இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் அழகு வள்ளியம்மன் கோயில் 10 ஆம் ஆண்டு ஆடி 18 ம் பெருக்கு , பொங்கல் விழா, முளைப்பாரி விழா, மற்றும் வட மஞ்சுவிரட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த வட மஞ்சுவிரட்டு விழாவில் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 க்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டன. இதில் இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் , சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கும் விளையாட்டில் வீரமாக களமிறங்கி விளையாடினர். இதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் வீரமாக சீறிப்பாய்ந்து விளையாடின. இந்த மஞ்சுவிரட்டு விழாவில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் , மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கமுதி டி.எஸ்.பி சண்முகசுந்தரம் தலைமையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் லெட்சுமி மேற்பார்வையில் கோவிலாங்குளம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடு களை கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் விஜயரெத்தினா செய்திருந்தார்.
You must be logged in to post a comment.