இராமநாதபுரம், நவ 23- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. துறைமுகத்தில் இருந்து 3 நாட்டிக்கல் தொலைவில் வந்த ஜெயசீலன் என்பவரது விசைப்படகு, அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகு மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் நாட்டுப்படகு மீனவரான கரையூரையைச் துரைசிங்கம் என்பவரது 2 கால்கள், ஜெயசீலன் விசைப்படகின் இன்ஜின் இழையில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த துரைச் சிங்கத்தை சக மீனவர்கள் துரிதமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தனர். விபத்து, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட துரைச் சிங்கத்தின் எலும்பு முறிந்த கால்களுக்கு டாக்டர்கள் உடனடி ஆபரேஷன் செய்தனர். இது குறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறையினர், துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.