18
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் விருவீட்டில் தனது ஹோட்டலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து சென்று கொண்டிருந்த நிலையில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.