ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரதரவா கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா கலந்து கொண்டு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது எப்படி என்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்வது எப்படி என்று விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கினார். தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு முன்பாக தக்கை பூண்டு சாகுபடி செய்து மடக்கி உழுது மண்வளத்தை பாதுகாக்கலாம் எனவும், மண் பரிசோதனையின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர் ஜோசப் செய்திருந்தார். கிராமத்தில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Category:
தேசிய செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் முன்னேற்றக் குழு காரீப்பருவ பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் விலை ஆதரவுத் திட்டத்தின் (Price Support Scheme)கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய தொகையானது இடைத்தரகு ஏதும் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. மேலும் மின்னணு தேசிய வேளாண் சந்நை திட்டம் (e-NAM),குளிர்பதன கிட்டங்கியில் விளைபொருட்கள் இருப்பு வைத்திட வாடகை விபரம், பொருளீட்டுக்கடன் தொடர்பான திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.பயறு வகை விதைப் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில், உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் உதவி விதை அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். கிராம வேளாண் முன்னேற்றக் குழுவின் நோக்கம் பயன்கள்,மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நடப்பாண்டு மானியத்தில் பசுந்தாள் உர விதைகள், பண்ணை கருவிகள், தார்ப்பாலின் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி கூறினார். மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப் விவசாயிகள் இடையே விளக்கி பேசினார், தொடர்ந்து விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டது. கும்பரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கும்பரம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.. பயிற்சி முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் நன்றியுரை கூறினார் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியபட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்கள் வியாபாரம் செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வள ஆய்வாளர் சாகுல் ஹமீது. சாகர் மித்ரா பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 11 கிலோ கண்டறியப்பட்டு அவற்றை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் மீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெட்டுப் போன மீன்களை வியாபாரம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடிக்கடி ஆய்வு நடைபெறும் என்றும் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001164377-large.jpg?resize=576%2C1024&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001164375-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001164378-large.jpg?resize=1024%2C458&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001164376-large.jpg?resize=1024%2C576&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு முன்னிலையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி வரவேற்புரை வழங்கினார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் , கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹீ ஆகியோர் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழும், இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் நலசேவை பணி செய்கிற நுகர்வோர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் சேவையை பாராட்டி கௌரவிக்கு பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.. தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது இவ்விழாவில் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமான விவாதம் !
by Baker BAker
written by Baker BAker
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001161763-large.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001161768-large.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001161810-large.jpg?resize=1024%2C461&ssl=1)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் தற்காலிக ஆணையாளர் நஜிதா பர்வீன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் கழிவுநீர் சாலை உட்பட அடிப்படைத் தேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சில மாதங்களாக அதிகாரிகள் பணிகளை முறையாக செய்யவில்லை என்றும் நகராட்சியில் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை தீயிட்டு எரித்து வருவதாகவும் அவை கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஆஸ்துமா நோயாளிகள் இருப்பதால் இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முறையாக நகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்னாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து நாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் நாய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பதினாறாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்தார். பேருந்து நிலையம் அருகே மீன் மார்க்கெட் இடித்து புதிதாக கட்டுவதாக கூறி இன்று வரை அதை இடிக்காமல் இருப்பதால் அப்பகுதி குடிகாரர்கள் கூடாரமாக மாறி அப்பகுதியில் மது வியாபாரம் செய்வதாகவும் குடித்துவிட்டு அட்டகாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி பெண்கள் செல்வதற்கு அச்சப்பட்டு வருவதாகவும் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்றும் பழைய கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது அப்பகுதியில் மக்கள் நடமாடும் பொழுது யார் மேலயாவது விழுந்து இறந்தால் தான் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வியையும் மூணாவது வார்டு கவுன்சிலர் முன்வைத்து தெரிவித்தார். கழிவுநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம்.நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதால் நகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தால் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து என் மக்களுக்கு கழிவு நீர் தொட்டி அமைத்துக் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் புரோக்கர்கள் அதிகரித்து வருவதாகவும் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஆறாவது வார்டு பகுதியில் கழிவுநீர் தொட்டியின் மூடிகள் தரமற்ற நிலையில் போடப்படுவதால் வாகனங்கள் சென்று அவ்வப்போது உடைந்து விடுகிறது தரமான மூடிகள் அமைத்து தருமாறு கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். மக்களுக்கு அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக செய்ய வேண்டும் என்றும் பேங்க் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால் அதையும் சரி செய்யப்பட வேண்டும் என்றும் 19 ஆவது வார்டு பகுதியில் பேவர் பிளாக் முறையாக அமைத்து தர வேண்டும் என்று கவுன்சிலர் கோரிக்கையை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து 21 வது வார்டு பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து தருவதற்கும் கழிவுநீர் தொட்டிகள் அமைத்து தரவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்தும் இன்றுவரை நிறைவேற்றப்படாததால் வார்டு பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நகராட்சி நிர்வாகத்தில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளார் என்றும் தாங்கள் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு அறிந்த நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை ரமலான் நகர் அருகாமையில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கையில் .ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர்கள் குழாய் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கின்றது. இந்த நிலையத்திலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளிப்பகுதியில் திறந்து விடுவதால் அதை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதாலும் தொற்று நோய் பரவுவதாலும் அடுத்த தலைமுறை அழிவை நோக்கி செல்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி கிராம மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளை பராமரித்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விவசாயம் நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரக்கூடிய தண்ணீரை கால்நடைகள் அருந்துவதால் கால்நடைகள் மூலம் பெறக்கூடிய பால்கள் துர்நாற்றத்தோடும் விஷத்தன்மை இருப்பதாகவும் பால் விற்பனை நிலையம் எங்கள் பாலை வாங்காமல் நிராகரித்து வருகின்றனர். கேள்வி எழுப்பினால் உங்கள் பாலில் துர்நாற்றம் அடிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கழிவு நீர் நிலையத்தின் மூலம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் எங்கள் தலைமுறை அழிவை நோக்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் முழுமையாக பாதுகாப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தார். உலகளவில் போதைப் பொருளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. . அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் உண்டாகும் தீமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இப்பேரணியில் NCC, NSS, ரெட் கிராஸ், இராஜா மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி. ஸ்வாட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 1300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டபடி சென்றனர். இப்பேரணியானது அரண்மனை முன்பாக துவங்கி, அரண்மனை மணிக்கூண்டு வழியாக அரசு மகளிர் கலை கல்லூரியைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் ,உதவி ஆணையர் (கலால்) சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா , வட்டாட்சியர் சாமிநாதன், கோட்ட கள அலுவலர் முருகேசன் , உதவி மேலாளர் பரமசிவம் , அலுவலக மேலாளர் முருகவேல் , மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001154596-large.jpg?resize=867%2C1024&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு ! வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் !!
by Baker BAker
written by Baker BAker
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 45 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வரும் நிலையில் ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரியும், துனை தலைவராக பா.ஜ.கவை சேர்ந்த ராஜா என்பவரும் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர். இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவர் ஒன்றியங்களுக்கு அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்காக முறையாக நிதி பெற்று தரவில்லை என்றும் இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்த நிலையில் இன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த கூட்டரங்கில் சாதாரன கவுன்சில் கூட்டம் தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்தவுடனேயே முறையாக நிதி பெற்று தராத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், அன்மையில் ஒதுக்கிய 80 லட்சம் நிதியை கவுன்சிலர்கள் ஒப்புதல் இன்றி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டித்துன் தலைவர், துனை தலைவர், திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்ததுடன் ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒன்றிய கவுன்சில் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர் திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோப்பாஸ் மழலையர் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்குபெறச்செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் படித்து வரும் க.தெய்ஜன் என்ற 3 வயது மாணவன், Rubik’s Cube யை 45 வினாடிக்குள் முடித்து World Wide Book Of Record மற்றும் Indian Book Of Record ல் இடம்பெற்றுள்ளார். மேலும் மாணவனின் பரிசு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்திஷ் IPS பார்வையிட்டு மாணவனை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.பள்ளியின் தாளாளர் சங்கர் மற்றும் முதல்வர் விஜித்ரா சங்கர் மற்றும் மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மாதம்தோறும் வழங்கப்படும். ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கு தேவையான திட்டப்பணிகளை அவ்வப்போது நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தேவையான பணிகளை தேர்வு செய்து நிறைவேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகளுக்கு உடனுக்குடன் செயல்படுத்திடும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மகளிர் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் கிடைத்திடும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேஸ்வரி , கோட்டை இளங்கோவன் , தினைக்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி சிகப்பி , வண்ணாங்குண்டு ஊராட்சி மன்றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்திருக்கும் 18 வாலிபர்கள் தர்ஹாவின் 850ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜமாத் தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஜூன் 7 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 18 நாட்கள் மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவான இன்று முஹம்மது காசிம் இஸ்லாமிய இசை கச்சேரி தர்காவின் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு ஆயிரம் கிலோ அரிசி நெய் சோறு சமைத்து ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை தர்ஹாவின் விழா குழு உறுப்பினர்கள் அப்துல் ஜப்பார், சாகுல் ஹமீது ,சீனி முஹம்மது, முபாரக், சபீக், சுல்தான், ஹபீப் நைனா, ஃபாஹிர், நசுருதீன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம் ராமாபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழு இணைந்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் தனபால் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் மயிலாடுதுறை புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி உட்பட்ட 13 மாவட்டங்களுக்கு மேல் 18000 குலுக்கல் மற்றும் 5 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது. எனவே அரசாணை 66-ஐ ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும், சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பாஜக மாவட்ட தலைவரோடு இணைந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிடுவதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக 200க்கும் மேற்பட்ட சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் , 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 01.04.2023 க்கு பிறகு பணியில் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் , ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஒப்பந்த முறைப்படி ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும், காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், சமூக நீதிக்கு எதிரான கான்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும் என்றும், இறந்து போன போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதியதாரர்களுக்கு பிற துறை ஊழியர்களைப் போல காப்பீட்டு உத்திரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி மண்டல டி.என்.எஸ்.டி.சி- சிஐடியு தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணிக்கு வங்கி நாளை காலை 9 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து குதிரைகள் நாட்டியமாட பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வான வேடிக்கைகளுடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஊர்வலமாக புறப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக மவுலீது என்னும் (புகழ் மாலை) ஓதப்பட்டது. தொடர்ந்து அன்று முழுவதும் இரவு முதல் மறுநாள் வரை தொடர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.. அதிகாலை பள்ளிவாசலில் தொடங்கி சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்காவில் புனித சந்தனம் பூசப்படும் தொடர்ந்து பகலில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவதுடன் ஜூலை 3ல் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. சந்தனக்கூடு விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: அதிரடி காட்டிய கீழக்கரை வட்டாட்சியர்..
by Baker BAker
written by Baker BAker
!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிகமாக விற்கப்படுகிறது என, தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இன்று காலை கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் திடீர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் புகார் கூறப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தியதில் அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனையடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கடை உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மாவட்ட மதுவிலக்கு ஆயத் தீரவு கோட்ட ஆய அலுவலர் முருகேசன் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் உடன் இருந்தனர்
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001136724-large.jpg?resize=1024%2C768&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001136714-large.jpg?resize=1024%2C768&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001136723-large.jpg?resize=1024%2C768&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வசந்த் நகரில் ரேசன் அரிசி கடத்துவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது டாடா நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் 18 மூட்டை கொண்ட 630 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்டது. மேலும் குமாரவேல் , குகன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவல் பெற்று இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதில் இராமநாதபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரசாமி மற்றும் தலைமை காவலர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வருகை ! அரசின் மெத்தன போக்கு தான் கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு காரணம் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 எஸ் டி பி ஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எஸ் டி பி ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகை புரிந்தார். மேலும் சமீபத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவித் தொகையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பெரியபட்டினம், மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், நம்புதலை, திருப்புல்லாணி இராமநாதபுரம் நகர் உட்பட பல்வேறு இடங்களில் கட்சியின் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது, கள்ளகுறிச்சியில் கள்ள சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் முதல் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் , கஞ்சா, சாராயம் உளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் உட்பட அனைவரையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் , சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்ப்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாம்பன் பகுதியில் கடலில் இறந்த சிறுவனுக்கு அரசு உடனடியாக நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் , காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்ட அரசு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மார்க் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜெமீலு நிஷா, சோமு , மாவட்ட துணைத் தலைவர் முகமது சுலைமான், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் மாவட்ட செயலாளர் ஆசாத், நஜமுதீன் மாவட்ட பொருளாளர் ஹசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஸா, சையத் அலி, ராஜ்குமார் உமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன் பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஷேக் ஜலால் , திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் செயலாளர் பீர் மொஹிதீன் , மண்டபம் மேற்கு ஒன்றிய தலைவர் சுலைமான் , செயலாளர் அன்வர் , மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் சிராஜ் தீன் , திருவாடானை ஒன்றிய தலைவர் மஸ்ஜித் உட்பட நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001133889-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001133885-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001133235-large.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/1001133234-large.jpg?resize=1024%2C461&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் திருவாடானை வட்டாட்சியர் K. கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , கமுதி வட்டாட்சியர் V. சேதுராமன் பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , கடலாடி வட்டாட்சியர் N. ரெங்கராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும் ,கீழக்கரை வட்டாட்சியர் S.பழனிக்குமார் இராமநாதபுரம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் S. பாலகிருஷ்ணன் கீழக்கரை சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , இராமேஸ்வரம் வட்டாட்சியர் P.வரதராஜ் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனிவட்டாட்சியர் K. செல்லப்பா இராமேஸ்வரம் வட்டாட்சியராகவும் , இராமநாதபுரம் துணை ஆய்வுக்குழு அலுவலர் M.A. ஜமால்முகம்மது கீழக்கரை வட்டாட்சியராகவும் , பரமக்குடி ஆதிதிராவிட நலத்திட்டம் தனி வட்டாட்சியர் S. காதர்முகைதீன் , கமுதிவட்டாட்சியராகவும் , இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர்G.R. அமர்நாத் திருவாடானை வட்டாட்சியராகவும் , பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் K.முருகேஷ் கடலாடி வட்டாட்சியராகவும் ,கீழக்கரை சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் A. சேகுஜலாலுதீன் கீழக்கரை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , இராமநாதபுரம்சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் N. சண்முகசுந்தர் பரமக்குடி ஆதிதிராவிட நலத்திட்டம் தனி வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் K. தமிழ்ச்செல்வி இராமநாதபுரம் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும் , கீழக்கரை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் S. மீனலோஷனி ஆர்.எஸ்.மங்கலம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது ! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நடவடிக்கை ! !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய தோஸ்த் வாகனத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவல் பெற்று இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் சிவில் சப்ளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரசாமி மற்றும் தலைமை காவலர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பல லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் கண்ணன் வழங்கினார். பாக்யநாதன், செந்தில்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் வருகின்ற ஜூலை 20ம் தேதி அறக்கட்டளையில் உள்ள 10834 உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் மிகப்பெரிய விழா இராமநாதபுரத்தில் நடைபெறும் என்றும், அதற்கான முன்னோட்டமே இன்றைய நிதி உதவி விழா எனவும், தந்தையை இழந்து தந்தையின் கணவை நிறைவேற்ற துடிக்கும் மாணவி ஆர்த்தியின் கல்வி செலவிற்காக உதவிகள் தொடரும் என்று அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.