Home செய்திகள் காட்பாடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

காட்பாடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், ரயில் நிலைய பகுதி ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது.காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி கலந்துகொண்டு வாகன சட்டதிட்டங்களை விளக்கி பேசி அறிவுரை வழங்கினார். ஆட்டோ டிரைவர். பயணிகளிடம் நடந்துகொள்ளும் முறை, அரசு நிர்ணையம் செய்த கட்டணத்தை பயணிகளிடம்வசூல் செய்ய வேண்டும். சீருடை அணிய வேண்டும், அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. கூடுதல் கட்டணம் கேட்டு பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது, ஓட்டுநர்கள் கட்டாயம் பேட்ஜ் அணிய வேண்டும், மீறிய செயல்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.ஆட்டோ ஓட்டுநர்களின் கேள்விக்கு பதில்அளித்தார் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி.அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்க கொளரவத் தலைவர் சுனில்குமார், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், காவல் நிலைய எழுத்தர் தெய்வசிகாமணி, மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விழிப்புணர்வு நிகழச்சியில் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!