கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியாக 2018ம் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் மார்க்க பேரூரை நிகழ்வு இன்று 26.01.2019 முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சகோ.முஹம்மது சாலிஹ் ஹுசைன் M.B.A, L.L,B. B.G.I(வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்), சகோ.அஹமது ஹுசைன் ஆசிஃப் M.E (முதல்வர் அல்மதரஸத்துல் முஹம்மதியா, அல்மதரஸத்துல் நூரியா, பேராசிரியர் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை அபுல் ஃபய்ஸ் (உறுப்பினர் அல் அமீன்) வழங்கினார் நிகழ்வின் நன்றியுரையை ஹசன் நசீர் (உறுப்பினர் அல் அமீன்) வழங்கினார். இப்போட்டியில் கீழக்கரையில் உள்ள அனைத்து பெண்கள் மதரஸாக்களில் உள்ள மாணவிகளுக்கும் மற்றும் மதரஸா அல்லாத சகோதரிகளுக்கும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர்மக்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் பரிசு பெற்ற மதரஸாக்களின் விபரம்: முதல் பரிசு: அல் மதரஸத்துன் நூரியா(Aysath Rasfa,Aysha Ifa)
இரண்டாம் பரிசு: அல் மதரஸத்துன் நிஸ்வானில் புர்கான்(Aasiya,Syed Rumaisa )
மூன்றாம் பரிசு:மதரஸத்துன் நிஸ்வான் வல் ஈமான்(Lihna Zubaidha,Nusrath Faaliha)
கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்றவர்களின் விபரம்:-
.
You must be logged in to post a comment.