10
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், பிரசவ வார்டு, குழந்தைகள் நலம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்பட பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதில் பிரசவ வார்டில் இன்று மாலை 4 மணியில் இருந்து மின்வெட்டு நீடித்தது. இருள் சூழ்ந்த வார்டில் கர்ப்பிணிகள் உதவிக்கு வந்த பெண்கள் அச்சமமடைந்தனர்.
இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கு உதவி வந்தவர்கள் இன்று (06/11/2020) இரவு 7:45 மணியளவில் சாலை மறியலுக்கு முயன்றனர். ராமநாதபுரம்- மதுரையில் திரண்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து கர்ப்பிணிகள் நிம்மதி அடைந்தனர்.
You must be logged in to post a comment.