நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கடந்த 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்தது. இதில் ஒரு மாநகராட்சி, 3நகராட்சிகள், 9பேரூராட்சிகள் என 322மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மாமன்ற உறுப்பினர்களாக அந்தந்த ஆணையாளர் முன்பாக பதவியேற்றுக்கொண்டனர்.இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் 100வார்டுகளில் திமுக சார்பில் 67 மாமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் சார்பில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4பேரும், மதிமுக சார்பில் 3 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவர் என திமுக கூட்டணி சார்பில் 80 மாமன்ற உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 15மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சார்பில் ஒருவரும், சுயேட்சை உறுப்பினர்கள் 4பேர் என 100மாமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் 55வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் விஜயா குரு தவிர்த்து 99 மாமன்ற உறுப்பினர்களுக்கும் வரிசைப்படி மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு உறுதிமொழியுடன் பதவியேற்றுக்கொண்ட பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு பதவியேற்றுக்கொண்டனர்.இதனையடுத்து நாளை மறுநாள் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் காலை 9மணிக்கும், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2.30மணிக்கும் நடைபெறவுள்ளது. அப்போது மாமன்ற கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் செல்லும், பேனா போன்றவை எடுத்துவர் அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.