Home செய்திகள் திருமங்கலம் நகராட்சி அரசு பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

திருமங்கலம் நகராட்சி அரசு பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

by mohan

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களை கணக்கெடுத்து அவர்களை கல்வியில் சிறந்த மாணவர்களாக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தமிழக அரசு சார்பில் செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வாகனம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி அரசு பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இவ்விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் செலவில் 30 மூன்றுசக்கர சைக்கிள் வாகனங்கள் மற்றும் செவித்திறன், உடல் திறன் உபகரணங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் பங்கேற்று வழங்கினர். மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் உட்பட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் சிலர் பங்கேற்று உதவிக்கரம் நீட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!