Home செய்திகள் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா.

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா.

by mohan

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 400 மீட்டர் தடகளம், கால்பந்து, கோகோ, சிறப்பு கைப்பந்து பயிற்சி, கிரிக்கெட் வலைப்பயிற்சி ஆகிய விளையாட்டு மைதானங்கள் குறித்த தனது சிறப்புரையில் தென்காசி மாவட்டத்திலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க இந்த மைதானம் உதவும் என குறிப்பிட்டார். வேலவன் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் தலைமை வகித்தார். விளையாட்டுத் துறை இயக்குனர் மோகன கண்ணன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் ஜெயா, பரமார்த்தலிங்கம், மனோரஞ்சிதம், பிரேம் சந்தர், சக்தி, ராபின்சன், செல்வகணபதி, சுந்தர், மதியழகன், தேசிய மாணவர் படை விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!