கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ கீழக்கரையில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக பரவிவரும் சூழலில் அதை தொடர்ந்து அதை விட போதை தரக்கூடிய மெத்தம்பெடமைன் எனும் வேதிப்பெயருடைய (கிரிஸ்டல் மெத்)எனும் போதைப்பொருள் அயல்நாட்டில் தடை செய்யபட்ட ஒன்று தற்சமயம் கீழக்கரையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனையாக உள்ளது.
கஞ்சா, கிரிஸ்டல் மெத், மது, சில நேரம் கிடைக்காத காரணத்தால் சுலபமாக மருத்துகடைகளில் கிடைக்க கூடிய தூக்கம்வர கூடிய டானிக், மாத்திரை,போன்ற பொருட்கள் போதைக்கு எடுத்துகொள்கிறார்கள். பெற்றோர்கள் இதை கண்காணித்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.
போதைப்பொருள்ஆ தடுப்பு ஒரு தொடர் நடவடிக்கை..
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதை தடுப்பு சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி, வீடுகளில் கண்காணிப்பு சீராக இருந்தால் போதைப்பொருள் கொடுமையிலிருந்து இளைஞர்களை காப்பாற்றலாம். பெற்றோருக்கும், கல்வி நிர்வாகத்திற்கும் போதைப்பழக்கத்தை கண்காணிப்பதில் பொறுப்பு இருக்கிறது. நல்லது நடப்பது கடினம், கெட்டது கச்சிதமாக பரவும் என்பதை பல நிகழ்வுகளில் காணலாம். கெடுதலை தடுத்தலே முதல்கட்ட நிவாரணம்.
இந்தப் போதைப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் அவர் உடலளவிலும், மனதளவிலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கபடுவார். இது வரை கீழக்கரையில் மட்டும் மனநலம் பாதிக்கபட்டு குணமடையாமல் பல நபர்கள் இருகிறார்கள்.. பெற்றோர்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு இல்லை பிள்ளைகளை கண்காணிங்கள் உங்கள் பிள்ளைகளை நீங்கள் தான் பாதுகாக்கவேண்டும்.
வெளியூர் கல்லூரிகளில் பயிலும் ஒரு சில மாணவர்கள் இதனை கீழக்கரைக்கு அறிமுகபடுத்துகிறார்கள் என்பது குறிப்பிட்டதக்கது. சிலர் பல இளைஞர்களை வழிகெடுகிறார்கள். இவர்களை காவல்துறை கண்டறிந்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கீழக்கரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுகொள்கிறோம், தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.