12
மதுரை பைபாஸ் சாலை கருப்புசாமி கோயில் அருகே சாலையை கடக்க முயன்ற போது கொத்தனார் வேலை பார்க்கும் பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டி இருசக்கர வாகனம் வேகமாக மோதியது.
இதில் அவர் கால் எழும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் 108 வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இப்பகுதியில் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. இது சம்பந்தமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.