மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி காலனியைச் சேர்ந்தவர்கள் தனுஷ் மற்றும் மலை ராஜா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆட்டுப் பட்டியில் 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு சென்ற பின் வழக்கம் போல் இன்று தண்னீர் பருகவிட்டு பட்டியில் கட்டி வைத்துள்ளனர்.சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வாயில் நுரை தள்ளியபபடி மர்மமான முறையில் இறந்துள்ளது.மற்றும் சில ஆடுகள் உயிருக்குப் போராடியுள்ளன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் ஆய்வு செய்ததில் ஆடுகள் குடிக்கும் தண்ணீரில் யூரியா உரம் கலந்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பத்தேவர் மகன் அஜித்குமார் முன்விரோதம் காரணமாக ஆடு குடிக்கும் தண்ணீரில் யூரியா கலந்திருக்கலாம் என தனுஷ் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் போலிசார் விசாரணை செய்து வந்த நிலையில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கோட்டாச்சியர் போத்தம்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலிசார் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Category:
தேசிய செய்திகள்
இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாநகரில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது குறித்தும் மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 90% பேர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் இறக்கின்றனர். இதில் அதிகளவில் இளைஞர்களே இறக்கின்றனர், தலைக்கவசம் அணிந்து செல்கிறவர்கள், அதற்குரிய கழுத்து பட்டையை அணிவது கிடையாது. இதன் விளைவாக அவர்கள் தலைக்கவசம் அணிந்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது என தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களது கடமையை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பொறுப்புணர்வுடன் பின்பற்றினால் மட்டுமே விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே இரு சக்கர வாகனங்களை இயக்குபவரும் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிந்தே வாகனத்தில் பயணிக்கவேண்டும் என பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
“இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும், குழந்தைகளும் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும்”..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாத்தூர் அருகே, விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன் கைது… உரிமையாளர், மேலாளருக்கு போலீஸ் வலைவீச்சு…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள கங்கர்செவல்பட்டி பகுதியில் உள்ள, விக்டோரியா பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, ஆலை உரிமையாளர் ராஜேந்திரராஜா, மேலாளர் மற்றும் போர்மேன் சக்கையா ஆகியவர்கள் மீது, ஆலங்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை, ஆலையின் போர்மேன் சக்கையாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.5- ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் இன்று மதியம் கையும், களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தனது பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய தாசில்தார் தென்னரசுவை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார்.
ரூ. 3 லட்சம் லஞ்சம். கேட்ட தென்னரசு, அதில் முதல் தவணையாக ரூ. 1 லட்சத்தை தருமாறு கேட்டார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்சம் ஒழிப்பு போலீசில் கருப்பையா இன்று காலை புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கருப்பையாவிடம் லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்து அனுப்பி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்தனர். கருப்பையாவிடமிருந்து ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தை தென்னரசு இன்று மதியம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக தென்னரசுவிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
டிடோஜாக் பயிற்சி மையத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரை போலிசார் இன்று கைது செய்துள்ளனர்.இது அரசு ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி மைதானத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய்யாவிட்டால்; தமிழக முழுவதும் மௌன புரட்சி வெடிக்கும் எனவும் திமுக அரசு அடுத்த ஆட்சி நடத்த முடியாது எனவும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே குடிநீர் வழஙகப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஆதார் கார்டு ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வில்லாணி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வில்லாணி ஊர் மந்தை முன் இந்தியக்குடிமகன்களுக்கான ஆவணங்களான ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ரேசன் கார்டு ஆககியவற்றை அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா;15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் வேண்டி குதிரை எடுத்தனர். சாமி குதிரையின் முன்னர் முதியவர்கள் இளம் பெண்கள், ஆண்கள் ஆட்டம் ஆடி 15க்கும் மேற்பட்ட குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5, 1882)…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. ஒரு இளைய மகன், ரிச்சர்ட் ஹென்றி, முதுகெலும்பு குறைபாட்டுடன் பிறந்தார், அவரது முதல் பிறந்தநாளுக்கு முன்பு இறந்தார். நஹூம் உற்பத்தியாளரக பல பயனுள்ள கருவிகளைக் கண்டுபிடித்தார். கோடார்ட் பிறந்த சிறிது நேரத்திலேயே, குடும்பம் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தது. இயற்கையைப் பற்றிய ஆர்வத்துடன், அவர் தனது தந்தையிடமிருந்து ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானத்தைப் மற்றும் பறவைகள் பறப்பதைக் கவனித்தார். 1880களில் அமெரிக்க நகரங்களின் மின்மயமாக்கலுடன், இளம் கோடார்ட் அறிவியலில்-குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். குடும்பத்தின் கம்பளத்தில் நிலையான மின்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவரது தந்தை அவருக்குக் காட்டியபோது, ஐந்து வயது குழந்தையின் கற்பனை தூண்டப்பட்டது.
வொர்செஸ்டர் பாலிடெக்னில் 1908ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். படிப்பிற்குப் பின், அங்கேயே ஓராண்டு காலம் பயிற்றுநராகப் பணியாற்றினார். பின், வொர்செஸ்டர் நகரிலேயே க்ளார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பயின்று 1910ல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1911இல் தனது அறிவியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஓராண்டு காலம் க்ளார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபின், 1912இல் தொடர் ஆய்வுகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பால்மர் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார். சரளை நடைப்பயணத்தில் கால்களைத் துடைப்பதன் மூலம் ஒரு பேட்டரியிலிருந்து துத்தநாகம் வசூலிக்கப்படுமானால் அவர் உயரத்திற்கு முன்னேற முடியும் என்று நம்பி ராபர்ட் பரிசோதனை செய்தார். ஆனால், துத்தநாகத்தைப் பிடித்துக் கொண்டால், அவர் வழக்கத்தை விட உயரமுடியாது. அவர் ரசாயனங்களை பரிசோதித்து, வீட்டில் ஒரு புகை மேகத்தையும் வெடிப்பையும் உருவாக்கினார். கோடார்ட் தனது தாயின் எச்சரிக்கையின் பின்னர் சோதனைகளை நிறுத்தினார்.
இந்த ஆர்வங்கள் 16 வயதில் ஒன்றிணைந்தன. கோடார்ட் அலுமினியத்திலிருந்து ஒரு பலூனைக் கட்ட முயற்சித்தபோது, தனது வீட்டுப் பட்டறையில் மூல உலோகத்தை வடிவமைத்து, அதை ஹைட்ரஜனில் நிரப்பினார். ஏறக்குறைய ஐந்து வார முறையான, ஆவணப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அவர் இறுதியாக திட்டத்தை கைவிட்டார் அலுமினியம் மிகவும் கனமானது. எவ்வாறாயினும், இந்த தோல்வியின் படிப்பினை கோடார்ட்டின் வளர்ந்து வரும் உறுதியையும் தன்னுடைய படைப்பின் மீதான நம்பிக்கையையும் தடுக்கவில்லை. 1910 ஆம் ஆண்டுகளில் சுமார் பல தசாப்தங்களில், வானொலி ஒரு புதிய தொழில்நுட்பமாகும், இது புதுமைக்கு வளமானது. 1912 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, கோடார்ட் மின்கடத்திகளில் ரேடியோ அலைகளின் தாக்கங்களை ஆராய்ந்தார்.
ரேடியோ-அதிர்வெண் சக்தியை உருவாக்குவதற்காக, அவர் ஒரு பீம் விலகலுடன் ஒரு வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார். இது கேத்தோடு-ரே ஆஸிலேட்டர் குழாய் போல இயங்குகிறது. லீ டி ஃபாரெஸ்ட்டுக்கு முந்தைய இந்த குழாயின் காப்புரிமை, ஆர்தர் ஏ. காலின்ஸுக்கு இடையிலான வழக்கில் மையமாக மாறியது. அதன் சிறிய நிறுவனம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் குழாய்களை உருவாக்கியது. மேலும் வெற்றிட குழாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக AT&T மற்றும் RCA. கோடார்ட் வழக்கு கைவிடப்பட்டபோது கொலின்ஸிடமிருந்து ஒரு ஆலோசகர் கட்டணத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டார். இறுதியில் இரண்டு பெரிய நிறுவனங்களும் நாட்டின் வளர்ந்து வரும் மின்னணுத் தொழிலுக்கு டி ஃபாரஸ்ட் காப்புரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதித்தன.
1912 வாக்கில், அவர் தனது ஓய்வு நேரத்தில், கால்குலஸைப் பயன்படுத்தி, கணிதத்தை உருவாக்கினார். ராக்கெட்டின் எடை மற்றும் உந்துசக்தியின் எடை மற்றும் திசைவேகம் ஆகியவற்றைக் வெளியேற்ற வாயுக்களின் கருத்தில் கொண்டு செங்குத்து விமானத்தில் ஒரு ராக்கெட்டின் நிலை மற்றும் வேகத்தை கணக்கிட அனுமதித்தது. இதன் விளைவாக, ரஷ்யாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட சியோல்கோவ்ஸ்கி ராக்கெட் சமன்பாட்டை அவர் சுயாதீனமாக உருவாக்கினார். செங்குத்து விமானத்திற்காக அவர் ஈர்ப்பு மற்றும் ஏரோடைனமிக் இழுவின் விளைவுகளை உள்ளடக்கியது. அவரது முதல் குறிக்கோள் வளிமண்டலத்தைப் படிப்பதற்காக ஒலிக்கும் ராக்கெட்டை உருவாக்குவதாகும். இத்தகைய விசாரணை வானிலை ஆய்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், திறமையான விண்வெளி ஏவுதள வாகனங்களை வடிவமைக்க வெப்பநிலை, அடர்த்தி மற்றும் காற்றின் வேகத்தை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலான விஞ்ஞானிகள், குறிப்பாக அமெரிக்காவில், அத்தகைய இலக்கை ஒரு யதார்த்தமான அல்லது நடைமுறை விஞ்ஞான நோக்கமாக கருதவில்லை என்பதால், விண்வெளியில் விமானங்களுக்கான வாகனத்தை உருவாக்குவதே தனது இறுதி குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்ள அவர் மிகவும் தயக்கம் காட்டினார். இதுபோன்ற யோசனைகளை தீவிரமாக பரிசீலிக்க பொதுமக்கள் இன்னும் தயாராக உள்ளனர். பின்னர், 1933 ஆம் ஆண்டில், கோடார்ட் “விண்வெளிப் பயணத்தின் சாதனை, சோதனை மூலம் சோதனை மற்றும் படிப்படியாக, ஒரு நாள் நாம் வெற்றிபெறும் வரை, அதைத் தடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.
இன்றைய ராக்கெட் அறிவியல் பங்களிப்பாளர்களில் இவர் மிக முக்கியமானவர். ராக்கெட் அறிவியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் (Liquid Fueled Rockets) கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆராய்ச்சியின் பகுதியாக, 1926 மார்ச் 16 அன்று இவரது குழுவினர் செலுத்திய ராக்கெட்டே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டாகும். காடர்ட் மற்றும் அவரது குழுவினர் 1926க்கும் 1941க்கும் இடையிலாக மொத்தம் 34 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளனர். அவற்றில் சில அதிக உயரமாக 2.6 கி.மீ (1.6 மைல்) -க்கும், அதிக வேகமாக 885 கி.மீ/மணிக்கும் (550 மைல்) பறக்கக்கூடியனவாக இருந்தன. ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் ஆகஸ்ட் 10,1945ல்ல் தனது 62வது அகவையில், பால்டிமோர், மேரிலாந்துஅமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். மேரிலாந்து மாநிலத்தின் கிரீன்பெல்ட் நகரத்திலுள்ள நாசாவின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிக்கூடமான காடர்ட் விண்வெளி ஊர்தி மையம் (The Goddard Space Flight Center GSFC), ராபர்ட் காடர்ட்டின் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்குகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தலைக்கேறிய போதை பாதை மாறி வந்த போதை ஆசாமி.. நிலை தடுமாறி கீழே விழுந்த நபரை காப்பாற்றிய சாலை பணியாளர்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் சந்திப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் பின்புறம் சாலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது இது நேரு நகர் பிரதான சாலை வரை சாலையில் அமைத்து மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணியாளர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நிதானம் இல்லாமல் அதிக அளவு மதுபோதையில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலை இருப்பதாக நினைத்துக் கொண்டு வேகமாக அந்த வழியில் வந்துள்ளார் அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுகவே உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த நபரை தூக்கி சாலை ஓரத்திற்கு கொண்டு வந்தனர் எனினும் அவரால் நிற்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு மது போதையில் இருந்து உள்ளார் மீண்டும் அவர் வாகனத்தை எடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் போடி லயன் கீழே வரை சென்று எதிரே வந்த ஒரு கார் மீது மோத முயன்றார் அப்பொழுது மீண்டும் யுடன் அடுத்து காளவாசல் பகுதி வழியாக தப்பித்து சென்றார் சிறிது தூரம் தள்ளி விழுந்திருந்தால் வாய்க்காலில் விழுந்து நிச்சயம் அவருக்கு படுகாயமும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது இது போன்ற போதை ஆசாமிகளை கண்டறிந்து காவல்துறை கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பகுதியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சோழவந்தான் அக் 5. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. பள்ளி விடும் நேரங்களிலும் துவங்கும் காலை நேரங்களிலும் அதிகப்படியான கூட்டம் பேருந்து முழுவதும் நிரம்பி வழிவதால் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. . இதனால் பொதுமக்கள் மிகுந்த மனச்சுமையில் உள்ளனர். மேலும் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதற்கு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சோழவந்தான் பகுதியில் காவல்துறை போக்குவரத்து துறை பள்ளி ஆசிரியர்கள் கலந்து ஆலோசித்து அதிகப்படியான பேருந்துகள் விட வேண்டும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரியாபட்டியில் இல்லங்கள் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காரியாபட்டி -அக்-4 திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி, விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இல்லந்தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காரியாபட்டி, மல்லாங் கிணறில் முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முகாமினை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆவியூர் சிதம்பர பாரதி, அரசகுளம் சேகர், கார்த்திகேயன், அய்யனார், திலீபன் மஞ்சுநாதன், ஜெகன் பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (எ) ஜெயச்சந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், பேரூர் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலமேடு பேரூராட்சியில் சிறுவர் பூங்கா நவீன சுகாதார வளாகம் வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மஞ்சமலை நகர் பகுதியில் நவீன சமுதாய கழிப்பறை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோழவந்தான்சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதி பாண்டியராஜன் துணைத் தலைவர் ராமராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பாலமேடு பேரூர் செயலாளர் மனோகர வேல்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சரந்தாங்கி முத்தையா, அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் , ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், மற்றும்.பிரதீப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது கணவர் இன்பம், அச்சகம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை, ரயில்வே பீடர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். பின்னர் தனது அலுவலக பணியாளர் ஒருவரை அனுப்பி, வண்டிக்கு பெட்ரோல் நிரப்பி எடுத்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த ஊழியர் இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு சென்று, வாகனத்தில் சாவியை பொருத்தி இயக்கிய போது திடீரென்று குபுகுபுவென்று புகை வந்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று இருசக்கர வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், இயற்பியல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் கடந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கோபி கலை அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த உலக விண்வெளி வாரத்தில் கலந்துகொண்டு தாங்கள் செய்த ராக்கெட் மாதிரியான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் செயற்கைக்கோள் செயல்படும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இந்த வருடம் நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் இணையதள வாயிலாக இஸ்ரோ உலக விண்வெளி வாரத்தில் பங்குபெற்று வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு சிறப்பு முகாம் மணியக்காரன்வலசை கிராமத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூய்மை பணி, சாலை ஓரங்கள் சீரமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், மரங்கள் வளர்ப்பதன் அவசியம், துணிப்பை பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுதானிய உணவு பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி, ஊட்டச்சத்து கருத்தரங்கு நடந்தது. ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் துவங்கி வைத்து பேசினார். கண்காட்சியை பார்வையிட்ட பொது மக்களுக்கு சிறுதானியங்களால் தயாரான உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் ஆரோக்கியம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் விளக்கம் அளித்தனர். பள்ளி நாட்டுநலப் பணி திட்ட அலுவலர் ரஹ்மத்துல்லா, ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சுமதி, ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் “சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் முன்னாள் பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் மா. செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 04.10.2023 அன்று வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சுப்பிரமணியபுரம், வாசுதேவநல்லூர்) மற்றும் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி (T.N. புதுக்குடி, புளியங்குடி) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா தெரிவித்ததாவது, ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் கலைஞர். நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப் பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றிய மைத்தவர் கலைஞர் என தெரிவித்தார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் தெரிவித்ததாவது, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆற்றிய பணிகளை பேச நூற்றாண்டுகள் பல வேண்டும். நெஞ்சுக்கு நீதி என்னும் அவரது புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார். தமிழ்நாட்டை சீரிய நாடாக உருவாக்கிய சிற்பி. சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு அளித்தவர் என தெரிவித்தார். முன்னாள் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் தெரிவித்ததாவது, கலைஞரின் சட்டமன்ற வாழ்க்கை, அவரது உரைகள், சமயோசித புத்தி, அயராத உழைப்பு, எடுத்த பணிகளை தாமதிக்காமல் நிறைவேற்றும் திறன், முடியாததையும் முடிக்கும் செயலாற்றல், ஆகிய அரிய பண்புகள் மிகவும் போற்றத் தக்கவை. அவரது வாழ்க்கை மாணவர்களுக்கு ஒரு பாடமாக திகழ்கிறது என தெரிவித்தார்.
பேரவை முன்னாள் தலைவர் ஆர். ஆவுடையப்பன் தெரிவித்ததாவது, தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் காட்டிய வழியில் தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியும் அவர் காட்டிய வழியில் தான் நடைபெறுகிறது. கலைஞரின் சட்டமன்ற வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றி வருங்காலத்தை வளமாக்க வேண்டும். எளிய குடும்பத்தில் பிறந்து உலகில் உயர்ந்த உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். ஆற்றல் மிகுந்த அறிவாளி. தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி குறித்து எந்த நேரமும் சிந்திப்பவர். அவரது வழியில் அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி கு. காவிய பிரியா முதல் பரிசையும், தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி க.சூரியகலா இரண்டாவது பரிசையும், மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி மு.சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர். இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் “சமூக முன்னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் மாணவி ரா. எழிலரசி (அரசு மேல்நிலைப்பள்ளி வாசுதேவநல்லூர்) முதல் இடத்தையும், கி. கவிஷா (அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்த நல்லூர்) இரண்டாவது இடத்தையும், சு.ராமர் அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்தமங்கலம் மூன்றாவது இடத்தையும் வென்றனர். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ எனும் கருத்தரங்கத்தில், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆர். ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச்செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக குட்பட்ட இ.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் அதே ஊரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் ஐதராபாத் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியானது ஸ்கூல் கேம்ஸ் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பவுண்டேசன் சார்பில் தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து பங்கு பெற்றனர்.,
இதில் தமிழகத்திலிருந்து பங்கேற்று 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பெற்றார்.,
இந்நிலையில் இன்று சொந்த ஊருக்கு வந்த இந்த தர்ஷினி என்ற மாணவிக்கு தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையிலான கிராம மக்கள் மேள தாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேலும் தங்க பதக்கம் வென்ற மாணவியை ஊர்வலமாக அரசு பள்ளிக்கு அழைத்து வந்த நிலையில் அரசு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.3- தொழிலாளர் முன்னேற்ற சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்பி, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையின்படி ) ராமநாதபுரம் அரண்மனை முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
தொமுச ராமநாதபுரம் மாவட்ட கவுன்சில் செயலாளர் ச.வின்சென்ட் அமலதாஸ் தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலர் எம்.சிவாஜி நிறைவு உரையாற்றினார்.
எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.மயில் வாகனன், விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். முத்துராமு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், ஏஐடியுசி சுப்ரமணி, டாஸ்மார்க் தொமுச மாவட்ட செயலாளர் எம்.எஸ் ராஜா உரையாற்றினர். தொமுச சார்பில் கே. காஞ்சி, தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் அழகப்பன் கலந்து கொண்டனர். எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 21 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கூட்டம் நடைபெறும் பெருங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன் துணைத்தலைவி விஜயலட்சுமி ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு மலை. சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர் அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெருங்குடி ஊராட்சி செயலாளர் செந்தில் வேல்முருகன் தீர்மானங்களை வாசித்து கிராம மக்களின் ஒப்புதல் பெற்று திருப்பரங்குன்றம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க நிறைவேற்றப்பட்டது.
மதுரை விமான நிலைய விரிவாக்க த்திற்காக பெருங்குடியின் உட்கிராமமான பரம்புபட்டி பகுதிக்கு விமான நிலைய விரிவாக்க பணியில் தடுப்பு சுவர் கட்டுவதால் பரம்புபட்டி மற்றும் நிலையூர் செல்வதற்காக புதிய சாலை அமைப்பதற்காக தீர்மானமும் பெருங்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்குது குறித்த தீர்மானமும் நடப்பு நிதி ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு, முதியோர் கல்வி செயல்படுத்த கோரி 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காந்தி ஜெயந்தி: தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு அசத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக செயல்பட்டு வரும் காவேரி கூக்குரல் இயக்கம் மாபெரும் மரம் நடும் விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளை ஒரு பயிர் விவசாய முறையில் இருந்து தற்சார்பு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாற்றும் பணியையும் செய்து வருகிறது.
அந்த வகையில், கிராமப்புற மக்களின் நலனில் அதிக அக்கறை காட்டிய மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று தமிழ்நாட்டில் 94 விவசாய நிலங்களில், சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1.59 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
காவேரி கூக்குரல் இயக்க களப் பணியாளர்களின் ஆலோசனைகளின்படி, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.
காவேரி ஆற்றில் நீர் வரத்து நிலையில்லாமலும் குறைந்தும் வரும் இந்த காலகட்டத்தில் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்கள் நடுவது மிகவும் அவசியமாக உள்ளது. எனவே தமிழக மற்றும் கர்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நட ஈஷா திட்டமிட்டுள்ளது.
இதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுத்து வருகிறது. மரம் சார்ந்த விவசாயம் என்பது பலன் தரக்கூடிய விலைமதிப்பு மிக்க மரங்களை விவசாய நிலங்களின் வேலி மற்றும் வரப்பு ஒரங்களில் வளர்ப்பதாகும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற மரங்கள் இதற்கு உகந்தவை.
மேலும், வாய்ப்புள்ளவர்கள் நிலம் முழுவதும் டிம்பர் மரங்கள் நடவு செய்து இடையில் ஊடுபயிர் மற்றும் மிளகு போன்ற நறுமணப்பயிர்களையும் சாகுபடி செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழம் முழுவதும் உள்ள களப்பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.
மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதுவரை ஈஷா சுமார் 9 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் ஒரு கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 45 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.