திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அல்லியந்தல் ஊராட்சியில் பரதநாட்டிய சலங்கை பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை பிஆர்.ஏஞ்சல்ஸ் டான்ஸ் அகாடமி மூலம் பயிற்சி பெற்ற பள்ளி அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் புவனேஸ்வரி மகள் மோகனப்பிரியா தவசெல்வன், அமுதா மகள் ஹேமலதா வெங்கடேசன், தேவி மகள் ஜினிஷா ராஜேஷ், சிவசக்தி மகள் திவ்யதர்ஷினி லூகாஸ், செல்வி மகள் பிரிதிஷா , ஆகிய ஆறு பெண்பிள்ளைகளுக்கு அரங்கேற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை பயிற்சியாளர் சலங்கை பூஜை எம்எஸ் தர்மினி அம்மாள் அவர்களால் நடைபெற்றது. பின்னர் அரங்கேற்றம் சலங்கை பூச்சிகள் கலந்து கொண்ட மாணவிகள் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை அசத்தினர் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் பொம்மி முருகன், ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி துணைத்தலைவர் ஆரோக்கிய மேரி வேலு , வார்டு உறுப்பினர்கள் ஹரிகிருஷ்ணன் மணிவண்ணன் டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், திரளாக கலந்து கொண்டனர். சலங்கை பூஜையில் பங்கேற்ற ஆறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது
45
You must be logged in to post a comment.