ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் அ அன்வர் ராஜா மாவட்ட கழக செயலாளர் MA முனியசாமி ஆர் எஸ் மங்களம் ஒன்றிய செயலாளர் SRG திருமலை ஆர் எஸ் மங்களம் ஒன்றிய சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் P பசுருருல் ஹக் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அஇஅதிமுக கழகத்தின் இணைந்தனர். இந்நிகழ்வில் மாற்று கட்சி நிர்வாகிகளான EX. MP. ரித்தீஸ் PA டூயட் பாபு (எ) முகமது ரிலுவான் அமுமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சக்திமுகுந்தன் OPS அணி மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் சீனிமுகமது அமமுக இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது பால்குளம் சஞ்சய் சோழந்தூர் தேவாராஜ் திருப்பாலைக்குடி பழங்கோட்டை காளிதாஸ் காந்திநகர் அந்தோனி உட்பட பலர் இணைந்து கொண்டனர்.
Daily Archives
March 24, 2024
திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!- திமுகவை சில்லு சில்லாக உடைத்த எடப்பாடி பழனிச்சாமி..
by Askar
written by Askar
திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
“தேர்தலில் போட்டி என்றால் திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை நாடு அறியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்று பிரதமரை பற்றி விமர்சிப்பார். இல்லையென்றால் என்னைப் பற்றி பேசுவார். வேறு எதுவும் பேசமாட்டார். உதயநிதி ஒரே செங்கல்லை எடுத்து மூன்று வருடமாக காட்டிக் கொண்டு உள்ளார். செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்.நீட் யார் ஆட்சியில் கொண்டு வந்தது? நீட்டை கொண்டு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள்ஒதுக்கீடு நாங்கள் கொண்டு வந்தோம். 2,160 ஏழை மானவர்கள் இன்று மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரம் தேவை. இங்கு குடும்ப கட்சி நடத்துவது போல், அங்கும் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக, மக்களை பற்றி யோசிக்கவே இல்லை. இவர்களுக்கு எண்ணம் எல்லாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பதவி வேண்டும்.
திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக், வெளிநாட்டிற்கு போதை கடத்தி வந்தவர். எந்த கட்சியிலாவது அயலக அணி என்று உண்டா? கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2,138 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலினே அவைக்குறிப்பில் கூறியுள்ளார். ஆனால் 138 பேர் தான் கைது என்கிறார். அப்படி ஆனால் மீதி நபர்கள் என்ன ஆனார்கள்?நான் நினைத்திருந்தால் 4 ஆண்டுகளில் உங்கள் அமைச்சர்கள் எத்தனையோ பேர் மீது வழக்கு போட்டிருப்பேன். ஆனால் பொறுமையாக இருக்கிறேன். அனைத்தையும் சேர்த்து வைத்து இருக்கிறேன். உங்களது மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் திமுகவிற்கு மரண அடியாக இருக்க வேண்டும். இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது;அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்!-பகீர் கிளப்பிய சுப்பிரமணிய சுவாமி..
by Askar
written by Askar
மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. கனவு எல்லாருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும்.
சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது. என்ன செய்தார் மோடி. ஒன்றும் செய்யவில்லை. பா.ஜ.க. கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்று விட்டனர்!-பாமக வை பங்கமாய் கலாய்த்த பிரேமலதா விஜயகாந்த்..
by Askar
written by Askar
திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.ஆனால் தேமுதிக அப்படி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உ.பி. மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும், ஜெய் ஸ்ரீராம் கூறி அட்டகாசம்..
by Askar
written by Askar
உ.பி. மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும், ஜெய் ஸ்ரீராம் கூறி அட்டகாசம்..
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். வட இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகையானது வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 24,25 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு இந்த கடந்த சில நாட்களாகவே மக்கள் ஹோலியை கலர் பொடி தூவி கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி இந்த பண்டிகையை முன்னிட்டு பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் மக்கள் ஹோலி பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடினர். அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இஸ்லாமியர்கள் மீது சிலர் வண்ணப்பொடி தூவி அத்துமீறியுள்ளனர்.
மேலும் அவர்கள் மீது வாளி நிறைய தண்ணீரையும் எடுத்து ஊற்றியுள்ளனர். அதோடு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இஸ்லாமியர், தனது மனைவி மற்றும் தாயுடன் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்த அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இன்று (24.03.2024) மிகவும் வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனிருத் என்ற முக்கிய குற்றவாளி, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி அறிவிப்பு..
by Askar
written by Askar
டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளது.எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்’ என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளனடெல்லி மதுபான கொள்கையில் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இதுக்காத்தான் தான் டிவி ரிமோட் உடைத்தேன்!-புது விளக்கம் கொடுத்த மநீம தலைவர் கமல்ஹாசன்..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பேசினார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் சேர்ந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட். அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சின்னம் பிரச்சினை நிலுவையில் இருப்பதால் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்.
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என 3 அணிகளையும் எதிர்த்து சீமான் ஆண்களுக்கு பாதி, பெண்களுக்கு பாதி என சரிசமமாக பிரித்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இருப்பினும் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள்.எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சின்னத்தை கூறி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளனர்.இருப்பினும் 26-ந்தேதி சின்னம் விவகாரத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம். இந்த முறையும் அதே பாணியில் சீமான் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -24
( கி.பி 1299-1922)
பேரரசர் முஹம்மது தரைப்படையை தலைமைதாங்கி மதிலின் முன்பகுதியான மேற்குப் பகுதியில்
கோட்டை வாயிலுக்கு எதிரே முகாமிட்டு இருந்தார்.
ஹங்கேரியிலிருந்து
ஒரு பொறியாளரை வரவழைத்து புதிய புதிய ஆயுதங்களை மன்னர் முஹம்மது வடிவமைக்க செய்தார்.
புதிய புதிய ஆயுதங்களை வடிவமைத்து பயன்படுத்துவதில்
மன்னர் முஹம்மதிற்கு அலாதிப்பிரியம்.
ஹங்கேரி பொறியாளர் வடிவமைத்த ஒரு மிகப்பெரிய பீரங்கி அப்போது உலகிலேயே பெரியதாக கருதப்பட்டது.
120 காளை மாடுகள்
அந்த ஒற்றை பீரங்கிகியை இழுத்து சென்றது.
மன்னர் முஹம்மது அவர்கள் இந்த ஆயுதங்களுடன்
கோட்டை சுவருக்கு வெளியே தயாராக இருந்தார்.
கப்பல் படைக்கு மன்னர் முஹம்மதின்
நம்பிக்கைகுரிய தளபதி அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார்.
இவர் மிகச்சிறந்த வீரரும் படையின் வியூகங்களை வகுப்பதில் கைதேர்ந்தவர்.
கோட்டைக்குள்
உள்நுழைந்த வீரர்கள்
கோட்டைக் கதவுகளை
திறக்கும் முன்பே பளீரென விளக்குகள் எரிந்தன.
கோட்டை கதவுகளும்
உடனடியாக திறக்கப்பட்டு துருக்கிய வீரர்கள் வெளிவந்து உஸ்மானிய வீரர்களோடு சண்டையிட துவங்கினார்கள்.
தளபதி அப்துல்லா அப்போது வகுத்த போர்தந்திரம் உஸ்மானிய போர் வரலாற்றில் ஒரு அற்புதமான திட்டம்.
தனது உஸ்மானிய வீரர்களை போரிடாமல் அப்படியே சிறு சிறு தற்காப்புகளை செய்து கொண்டே
முன்புற கோட்டை கதவுகளை நோக்கி ஓடி அந்த கதவுகளை திறக்க ஆணையிட்டார்.
ஆகவே உஸ்மானிய படைகள் தற்காப்பாக போக்கு காட்டிக்கொண்டே முன்புற கோட்டை கதவுகளை அடைந்து அதை அங்கிருந்த வீரர்களோடு,
துரிதமாக போரிட்டு கோட்டை கதவுகளை திறந்து விட்டனர்.
கோட்டைக்கு வெளியே முகாமிட்டு இருந்த மன்னர் முஹம்மதும் உஸ்மானிய தரைப்படையும் உள்ளே புகுந்து போரிட துவங்கினார்கள்.
அப்போது ரோமர்களின் படை மிகவும் பலவீனமாக இருந்தது.
சிலுவை யுத்தங்களில் நிறைய
பொருள்களையும்,
வீரர்களையும் இழந்து இருந்தனர்.
உஸ்மானிய வீரர்கள் கோட்டைக்குள் புகுந்து போரிட்டு முன்னேறுவதை அறிந்த ரோம மன்னர் 16 ஆவது காண்ஸ்டண்டைன்,
தனது தலைநகர்
காண்ஸ்டாண்டி
நோபிள் நகரிலிருந்து
தப்பித்து போப் இருக்கும் ரோம் நகருக்கு செல்ல திட்டமிட்டார்.
மன்னரை தெரிந்தே தப்பிக்க அனுமதித்தார் உஸ்மானிய பேரரசர்
முஹம்மது.
கோட்டை முழுவதும்
உஸ்மானிய வீரர்களால் நிரம்பியது.
சில இடங்களில் கோட்டை சுவர் தகர்க்கப்பட்டது.
சிறு சிறு சண்டைகளாக நடந்து
முழு வீரர்களும் சரணடைந்தனர்.
எல்லோரும் கைப்பற்ற வேண்டும் என்று கனவு கண்ட
காண்ஸ்டாண்டி
நோபிள் என்ற துருக்கியின் தலைநகரான இஸ்தான்ஃபுல் நகரம்
உஸ்மானியர்களால்
கைப்பற்றப்பட்டது.
அதற்கு பிறகு நீண்ட கால உஸ்மானிய பேரரசின் தலைநகராக உலக வரலாற்றை மாற்றி எழுதிய அந்த நகரம் விழாக்கோலம் பூண்டது.
மன்னர் முஹம்மது அல் பாதில் என்ற வெற்றி பெயரோடு
துருக்கியின் அந்த அழகிய அரண்மணைக்குள்
நுழைந்தார்.
மன்னர் முஹம்மது ஆச்சரியத்தால் அப்படியே அசையாமல் நின்றுவிட்டார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்..
வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது.
இதற்கிடையே, வரும் 2024 – 25ம் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை மாற்ற உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,க்கும் தகவல் அனுப்பியுள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்; மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாறுதலும் இல்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியலூர், திருச்சி, வேலூர், திருண்ணாமலை, விழுப்புரம் என 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை வரும் ஏப்.1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்.1ம் தேதி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
இந்தநிலையில், போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி சுங்கச்சாவடி, திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் சுங்கச்சாவடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனம்கரியாந்தல் சுங்கச்சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை வரும் ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயர்கிறது. இதுமட்டுமல்லாது, மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட உள்ளன. ஏற்கனவே, நெடுஞ்சாலைகளின் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஐந்து சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று முதல் சில ரெயில்கள் ரத்து!சில ரெயில்கள் மாற்று பாதையில் செல்லும்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு..
by Askar
written by Askar
நாகர்கோவில் – கன்னியாகுமரி ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுவதாகவும், சில ரெயில்கள் மாற்று இடத்தில் இருந்தும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16321), மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) இன்று (ஞாயிற்றுகிழமை) முதல் 27-ந்தேதி வரையில் ரத்துசெய்யப்படுகிறது.
இதேபோல, நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) வரும் 28-ந்தேதி நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியளவு ரத்துசெய்யப்பட்டு, அதற்கு மாற்றாக நெல்லையிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும். மேலும், கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) வரும் 25-ந்தேதி (நாளை) முதல் 28-ந்தேதி வரை கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரெயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும். மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரெயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (23.03.2024 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளர் கே.தனபாலன், செயலாளராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் கே கே. குமார், பொருளாளராக சத்தியம் டிவி செய்தியாளர் பி. மகேஸ்வரன், கௌரவ தலைவராக தினமலர் நாளிதழ் உதவி ஆசிரியர் பழனிச்சாமி, துணைத் தலைவராக வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் ஜி இளங்கோவன் ,இணைச்செயலாளராக தினபூமி நாளிதழ் செய்தியாளர் ஆர் . ரமேஷ், பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்ஏ . பிரபு ராவ், நிர்வாக குழு உறுப்பினர்களாக ராஜ் டிவி பாகற் செழியன், நமது அம்மா பாலமுருகன்,நியூஸ் 18 டிவி செய்தியாளர் வீரக்குமரன் , தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் சோனை முத்தன், மாலை முரசு டிவி செய்தியாளர் கண்ணன் பாபு ஆகியோர்களை ஏகமனதாக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோரே நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றனர். தேர்வாகியுள்ள சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.