39
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தெருவில், புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவரின் இல்லத்திற்கு , மதுரை ஆட்சியர் சங்கீதா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அனிஷா முகமது உமர் ரஃபிக் என்பவர் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர் சாந்தி , தாசில்தார் மனேஷ் குமார் ஆகியோர் திடீரென அவரது இல்லத்திற்கு சென்று புதிய வாக்காளர் சேர்க்கைக்கான ஆவணங்களை சரிபார்த்துஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.