இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் கீழக்கரை அம்மா உணவகத்திற்கு 3.5.2020 வரை இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 5.5.2020 அம்மா உணவகத்திற்கு 17ஆம் தேதி வரை இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் 70000. எழுபது ஆயிரத்தை கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியிடம் வழங்கினார். பின்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமையில் கீழக்கரை நகர் கழக செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி துறை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியும், கீழக்கரை முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவியும், அதிமுக கட்சியினருக்கும் நலத்திட்ட உதவியும் வழங்கினார்.
இதில் அதிமுக துணைச்செயலாளர் குமரன், 1வார்டு செயலாளர் செல்வகணேஷ் பிரபு, மலை ராஜ், வேலன்,ராயப்பன், சாகுல் ஹமீது, வேலாயுத குமார், ஜேம்ஸ், அசோக், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.