Home செய்திகள் மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை.

மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை.

by mohan

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் – மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையில், மேலும் கணவர் சிவகுமார் ஓய்வுபெற்ற ரயில்வே சிக்னல் ஆபரேட்டராக உள்ளார். திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையிலும் இருவருக்கும் குழந்தைகள் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர் தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளனர். இந்தநிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் மேரி குட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்… இதேபோன்று மற்றொரு கொலை சம்பவம். மதுரையில் மெஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலைமதுரை கோ புதூரில் .ஐ.டி.ஐ.க்கு எதிராக மெஸ் நடத்தி வந்தவர் மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!