்ட எஸ்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டு..
சாலையோரம் கிடந்த தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியர்; தென்காசி மாவட்ட எஸ்.பி. பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கீழே கிடந்த சுமார் 2,50,000 ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயினை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் குமார் மற்றும் அவரது மனைவியின் நேர்மையை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பொன்னாடை அணிவித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தென்காசி மாவட்டத்தில் நேர்மை குணம் நிறைந்த ஆய்க்குடி தம்பதியரை பொது மக்கள், காவல் துறையினர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..
ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.
ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த கிராமம் வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை அதிகமான வேகத்தில் செல்வதாகவும், இதன் காரணமாக நேற்று மாலை சாலை ஓரமாக எபினேசர் என்பவர் நின்று கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி தூக்கி எறிந்ததில் எபினேசர் பலத்த காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தொடர் விபத்துக்கள் இந்த பகுதியில் ஏற்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரு விளக்குகள் இல்லாதது மேலும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது எனவும், இப்பகுதியில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து முன்வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வேதநாயகபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வருவாய் ஆய்வாளர் முத்துமாணிக்கம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 2 நாட்களில் வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டங்களுக்கு பயன்படும் பகல் நேர ரயிலாகும். இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் முறையான பராமரிப்பு குறைபாடு காரணமாக ரயில் பெட்டியினுள் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் ரயில் பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்தி இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக பயணிகளின் உணவு பொருள்களை எலிகள் சாப்பிட்டு ஆங்காங்கே சுற்றி திரிவது முதியவர்கள் மற்றும் பெண் பயணிகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கவலை பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ரயில் பராமரிப்பு மையங்களில் முறையான பராமரிப்பு நடத்தி இதுபோன்று இடர்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு ஓவியப் போட்டி நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகமும், சென்னை எப்சிபா அறக்கட்டளை மற்றும் ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு “தீமையை எதிர்த்து போராடு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தினர். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.
எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் என ஏராளமான மாணவ மாணவிகள் இப்போட்டியில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அழகிய ஓவியங்களை வரைந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; 206 பேருக்கு பணி நியமனை ஆணை..
தென்காசி மாவட்ட நிர்வாகம், வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் T.R. உதய கிருஷ்ணன் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இம்மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 74 வேலையளிக்கும் நிறுவனங்கள், 5 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1,020 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாமில் 115 ஆண் வேலை நாடுநர்களுக்கும் 91 பெண் வேலை நாடுநர்களுக்கும் என மொத்தம் 206 வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு 41 வேலை நாடுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்முகாமில் 18 நபர்கள் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இம்முகாமில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (பொ) மரு. கா.சண்முக சுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (மு.கூ.பொ), ஹரிபாஸ்கர், ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ் திரையுலகம் சார்ந்த பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை..
சென்னையில் 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் BUDGET கூட்டத்தொடரில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு;
“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைபடங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழ் நாட்டில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது.
மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுபடுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில் , அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சென்னையில் ஒரு சினிமா நகரம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் VFX, அனிமேஷன், LED திரை, நட்சத்திர ஓட்டல்கள் என அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் budget கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும், எங்களது கோரிக்கையை உடனடியாக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், என்றும் திரை உலகினருக்கு உறுதுணையாக இருந்து வரும் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரையுலகின் சார்பாக எங்களது நன்றியினை இரு கரம் குவித்து தெரிவித்து கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சங்கரன்கோவிலில் புதிய தீயணைப்பு நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
சங்கரன்கோவில் பகுதியில் புதிய தீயணைப்பு மீட்பு பணி நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் பிப்.17 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தை திறந்து வைத்துள்ளார். இதற்கு முன்னர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக உருவான தென்காசி மாவட்டத்திற்கென தனி கவனம் செலுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தென்காசி மாவட்டத்தில் பல புதிய அலுவலக கட்டடங்களை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைத்துள்ளார். பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் பானுபிரியா, உதவி தீயணைப்புத்துறை அலுவலர் சுரேஷ் ஆனந்த், சங்கரன் கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன், உதவி செயற் பொறியாளர் (தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம்) சசிநாதன், உதவி பொறியாளர்கள் சரவணன், சிவா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?-அமைச்சர் தங்கம் தென்னரசு..
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது’ எனப் புலம்பியிருக்கிறார்.’தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது’ எனச் சொல்லியிருக்கிறார்.எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அம்மையார் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.நடப்பது மக்களாட்சியா… இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதா அவர்களையும் பழனிசாமி அவர்களையும் குளிர்விப்பதற்கே தமிழ்நாடு சட்டமன்றம் பயன்பட்டது. 2011 – 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020 – 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.’கடன்’ என்ற சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை. ‘ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது’ என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை? 2014-ல் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி அவர்களின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்?பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்கள், அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் சாலை விதியை கடைப்பிடித்த ஓட்டுனருக்கு பாராட்டு சான்றிதழ் !
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 34-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலை விதிகளை சீரிய முறையில் கடைபிடித்த போக்குவரத்து துறை வருவாய் துறை மருத்துவ துறை தீயணைப்பு துறை மற்றும் சிறப்பாக விழிப்புணர் ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு ,மாவட்ட தனி துணை ஆட்சியர் சுந்தரவல்லி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பு..
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறையும் ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பல கட்டங்களாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்து திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதமும் விதிப்பதாக அவர் தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பாலைக்குடி சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களை மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பகுதியில் வசிக்கும் வைரசெல்வம் , ரமேஷ் , முகமது , முத்துகிருஷ்ணன் , சரவணகுமார் ஆகியோர் ஓமன் நாட்டில் அல்மசீரா என்ற இடத்தில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றுள்ளதாகவும் , தொழிலுக்குச் சென்ற இடத்தில் படகு உரிமையாளர் உரிய கூலி தர மறுத்ததையொட்டி சொந்த ஊர் திரும்பிட பாஸ்போட்களை தர மறுத்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அவர்களில் குடுப்பத்தினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினர். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பமாகும். எங்கள் பகுதியில் மீன்பிடி மிகவும் நெருக்கடிக்குள்ளானதை தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக எனது கணவர் ஓமன் நாட்டில் ஒப்பந்த கூலியாக தொழில் செய்வதற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் வேலை செய்ததற்கு கூலி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கேள்வி கேட்டால் நாட்டிற்கு உன்னை அனுப்ப மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் எங்களுக்கு அச்சம் ஏற்படுவதாலும் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத பட்சத்தில் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வழி இல்லாத நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம் எனவே எங்கள் கணவரை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.