கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும். இந்தநிலையில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு, தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டங்களை கடந்து செல்லும் பாஸ் அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் இன்று முதல் வழங்கப்படுகிறது.
இது குறித்து கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில், ”ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல நகரங்களுக்கு சொந்த வேலை காரணமாகவும் சென்றவர்களும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்தவர்களும், கொரானாவுக்காக போடப்பட்ட திடீர் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல், வேறு வழியின்றி சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்து சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பலர், முறையாக அரசிடம் விண்ணப்பித்து பாஸ் வாங்காமல் சொந்த ஊருக்கு குருட்டு தைரியத்தில் குடும்பம் பிள்ளை குட்டிகளுடன் பயணிப்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகின்றது.
You must be logged in to post a comment.