தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு பி. கே .முரளி அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய நழிவுற்ற பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம்வா’ என்ற அறிவுரை படியும் ரம்ஜான் நோம்பு பண்டிகையை முன்னிட்டு பிரியாணிக்கு சாப்பாட்டிற்கு தேவையான 15வகையான மளிகை பொருட்களை பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சூடப்பட்டி சுப்பிரமணி மாவட்ட துணை செயலாளர், முருகன், வழக்கறிஞர் பிரிவு, பட்டு அஜிஸ்வுல்லா, அமிர்ஜான், ஆசிப், பாபு(எ)முத்துஜா, அமன்,ராஜி,விஜயன்,பெரியசாமி, மாலிக்புரான், பத்தேகான், அன்வர், மோகன், செந்தில், சின்னசாமி, ஆறுமுகம், ரகிம், குஷ்காமியான், முயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7
You must be logged in to post a comment.