15
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை அலங்காநல்லூர் இருந்து மதுரை செல்லும் சாலை. கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக போடப்பட்டது. ஒரு வருடம் முன்பாக இந்த சாலை பெயர்ந்து விட்டது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகமாக ஆபத்துக்கு விழுந்து ஆபத்து உள்ளாகின்றனர். ஆகவே, தற்போது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் சீர்செய்து பேட்ச் ஒர்க் என்று சொல்லக்கூடிய சின்ன சின்ன பள்ளங்களை மூடி வருகின்றனர். ஆனால் ,ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இடத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் மூடவில்லையாம். ஆகவே, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து விபத்துகள் நடைபெறாமல் இருக்க சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.