இராமநாதபுரத்தில் சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவ சங்கம் ராமநாதபுரம் கிளை, ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்க ராமநாதபுரம் கிளை தலைவர் டி.அரவிந்த் ராஜ், கவுரவச் செயலர் டி.ஆனந்த சொக்கலிங்கம், நிதி செயலர் எஸ்.பி. ஆக்னலோ தெரசா ஜோஸ்பின், ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் சின்னதுரை அப்துல்லா,ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். நாகராஜன், செயலாளர் மார்னிங் ஸ்டார் கே. செந்தில்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.கே.ஜவகர்லால், டாக்டர் மலையரசு, செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பார்த்திபன், டாக்டர்கள் மதுரம் அரவிந்த்ராஜ், மனோகரன், இந்திய மருத்துவ சங்க பரமக்குடி கிளை தலைவர் பாலச்சந்திரன் செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரண்மனை வாசல் முன் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் பள்ளி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, பயோனீர் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், அரசு மருத்துவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.