Home செய்திகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பத்திரமாக உறவினரிடம் ஒப்படைத்த 108 ஓட்டுனர்

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பத்திரமாக உறவினரிடம் ஒப்படைத்த 108 ஓட்டுனர்

by mohan

மதுரை மாவட்டம் விரகனூர் பாலத்தில் ஒருவர் கீழே விழுந்து இருப்பதாக 108 அவசரகால உறுதிக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் ஹரி விக்னேஸ்வர் மற்றும் இ எம் டி தேன்மொழி ஆகியோர் அவரை பரிசோதனை போது காயத்துடன் இருப்பதை அறிந்து உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர் .பின் யார் என தெரிவதற்காக அவரை சோதித்த பொழுது அப்பொழுது அவரிடம் சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் விலை உயர்ந்த செல்போனும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பொழுது அவருடைய முகவரி கிடைக்கப்பெற்றது .அவர் மதுரை மாவட்டம் காமராஜர் சாலையை சேர்ந்த முருகானந்தம் வயது 58 என்பதும் இவர் காமராஜர் சாலையில் இருந்து பாண்டி கோவிலுக்கு அதிகாலையில் சென்று சென்று கொண்டு இருந்த பொழுது விரகனூர் பாலம் அருகே பாலத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தெரியவந்தது. இது குறித்து அவர் மகன் தினேஷிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தார் .அரசு மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னணியில் இவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட விலை உயர்ந்து செல்போன் ஆகியவை ஹரிவிக்னேஸ்வர் மற்றும் இ எம் டி தேன்மொழி பத்திரமாக இவர்கள் ஒப்படைத்தனர். அவர்கள் குடும்பத்தினரும் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினர் ஆகியோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.

..செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!