12
நேற்று (24/04/2020) மதுரை பழங்கானத்தம் பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பதை சத்தியபாதை – கீழை நியூஸ் நிருபர் நேரடியாக வீடியோவாக எடுத்து செய்தி வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இச்செய்தி வெளியான உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட முகவருக்கு ரூ.3000/- அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் ஓரு வாரம் வியாபாரம் செய்யவும் தடை விதித்துள்ளனர்.
இந்த விசயத்தை பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்த கீழைநியூஸ்-சத்தியபாதை நிர்வாகத்துக்கும், உடனடியாக தீர்வு கண்ட ஆவின் நிர்வாகத்துக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.