மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய் உள்ளது. இதன் மூலம் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பயன் பெறுகின்றன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதிக நீர்வரத்து வந்தது இதனைத்தொடர்ந்து அருகில் குடியிருப்புகள் நீர் சூழ்ந்ததால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் நீர் ஆதாரங்களில் உள்ள தடைகளை நீக்கி நீர் செல்ல வழி ஏற்படுத்தினர்.நேற்றுமுதல் கண்மாயில் இருந்து வெளியேறும் நீர் மாசடைந்து கழிவு நீர் கலப்பதால் பாசனத்திற்கு செல்லும் வழிகளில் நுரை ததும்பி துர்நாற்றம் வீசி காணப்படுகிறது.இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அயன்பாப்பாகுடி கணமாயில் கலக்கும் கழிவு நீரை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.