தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சியின் முதல் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்படாத நிலையில், சுரண்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் பணிக் குழுத் தலைவர் தபேந்திரன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் தெய்வேந்திரன், சங்கர், அரவிந்த், பால் என்ற சண்முகவேல், சுந்தரராஜ், காந்திராஜ், சௌந்தரராஜ், ராஜேந்திரன், பால்கனி, சமுத்திரம், சமுத்திரம், டிபிஎம் செல்வன், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுரண்டை நகராட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே மாநில தலைமை அறிவித்தபடி பலகட்ட பேச்சுவார்த்தை திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெற்ற போதிலும் வார்டுகளில் போட்டியிடுவது தொடர்பாக உரிய முடிவு எடுக்காத காரணத்தினால் தேர்தல் பொறுப்புகுழு எடுத்த முடிவின்படி சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து அனைத்து வார்டுகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. நகராட்சியின் இருபத்தி ஏழு வார்டுகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் வெற்றிக்கும் அனைவரும் பாடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள்,வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.